Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு: ஜூலை 21-ல் ஆன்லைனில் தொடக்கம்
    கல்வி

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு: ஜூலை 21-ல் ஆன்லைனில் தொடக்கம்

    adminBy adminJuly 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு: ஜூலை 21-ல் ஆன்லைனில் தொடக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்​கான அகில இந்​திய கலந்​தாய்வு ஜூலை 21-ம் தேதி ஆன்​லைனில் தொடங்​கு​கிறது.

    எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்கு 2025-26-ம் கல்வி ஆண்​டில் மாணவர் சேர்க்​கைக்​கான கலந்​தாய்வு ஆன்​லைனில் வரும் 21-ம் தேதி தொடங்​கு​கிறது.

    இதுகுறித்து மருத்​துவ கலந்​தாய்வு குழு வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்​கான முதல் சுற்று கலந்​தாய்வு என்ற இணை​யதளத்​தில் ஜூலை 21-ம் தேதி தொடங்​கு​கிறது.

    நீட் தேர்​வில் தகுதி பெற்ற மாணவ, மாணவி​கள் இந்த இணை​யதளத்​தில் வரும் 21-ம் தேதி முதல் 28-ம் தேதி நண்​பகல் 12 மணிக்​குள் பதிவு செய்யவேண்​டும். 28-ம் தேதி பிற்​பகல் 3 மணி வரை கட்​ட​ணம் செலுத்தலாம். 22-ம் தேதி முதல் 28-ம் தேதி நள்​ளிரவு 11.55 மணி வரை இடங்​களை தேர்வு செய்​ய​லாம்.

    தரவரிசை பட்​டியல் அடிப்​படை​யில் 29, 30-ம் தேதி​களில் கல்​லூரி​களில் இடங்​கள் ஒதுக்​கப்​படும். அதன் விவரங்​கள் 31-ம் தேதி வெளி​யிடப்​படும். டஒதுக்​கீடு பெற்ற கல்​லூரி​களில் ஆகஸ்ட் 1 முதல் 6-ம் தேதிக்​குள் சேர வேண்​டும். சான்​றிதழ் சரி​பார்ப்பு பணி​கள் ஆகஸ்ட் 7, 8-ம் தேதி​களில் நடை​பெறும்.

    2-ம் சுற்று கலந்​தாய்வு ஆகஸ்ட் 12-ம் தேதி​யும், 3-ம் சுற்று கலந்​தாய்வு செப்​டம்​பர் 3-ம் தேதி​யும் தொடங்​கும். 3 சுற்று கலந்​தாய்வு முடி​வில் காலி​யாக உள்ள இடங்​களை நிரப்​புவதற்​கான கலந்​தாய்வு செப்​டம்​பர் 22-ம் தேதி தொடங்​கும்.

    புனே ராணுவ கல்​லூரி​யில் உள்ள பிஎஸ்சி நர்​சிங் படிப்​புக்கு நீட் தேர்வு மதிப்​பெண் அடிப்​படை​யில் மாணவர் சேர்க்கை நடை​பெறு​வ​தால், அந்த இடங்​களுக்​கும் மேற்​கண்ட தேதி​களில் கலந்​தாய்வு நடை​பெறும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

    மாநில கலந்தாய்வு: தமிழகத்​தில் உள்ள அரசு மருத்​துவ கல்​லூரி​களில் இருக்​கும் எம்​பிபிஎஸ், பிடிஎஸ் இடங்​களில் 15 சதவீதம் அகில இந்​திய ஒதுக்​கீட்​டுக்கு ஒதுக்​கப்​படு​கிறது. மீத​முள்ள 85 சதவீத இடங்​கள், தனி​யார் மருத்​துவ கல்​லூரி​களில் உள்ள அரசு மற்​றும் நிர்​வாக ஒதுக்​கீட்டு இடங்​களுக்​கான மாணவர் சேர்க்கை கலந்​தாய்வு இந்த மாதம் இறு​தி​யில் தொடங்​க​வுள்ளது.

    மொத்​த​முள்ள 11,350 மருத்​துவ இடங்​களுக்கு நீட் தேர்​வில் தேர்ச்சி பெற்ற 62 ஆயிரத்​துக்​கும் மேற்பட்ட மாணவர்கள் விண்​ணப்பித்​துள்​ளனர். விண்​ணப்​ப​தா​ரர்களின் நீட் மதிப்​பெண்களை மத்திய அரசிடமிருந்து பெற்று அதன் அடிப்​படை​யில் தரவரிசை பட்​டியல் தயாரிக்​கப்​படு​கிறது. விரைவில் தரவரிசை பட்​டியல் வெளி​யிடப்​பட​வுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    நவம்பரில் நடைபெற உள்ள பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுக்கு கட்டணம் செலுத்த அவகாசம்

    September 17, 2025
    கல்வி

    ‘ஷிஃப்ட்’ முறையில் கல்லூரி… மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?

    September 17, 2025
    கல்வி

    வேலைவாய்ப்பு வழங்கும் கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 – 21

    September 17, 2025
    கல்வி

    தமிழகத்தில் கூடுதலாக 350 எம்பிபிஎஸ் இடங்கள்: தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி

    September 17, 2025
    கல்வி

    தகுதி வாய்ந்த ஆசிரியர்களை அரசு பாதுகாக்கும்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

    September 16, 2025
    கல்வி

    தேசிய திறந்தநிலை பள்ளி மாணவர்கள் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் பங்கேற்க முடியுமா? – கல்வி வாரியம் விளக்கம்

    September 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘நாங்கள் தொலைந்துவிட்டோம்’: இந்திய மூல தொழிலதிபர் பரம்ஜித் சிங், 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார், பனியால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்; குற்றம் கடந்த காலத்தில் பணம் செலுத்தாமல் சம்பள தொலைபேசியைப் பயன்படுத்துகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டெல்லி பிஎம்டபிள்யூ கார் விபத்து: கைதான பெண்ணுக்கு செப். 27 வரை நீதிமன்றக் காவல்
    • ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய மாதம்பட்டி ரங்கராஜ்!
    • டைனோசர்களை விட பழையது: இந்த 66 மில்லியன் ஆண்டுகள் பழமையான மோனோலிதிக் பாறை மும்பையின் மையத்தில் உள்ளது, மேலும் மக்களுக்கு தெரியாது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘அரை-மூன்’: வானியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பூமியின் புதிய அண்ட தோழர் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.