Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»நாகை மீனவர்களுக்கு கைகொடுத்த நெத்திலி மீன்!
    வணிகம்

    நாகை மீனவர்களுக்கு கைகொடுத்த நெத்திலி மீன்!

    adminBy adminJuly 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நாகை மீனவர்களுக்கு கைகொடுத்த நெத்திலி மீன்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், விழுந்தமாவடி, கோடியக்கரை, புஷ்பவனம் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். கடந்த வாரத்தில் நாகை துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் கரை திரும்பின.

    தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன்களை வாங்குவதற்கு மீன் பிரியர்கள், வியாபாரிகள் ஆயிரக்கணக்கானோர் நாகை துறைமுகத்தில் அதிகாலையிலேயே திரண்டனர். ஆனால், கடல் காற்று அதிகம் வீசுவதன் காரணமாக பெரிய ரக மீன்கள் கடலின் ஆழத்துக்குச் சென்றுவிட்டதால், போதுமான மீன்கள் கிடைக்கவில்லை எனவும், செலவு செய்த பணத்துக்கு ஈடாக நஷ்டம் இல்லாத அளவுக்கு மீன்கள் கிடைத்ததாக வும் கடலுக்குச் சென்று திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.

    ஆனாலும், சில படகுகளில் ஏற்றுமதி ரக பெரிய மீன்களும், அதிக அளவில் நெத்திலி மீன்களும் கிடைத்துள்ளதால் மீனவர்கள் நஷ்டமின்றி தப்பினர். துறைமுகத்தில் பல இடங்களில் நெத்திலி மீன்கள் மலைபோல குவிக்கப்பட்டிருந்தன. அதிக வரத்து காரணமாக நெத்திலி மீன்கள் விலை குறைந்து கிலோ ரூ.100 முதல் ரூ.250 வரை விற்பனையானதால், மீன் பிரியர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

    விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நெத்திலி மீன்கள்.

    அரபிக்கடல் கேரளப் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் கேரள வியாபாரிகள் சரக்கு வாகனத்துடன் வந்து நாகை துறைமுகத்தில் முகாமிட்டு தங்களுக்கு தேவையான ஏற்றுமதி ரக மீன்களை அதிக விலை கொடுத்து வாங்கி சென்றனர். இதனால் ஏற்றுமதி ரக மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.

    வெளி மாவட்ட வியாபாரிகளும், நாகை மாவட்ட சிறு வியாபாரிகளும் மீன் பிரியர்களும் வஞ்சிரம்,வாவல், கடல் விரால், பால்சுறா உள்ளிட்ட மீன்கள் சற்று விலை ஏற்றமாக இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் மீன்களை வாங்கிச் சென்றனர்.

    நாகையில் நேற்று மீன்களின் விலை நிலவரம்(கிலோவுக்கு): இறால் ரூ.450 முதல் ரூ.650 வரை, கனவா ரூ.250 முதல் ஏற்றுமதி ரகம் ரூ.450, நண்டு ரூ.400 முதல் ரூ.650 வரை, வஞ்சிரம் ரூ.700 முதல் ரூ.1,200 வரை, வாவல் ரூ.700 முதல் ரூ.1,200 வரை, சங்கரா ரூ.300, சீலா ரூ.450, கிழங்கான் ரூ.350, நெத்திலி ரூ.250, பாறை ரூ.400 முதல் ரூ.550 வரை, கடல் விரா ரூ.550, பால் சுறா ரூ.400, திருக்கை ரூ.200 முதல் ரூ.400 வரை.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    நபார்டு வங்​கி​யின் 44-வது ஆண்டு தொடக்க விழாவில் ஏராளமான திட்டங்கள் அறிவிப்பு

    July 14, 2025
    வணிகம்

    பாஜகவுக்கு வேதாந்தா வழங்கிய நன்கொடை 4 மடங்காக உயர்வு

    July 14, 2025
    வணிகம்

    2 பேருக்கு பார்வையிழப்பு ஏற்பட்டதாக புகார்: 8.5 லட்சம் ஸ்டீல் தண்ணீர் பாட்டில்களை திரும்பப் பெறும் வால்மார்ட்

    July 14, 2025
    வணிகம்

    நபார்டு வங்கி சேவைகள் பழங்குடியின மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை: மத்திய நிதித் துறை செயலர் வருத்தம்

    July 13, 2025
    வணிகம்

    தங்கம் விலை ரூ.73 ஆயிரத்தை தாண்டியது

    July 13, 2025
    வணிகம்

    சலுகை விலையில் ஃபேன்சி நம்பர் வழங்கும் ஜியோ: விலை எவ்வளவு தெரியுமா?

    July 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இமாச்சலில் பருவமழைக்கு இதுவரை 98 பேர் உயிரிழப்பு; ரூ.770 கோடி மதிப்பில் சேதம்
    • மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் விசாரணையை தொடங்கியது சிபிஐ!
    • மழைக்காலத்தில் பெண்கள் ஏன் யுடிஐக்களுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்: யுடிஐக்கள் மற்றும் அறிகுறிகளைப் புரிந்துகொள்வது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சுபன்ஷு சுக்லாவின் சகோதரி 18 நாட்களுக்குப் பிறகு விண்வெளியில் பெருமையுடனும் பிரார்த்தனையுடனும் தனது வெளியீட்டைக் கொண்டாடுகிறார்: ‘அதே உணர்வுகள் திரும்பி வந்தன’ | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வருண் மோகன் கல்வித் தகுதிகள்: கூகிளின் 4 2.4 பில்லியன் AI முதலீட்டை ஒரு இந்திய -ஆஜின் எம்ஐடி பொறியாளர் எவ்வாறு பெற்றார் – இந்தியாவின் டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.