Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»கேரளாவில் 2 என்சிபி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய வேண்டும்: அஜித் பவார் தரப்பு கடிதம்
    தேசியம்

    கேரளாவில் 2 என்சிபி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய வேண்டும்: அஜித் பவார் தரப்பு கடிதம்

    adminBy adminJuly 15, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கேரளாவில் 2 என்சிபி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய வேண்டும்: அஜித் பவார் தரப்பு கடிதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரண்டு எம்எல்ஏ-க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யுமாறு அஜித் பவார் தலைமையிலான என்சிபி-யின் தேசிய செயல் தலைவர் பிரபுல் படேல் கடிதம் அனுப்பியுள்ளார்.

    கேரள மாநில வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் மற்றும் கேரள மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் தாமஸ் கே.தாமஸ் ஆகிய இரண்டு என்சிபி எம்எல்ஏக்கள் தற்போது சரத் பவார் தலைமையிலான கட்சியில் செயல்பட்டு வருகின்றனர். இந்தக் கட்சி இப்போது கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணியில் அங்கம் வகித்து வருகிறது.

    இந்த நிலையில், அஜித் பவார் தலைமையிலான என்சிபியின் தேசிய செயல் தலைவர் பிரபுல் படேல், தாமஸுக்கு எழுதிய கடிதத்தில், கேரளாவில் உள்ள 2 எம்எல்ஏ-க்கள் தங்கள் என்சிபி கட்சியின் ‘கடிகாரம்’ சின்னத்தில் போட்டியிட்டு 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், இப்போது கட்சிக்கு எதிராக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதனால், தாமஸ் கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் ஒரு வாரத்திற்குள் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் விதிகளைப் பயன்படுத்தி அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்ற கடிதம் வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரனுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தாமஸ், “கேரள மாநில என்சிபி சரத் பவாரையே ஆரம்பத்தில் இருந்து தலைவராக கொண்டு செயல்பட்டு வருகிறது. பிரபுல் படேலின் கட்சியுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. எனவே அந்தக் கடிதத்தை நாங்கள் பொருட்படுத்தவில்லை” என்று கூறினார்.

    இந்தக் கடிதத்துக்கு பதிலளித்த கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன், “படேலின் கடிதம் குறித்து எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் கட்சியின் விதிகளின்படியே செயல்படுகிறோம். கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது என்பது சட்டமன்ற சபாநாயகரால் முடிவு செய்யப்பட வேண்டிய விஷயம்” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    1,198 நாட்கள் போராடிய விவசாயிகளிடம் பணிந்த அரசு – கர்நாடகாவில் 1,777 ஏக்கர் நிலம் எடுப்பு கைவிடல்!

    July 16, 2025
    தேசியம்

    தெரு நாய்களை வீட்டுக்கு அழைத்துச் சென்று ஏன் உணவு அளிக்கக் கூடாது? – உச்ச நீதிமன்றம் கேள்வி

    July 16, 2025
    தேசியம்

    ‘பாம்புகள் எங்களின் நண்பர்கள்’ – கர்நாடகாவில் 2 மகள்களுடன் 8 ஆண்டுகள் குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண் தகவல்!

    July 16, 2025
    தேசியம்

    சமூக வலைதளங்களில் தீவிரவாத சித்தாந்தத்தை பரப்புவோர் மீதும் யுஏபிஏ பாயும்: டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி

    July 16, 2025
    தேசியம்

    ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் ஜெகன் கட்சி எம்.பி. மனு தள்ளுபடி

    July 16, 2025
    தேசியம்

    பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: 35 லட்சம் பெயர்களை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை

    July 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 1,198 நாட்கள் போராடிய விவசாயிகளிடம் பணிந்த அரசு – கர்நாடகாவில் 1,777 ஏக்கர் நிலம் எடுப்பு கைவிடல்!
    • வேதியியல் தொடர்பான பொறியியல் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 – 13
    • மதுரையில் ஆகஸ்ட்.25-ல் தவெக 2-வது மாநில மாநாடு: விஜய் அறிவிப்பு
    • கல்லீரல் ஆரோக்கியம்: கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மெக்னீசியம் ஏன் முக்கியமானது என்பதை சிறந்த காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் விளக்குகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தெரு நாய்களை வீட்டுக்கு அழைத்துச் சென்று ஏன் உணவு அளிக்கக் கூடாது? – உச்ச நீதிமன்றம் கேள்வி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.