Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை? -ஐகோர்ட் கேள்வி
    மாநிலம்

    பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை? -ஐகோர்ட் கேள்வி

    adminBy adminJuly 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை? -ஐகோர்ட் கேள்வி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு, நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டி.ஜி.பி. மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராஜராஜ சோழன் என்பவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை அமல்படுத்த, நீலாங்கரை போலீசாருக்கு உத்தரவிடக் கோரி ஜமுனா சிவலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை காவல் துறையினர், இதுநாள் வரை செயல்படுத்தாமல் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

    இதேபோல பல வழக்குகள், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலைலேயே உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, மாஜிஸ்திரேட் மற்றும் அமர்வு நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் பிடிவாரண்ட்கள் அடிப்படையில், குறித்த காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடித்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், வாரண்டை செயல்படுத்தாதது குறித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து, புதிதாக வாரண்ட் பிறப்பிக்க கோர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    இதை விடுத்து, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வாரண்ட்களை நிலுவையில் வைத்திருக்க காவல் துறையினருக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்த நீதிபதி, தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன என்பது குறித்து ஜூலை 23ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டி.ஜி.பி.க்கும், சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

    அதேபோல, தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளன என்பது குறித்து ஜூலை 23 ம் தேதி அறிக்கை சமர்பிக்கும்படி, சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 24-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திருப்பரங்குன்றம் மலை வழக்கில் 3-வது நீதிபதி விசாரணை

    July 15, 2025
    மாநிலம்

    தமிழகம் முழுவதும் 33 போலீஸ் அதிகாரிகள் மாற்றம்

    July 15, 2025
    மாநிலம்

    அரசியலில் அப்பா – மகன் உறவு மிக முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கருத்து

    July 15, 2025
    மாநிலம்

    ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் மனு கொடுக்கப்பட்ட 45 நாட்களுக்குள் தீர்வு: வருவாய் துறை செயலர் தகவல்

    July 15, 2025
    மாநிலம்

    தகுதி, திறமையை வளர்த்துக் கொண்டால் பதவிகள் தானாக வரும்: அண்ணாமலை

    July 15, 2025
    மாநிலம்

    படிப்பை தொடர வசதியின்றி தற்கொலை முயற்சி – மாணவிக்கு கல்வி உதவி வழங்கிய காவலர்களுக்கு பாராட்டு

    July 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இது இதய செயலிழப்பாக இருக்க முடியுமா? நீங்கள் புறக்கணிக்கக் கூடாத 7 அமைதியான அறிகுறிகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஒடிசாவில் காதல் திருமணம் செய்த ஜோடியை ஏரில் பூட்டி உழ வைத்த கொடூரம்
    • பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்: இறுதி சடங்குகள் இன்று நடைபெறுகிறது
    • திருப்பரங்குன்றம் மலை வழக்கில் 3-வது நீதிபதி விசாரணை
    • தமிழகம் முழுவதும் 33 போலீஸ் அதிகாரிகள் மாற்றம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.