புதுடெல்லி: ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 74 ஆயிரம் ரயில் பெட்டிகள், 15 ஆயிரம் இன்ஜின்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
ரயில்கள் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றாலும், குறைந்த ஒளி வசதி இருந்தாலும், இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் மிகவும் தெளிவுடன் இருக்கும்.
அண்மையில் பானிப்பட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டியில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவை ரயில்வே எடுத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.