Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»உ.பி.யில் திருமண இணையதளம் மூலமாக 25 பெண்களை ஏமாற்றிய போலி ராணுவ அதிகாரி கைது
    தேசியம்

    உ.பி.யில் திருமண இணையதளம் மூலமாக 25 பெண்களை ஏமாற்றிய போலி ராணுவ அதிகாரி கைது

    adminBy adminJuly 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உ.பி.யில் திருமண இணையதளம் மூலமாக 25 பெண்களை ஏமாற்றிய போலி ராணுவ அதிகாரி கைது
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: திருமண இணைய தளம் மூலமாக, 25 பெண்களை ஏமாற்றி ரூ.40 லட்சம் பணம் பறித்த போலி ராணுவ அதிகாரி உத்தரப் பிரதேசத்தில் கைதாகி உள்ளார். தெலங்கானாவைச் சேர்ந்த இவர், பல அரசு அடையாள அட்டைகளுடன் ஆறு வருடங்களாக ஏமாற்றி வந்துள்ளார்.

    தெலங்கானாவின் பெத்தப்பள்ளி மாவட்டத்தில் உள்ள என்டிபிசி காவல் நிலையப் பகுதியில் வசிப்பவர் தயாளி உப்பல். இவர் மணமகள் தேவை என திருமணம் இணையதளத்தில் சுயவிவரங்களை இட்டு ஏமாற்றுவதைத் தொழிலாகக் கொண்டுள்ளார். இதற்காக, கடந்த ஆறு வருடங்களாக தயாளி உப்பல், பல மத்திய அரசின் பல்வேறு போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி உள்ளார். இதில், ராணுவம், தேசியப் புலனாய்வு நிறுவனம், ஜம்மு-காஷ்மீர் காவல் துறை மற்றும் மத்தியக் காவல் படையான சிஆர்பிஎப் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

    இந்தவகையில் அவர் உபி உள்ளிட்ட பல மாநிலங்களின் 25 பெண்களை ஏமாற்றி ரூ.40 லட்சம் பணமும் பறித்துள்ளார். தன்னை ஒரு ராணுவ அதிகாரி என்று கூறி மூன்று பெண்களை ஏமாற்றி அவர்களைத் திருமணம் செய்துள்ளார். இந்த மூவரில் உபியின் சந்தவுலியைச் சேர்ந்த ஒரு பெண், தற்போது வாரணாசியில் வசிக்கிறார். இவர் அளித்த புகாரின் பேரில் தயாளி உப்பல் மீது பதிவான வழக்கை தனது நேரடிப் பார்வையில் விசாரணை செய்தார் தமிழரான வாராணாசியின் துணை காவல் ஆணையர் டி.சரவணன்.

    இந்நிலையில், வாராணாசியின் சிதைபூர் காவல்நிலையப் பகுதியில், சந்தேகித்திற்கு இடமான வகையில் வாரணாசியில் ஒருவர் கைதானார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்தான், தயாளி உப்பல் என அடையாளம் தெரிந்துள்ளது.

    இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த வாரணாசி டிசிபி சரவணன் கூறும்போது, ‘குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து ராணுவ சீருடைகள் மீட்கப்பட்டுள்ளன. அவரிடம் மேஜர் அமித் மற்றும் மேஜர் ஜோசப் என்ற போலி பேட்ஜ்களும், அடையாள அட்டைகளும் இருந்தன.

    பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை ஒரு ராணுவ அதிகாரி என்று கூறி திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தை பதிவு செய்ய தேவையான ஆவணங்களை அந்தப் பெண் கேட்டபோது, குற்றம் சாட்டப்பட்டவர் தயாராக இல்லை.இதன் பின்னர், அந்தப் பெண் எங்களிடம் புகார் அளித்தார். இதன் விசாரணையில் ஆறு வருடங்களாகக் குற்றவாளி தயாளி இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது.’ எனத் தெரிவித்துள்ளார்.

    போலி அடையாள அட்டைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட அச்சிடும் ஆவணங்களையும், தயாளியிடமிருந்து போலீஸார் கைப்பற்றி உள்ளனர். தயாளி உப்பல் மீது சிதைபூர் காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவுகளான 115 (2), 351 (2), 318 (4), 319 (2), 338, 336(3), 204, 205, 235 மற்றும் 6 மற்றும் ஆயுதச் சட்டம் ஆகியவறின் கீழ் வழக்குகள் பதிவாகி உள்ளன.

    இது குறித்து குற்றவாளியான தயாளி உப்பல் கூறும்போது, ‘வங்கியில் பணியாற்றிய அப்பெண்ணை நான் ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டேன். திருமணத்திற்குப் பிறகு, நானும் அவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்தோம்.இதுவரை நான் அவரிடமிருந்து சுமார் ரூ.6 லட்சம் வாங்கியுள்ளேன். திருமண இணையதளத்தில் எனது சுயவிவரத்தை பதிவு செய்து, அவர் வீட்டில் இல்லாதபோது, நான் மற்ற பெண்களுடன் பேசுவேன்.

    தெலங்கானா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், டெல்லி, பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் போன்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் இருபத்தைந்து பெண்களுடன் நான் தொடர்பில் இருக்கிறேன்.அவர்களிடமிருந்தும் சுமார் ரூ.40 லட்சம் பணம் வாங்கியுள்ளேன். இணையத்தில் ராணுவ அதிகாரிகளின் அடையாள அட்டைகளைத் தேடி, அச்சுப்பொறியின் உதவியுடன் போலி அடையாள அட்டைகளை நானே தயாரித்தேன்.

    நான் ராணுவத்தில் இல்லை என்று யாரும் சந்தேகிக்காதபடி ஒரு கள்ளத் துப்பாக்கியையும் வாங்கி வைத்திருந்தேன். என் குற்றத்தை ஒப்புக்கொள்வதுடன் நான் செய்த இந்த தவறுகளுக்கு அனைவரிடமும் நான் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.’ என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    வக்பு வழக்கில் முழுமையற்ற தீர்ப்பு: அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் அதிருப்தி

    September 17, 2025
    தேசியம்

    அரசு பணியில் சேர்ந்து 6 ஆண்டுகளில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த பெண் கைது

    September 17, 2025
    தேசியம்

    ஐஆர்சிடிசி-ல் ஆதாரை பதிவு செய்தவர்கள் மட்டுமே முதல் 15 நிமிடம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்: அக். 1 முதல் புதிய நடைமுறை

    September 17, 2025
    தேசியம்

    ‘நண்பர் மோடி பிறந்தநாளில் ஓர் அற்புதமான தொலைபேசி உரையாடல்’ – ட்ரம்ப் நெகிழ்ச்சி

    September 17, 2025
    தேசியம்

    லக்னோ: மாடுகளை கடத்த முயன்றதை தடுத்த 19 வயது இளைஞர் அடித்துக் கொலை

    September 17, 2025
    தேசியம்

    இமாச்சல், உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு: கனமழை, வெள்ளத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு

    September 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வக்பு வழக்கில் முழுமையற்ற தீர்ப்பு: அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் அதிருப்தி
    • ‘ஷிஃப்ட்’ முறையில் கல்லூரி… மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
    • சுதந்திரப் போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியின் 108-வது பிறந்தநாள்: முதல்வர், அரசியல் தலைவர்கள் மரியாதை
    • அக்ரூட் பருப்புகள் முதல் பாதாம் வரை: ஹார்வர்ட் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணரின் படி கொட்டைகள் சாப்பிட சிறந்த நேரம்
    • அரசு பணியில் சேர்ந்து 6 ஆண்டுகளில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த பெண் கைது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.