Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»விமான எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளை கவனமாக இயக்க விமானிகளுக்கு எடிஹாட் அறிவுறுத்தல்
    தேசியம்

    விமான எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளை கவனமாக இயக்க விமானிகளுக்கு எடிஹாட் அறிவுறுத்தல்

    adminBy adminJuly 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    விமான எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளை கவனமாக இயக்க விமானிகளுக்கு எடிஹாட் அறிவுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அபுதாபி: போயிங் 787 விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளை இயக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு தனது விமானிகளை எடிஹாட் விமான நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம் விபத்துக்குள்ளானது குறித்த முதற்கட்ட அறிக்கை வெளியானதை அடுத்து இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக எடிஹாட் விமான நிறுவனம் தனது விமானிகளுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தலில், “போயிங் 787 விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளை இயக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும், அந்த சுவிட்சுகளின் செயல்முறையை ஆய்வு செய்ய வேண்டும். எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்டுகள் அருகில் உள்ள வேறு ஏதேனும் சுவிட்சுகளை இயக்கும்போது எச்சரிக்கையுடன் இயக்க வேண்டும். கவனக்குறைவாக இயக்கப்படுவதற்கு வழிவகுக்கும் எந்தவொரு பொருளும் அருகில் இருப்பதை தவிர்க்க வேண்டும். முரண்பாடுகள் ஏதும் இருப்பது கவனிக்கப்பட்டால் அது குறித்து உடனடியாக புகாரளிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மாதம் 12-ம் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ட்ரீம்லைனர் ரக விமானம், சில விநாடிகளில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உட்பட மொத்தம் 270 பேர் உயிரிழந்தனர். ஒரே ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து பெறப்பட்ட தகவல்கள், விமானிகள் இடையே நடைபெற்ற உரையாடல் பதிவுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில், 15 பக்க முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) கடந்த 12-ம் தேதி வெளியிட்டது. அதில், “அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த மாதம் 12-ம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் ட்ரீம்லைனர் 787 ரக விமானம், ஓடுபாதையில் இருந்து மணிக்கு 283 கி.மீ வேகத்தில் மேலெழும்பியது. வானில் 3 விநாடிகள் வரை பறந்து 333 கி.மீ வேகத்தை எட்டியதும், விமானத்தின் என்-1, என்-2 ஆகிய இரு இன்ஜின்களின் எரிபொருள் சுவிட்ச்கள், ஒரு விநாடி இடைவெளியில் அடுத்தடுத்து செயலிழந்து ‘ஆஃப்’ ஆனதால், இன்ஜினுக்கு தேவையான எரிபொருள் செல்லவில்லை.

    எரிபொருள் சப்ளை திடீரென நின்றுபோனதால், இன்ஜினுக்குள் சுழலும் விசிறியின் வேகம் குறைந்தது. இதனால், உந்து சக்தி கிடைக்காததை உணர்ந்த ஒரு விமானி, அனைத்து சுவிட்ச்களும் சரியாக உள்ளதா என பார்த்துள்ளார். அப்போது எரிபொருள் சுவிட்ச்‘ஆஃப்’ ஆகியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், மற்றொரு விமானியிடம், ‘எரிபொருள் சுவிட்ச்களை ஏன் ‘ஆஃப்’ செய்தீர்கள்?’’ என்று கேட்கிறார். ‘‘நான் ஆஃப் செய்யவில்லை’’ என்று அவர் அதிர்ச்சியுடன் கூறுகிறார்.

    இந்த நிலையில், சுவிட்ச் ஆஃப் ஆன 10 விநாடிகளுக்கு பிறகு, விமானத்தின் முதல் எரிபொருள் இன்ஜின் மீண்டும் சுவிட்ச் ஆன் செய்யப்பட்டது. அடுத்த 4-வது விநாடியில் 2-வது இன்ஜினின் எரிபொருள் சுவிட்ச் ‘ஆன்’ செய்யப்பட்டது. இதனால் விமானத்தின் முதல் இன்ஜின் மீண்டும் இயங்கத் தொடங்கியது. 2-வது இன்ஜின் இயங்குவதற்குள், 213.4 டன் எடை மற்றும் 54,200 கிலோ எரிபொருளின் எடையுடன் விமானம் மீண்டும் வானில் எழும்புவதற்கு தேவையான உந்து சக்தி கிடைக்காமல் கீழே இறங்கியது.

    அடுத்த 9-வது விநாடியில் பைலட் ‘‘மே டே, மே டே, மே டே’’ என விமான கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கை விடுத்தார். இதை அடுத்து, விமானியிடம் விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரி, விவரம் கேட்கிறார். ஆனால் பதில் இல்லை. சிறிது நேரத்தில் விமானம் மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விமானம் மேலெழும்பிய 26 விநாடிக்குள் அனைத்தும் நடந்து விபத்து நிகழ்ந்துள்ளது.” என தெரிவிக்கப்பட்டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘இதற்கும் மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை’ – நிமிஷா பிரியா வழக்கில் மத்திய அரசு கைவிரிப்பு!

    July 14, 2025
    தேசியம்

    இமாச்சலில் பருவமழைக்கு இதுவரை 98 பேர் உயிரிழப்பு; ரூ.770 கோடி மதிப்பில் சேதம்

    July 14, 2025
    தேசியம்

    தியாகிகள் கல்லறைக்குச் செல்ல அனுமதி மறுப்பு – சுவர் ஏறி குதித்த முதல்வர் உமர் அப்துல்லா

    July 14, 2025
    தேசியம்

    விமான விபத்துக்கு இயந்திரவியல், பராமரிப்புப் பிரச்சினைகள் காரணமில்லை: ஏர் இந்தியா சிஇஓ

    July 14, 2025
    தேசியம்

    ஹரியானா, கோவா மாநிலங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்துக்கு ஆளுநர்கள் நியமனம்

    July 14, 2025
    தேசியம்

    மாநிலங்களவையின் புதிய நியமன எம்.பி.க்களின் பின்புலம் என்ன?

    July 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கிவி எவ்வாறு மலச்சிக்கலுக்கு உதவ முடியும் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘அபிநய சரஸ்வதி’ சரோஜா தேவி தகர்த்தெறிந்த மாயை | புகழஞ்சலி
    • “விஜய் நடவடிக்கைகளை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” – எல்.முருகன் 
    • ஒளிரும் சருமத்திற்கான மேட்சா: நிரூபிக்கப்பட்ட நன்மைகள் மற்றும் ஒவ்வொரு நாளும் அதைப் பயன்படுத்த எளிய வழிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘இதற்கும் மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை’ – நிமிஷா பிரியா வழக்கில் மத்திய அரசு கைவிரிப்பு!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.