Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»நகை திருட்டு, தீண்டாமை வழக்குகளில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய கோர்ட் உத்தரவு
    மாநிலம்

    நகை திருட்டு, தீண்டாமை வழக்குகளில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய கோர்ட் உத்தரவு

    adminBy adminJuly 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நகை திருட்டு, தீண்டாமை வழக்குகளில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய கோர்ட் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: நகை திருட்​டு, தீண்​டாமை வன்​கொடுமை மற்​றும் ரியல் எஸ்​டேட் வழக்​கு​களில் உரிய விசா​ரணை நடத்தி நடவடிக்கை எடுக்​காத போலீஸ் அதி​காரி​களை இடைநீக்​கம் செய்​ய​வும், துறை ரீதி​யாக நடவடிக்கை எடுக்​க​வும் தமிழக டிஜிபிக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

    சென்னை சூளைமேடு பகு​தி​யைச் சேர்ந்த ஜரினா பேகம் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், “92 பவுன் நகை காணாமல் போனது தொடர்பாக கடந்த 2018 செப்.4-ல் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்​பாக சூளைமேடு போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தும் கடந்த 7 ஆண்​டு​களாக நகைகளை மீட்க எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை.

    சிபிசிஐடி போலீ​ஸாரின் விசா​ரணைக்கு மாற்றி உத்​தர​விட வேண்​டும்” எனக் கோரி​யிருந்​தார். இந்த வழக்கு நீதிபதி பி.வேல்​முரு​கன் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது கடந்த 2018 முதல் தற்​போது வரை சூளைமேடு காவல் நிலை​யத்​தில் ஆய்​வாளர்​களாக பணி​யாற்​றிய அனை​வரும் உயர் நீதி​மன்​றத்​தில் ஆஜராகினர்.

    அதையடுத்து நீதிப​தி, “இது​போன்ற குற்ற வழக்​கு​களில் எப்​படி விரை​வாக துப்பு துலக்​கு​வது என்​பது குறித்த பயிற்​சியை தமிழக அரசு காவல் துறை​யினருக்கு வழங்க வேண்​டும். இந்த வழக்​கில் கடமையை செய்​யத் தவறிய அதி​காரி​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்​தரவு பிறப்​பிக்க நேரிடும்” என எச்​சரித்​தார்.

    பின்​னர் சூளைமேடு காவல் நிலை​யத்​தில் நீண்​ட​காலம் ஆய்​வாள​ராக பணி​யாற்றி தற்​போது ரயில்வே போலீஸ் உதவி ஆணை​ய​ராக உள்ள கர்​ணன் என்​பவரை பணி​யிடை நீக்​கம் செய்​ய​வும், கடந்த 2018 முதல் தற்​போது வரை சூளைமேட்​டில் பணி​யாற்றி வரும் காவல் ஆய்​வாளர்​கள் மீது துறை ரீதி​யாக நடவடிக்கை எடுக்​க​வும் டிஜிபிக்கு உத்​தர​விட்​டுள்​ளார்.

    இதே​போல கடந்த 2018-ம் ஆண்டு சேலம் மாவட்​டம் வீராணம் காவல் நிலை​யத்​துக்கு உட்​பட்ட பகு​தி​யில் தவணை முறை​யில் வீட்​டுமனை வழங்​கு​வ​தாகக் கூறி மோசடி​யில் ஈடு​பட்​ட​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்​காத வழக்​கில் சம்​பந்​தப்​பட்ட வீராணம் காவல் ஆய்​வாளர்​களும் ஆஜராகி​யிருந்​தனர். அவர்​கள் மீதும் துறை ரீதி​யாக நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு நீதிபதி பி.வேல்​முரு​கன் உத்​தர​விட்​டுள்​ளார்.

    இதே​போல விழுப்​புரம் மாவட்​டம் வானூர் பகு​தி​யில் நிலம் தொடர்​பாக பட்​டியலின சமூகத்​தைச் சேர்ந்த செந்​தாமரை என்​பவருக்​கும், மாற்று சமூகத்​தைச் சேர்ந்த வீரா​சாமி என்​பவருக்​கும் இடையி​லான பிரச்​சினை​யில், தீண்​டாமை வன்​கொடுமை வழக்​குப் பதி​யாமல் ஒருதலைபட்​ச​மாக செயல்​பட்ட கோட்​டக்​குப்​பம் டிஎஸ்​பியாக பணிபுரிந்த, தற்​போது தேனி மாவட்​டம் போடி டிஎஸ்​பி​யாக உள்ள சுனிலை இடைநீக்​கம் செய்​ய​வும்​ டிஜிபிக்​கு நீதிப​தி உத்​தர​விட்​டார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மதுரையில் ஆகஸ்ட் 25-ல் தவெக 2-வது மாநில மாநாடு: 500 ஏக்கரில் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் தீவிரம்

    July 17, 2025
    மாநிலம்

    ஊரக உள்ளாட்சி பகுதிகளில் கட்டிடங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டால் சீல் வைக்க ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்

    July 17, 2025
    மாநிலம்

    மருத்துவ கழிவுகளை கொட்டினால் குண்டாஸ்: அமலுக்கு வந்தது சட்டம்

    July 17, 2025
    மாநிலம்

    ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்!

    July 17, 2025
    மாநிலம்

    “விமர்சனம் என்ற பெயரில் எங்களுக்கு விளம்பரம் செய்யும் பழனிசாமிக்கு நன்றி!” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

    July 17, 2025
    மாநிலம்

    சென்னை | விநாயகர் கோயில் இடிப்பை கண்டித்து போராட்டம்: இந்து முன்னணியினர் கைது

    July 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மதுரையில் ஆகஸ்ட் 25-ல் தவெக 2-வது மாநில மாநாடு: 500 ஏக்கரில் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் தீவிரம்
    • 30 களில் இதய சிக்கலின் 5 அமைதியான அறிகுறிகள்
    • ஊரக உள்ளாட்சி பகுதிகளில் கட்டிடங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டால் சீல் வைக்க ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்
    • ஒரு நாளில் நீங்கள் எத்தனை முறை செல்ல வேண்டும்? பதில் உங்களை ஆச்சரியப்படுத்தக்கூடும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மருத்துவ கழிவுகளை கொட்டினால் குண்டாஸ்: அமலுக்கு வந்தது சட்டம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.