Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»கர்நாடகாவில் குகையில் 2 மகள்களுடன் தங்கியிருந்த ரஷ்ய பெண் மீட்பு
    தேசியம்

    கர்நாடகாவில் குகையில் 2 மகள்களுடன் தங்கியிருந்த ரஷ்ய பெண் மீட்பு

    adminBy adminJuly 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கர்நாடகாவில் குகையில் 2 மகள்களுடன் தங்கியிருந்த ரஷ்ய பெண் மீட்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பெங்களூரு: கர்​நாட​கா​வில் அடர் வனப்​பகு​தி​யில் உள்ள குகை​யில் ரஷ்​யாவை சேர்ந்த பெண் ஒரு​வர் தனது 2 மகள்​களு​டன் தங்கி இருந்​தார். அவரை அம்​மாநில போலீ​ஸார் பத்​திர​மாக மீட்​டனர். கர்​நாடகா மாநிலம் உத்தர கன்​னடா மாவட்​டம் கோகர்ணா அருகே ராமதீர்த்தா மலை அமைந்​துள்​ளது.

    அங்​குள்ள வனப்​பகு​தி​யில் சுற்​றுலாப் பயணி​கள் சட்​ட​விரோத​மாக மலை​யேற்​றம், சவாரி ஆகிய​வற்​றில் ஈடு​படு​வ​தாக போலீஸாருக்கு தகவல் கிடைத்​தது.

    இதையடுத்து கோகர்ணா காவல் நிலைய ஆய்​வாளர் தர் தலை​மையி​லான காவல் துறை​யினர் கடந்த 9-ம் தேதி ரோந்து பணியில் ஈடு​பட்​டனர். அப்​போது வனப்​பகு​தி​யில் நிலச்​சரிவு அபா​யம் மிகுந்த பகு​தி​யில் உள்ள குகை​யில் பெண் ஒரு​வர் தங்கியிருப்​பதை கண்​டறிந்​தனர். இதையடுத்து 3 பேரை​யும் போலீ​ஸார் பத்​திர​மாக மீட்டு விசா​ரணை நடத்​தினர்.

    கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் கோகர்ணா

    அருகே உள்ள ராமதீர்த்தா மலை குகையிலிருந்து

    மீட்கப்பட்ட ரஷ்ய பெண் நினா மற்றும் 2 குழந்தைகள். | படம்: பிடிஐ |

    ஆன்​மிகத்​தில் நாட்​டம்: இதுகுறித்து போலீ​ஸார் கூறியதாவது: கு​கை​யில் இருந்து மீட்​கப்​பட்ட பெண்​ணின் பெயர் நினா குடினா (40). ரஷ்​யாவை சேர்ந்த அவர் தனது மூத்த மகள் பிரேமா (6), இளைய மகள் அமா (4) ஆகியோ​ருடன் கடந்த 2017-ம் ஆண்டு கோவாவுக்கு சுற்​றுலா பயணி​யாக வந்​தார். ஆன்​மிகத்​தில் நாட்​டம் கொண்ட அவர், இங்​குள்ள சாமி​யார்​களின் மடங்​களில் தங்கி யோகாசனம் கற்​றுள்​ளார்.

    2018 ஏப்​ரல் 19-ல் நேபாளத்​துக்கு சென்​றுள்​ளார். அங்​கிருந்து மீண்​டும் கோவாவுக்கு வந்த நினா, சட்​ட​விரோத​மாக இந்​தி​யா​வில் தங்கி​யிருந்​தார் கோவா​வில் இருந்து கடந்த மே மாதம் கோகர்ணா வந்த நினா, உள்​ளூர் சாமி​யார் ஒரு​வரின் ஆசிரமத்​தில் தங்கி இருந்​தார். பின்​னர் அவரது அறி​வுரை​யின் பேரில் குகை​யில் தியானம் செய்ய அங்கு சென்​றுள்​ளார்.

    ஒரு வார​மாக அங்கு தங்​கி​யிருந்த 3 பேரை​யும் மீட்​டு, தேவை​யான சிகிச்​சை​யும் உளவியல் சிகிச்​சை​யும் வழங்​கப்​பட்​டது. அதன் பிறகு சுவாமி யோகரத்னா சரஸ்​வதி நடத்​தும் ஆசிரமத்​துக்கு அனுப்பி வைத்​திருக்​கிறோம். அவரை ரஷ்​யா​வுக்கு மீண்​டும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்​து வரு​கின்​றோம். இவ்வாறு போலீஸார் கூறினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    நதிநீர் பங்கீடு குறித்து ஆந்திரா – தெலங்கானா முதல்வர்கள் பேச்சு

    July 17, 2025
    தேசியம்

    வங்க மொழி பேசும் மக்களுக்கு துன்புறுத்தல்: முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் போராட்டம்

    July 17, 2025
    தேசியம்

    சத்தீஸ்கரில் 35 ஆண்டுகள் வசித்த வங்கதேச தம்பதி கைது

    July 17, 2025
    தேசியம்

    நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஜூலை 21-ல் தொடக்கம்: முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற தீவிரம்

    July 17, 2025
    தேசியம்

    நிமிஷா செய்த குற்றத்துக்கு மன்னிப்பு கிடையாது: உயிரிழந்த தலால் மெஹ்தியின் சகோதரர் திட்டவட்டம்

    July 17, 2025
    தேசியம்

    பாஜக ஆளும் மாநிலங்களில் வங்க மொழி பேசுவோருக்கு ‘துன்புறுத்தல்’ நடப்பதாக மம்தா கண்டன பேரணி!

    July 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கந்தகோட்டம் முத்துகுமாரசுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: ‘அரோகரா’ கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்
    • அனை​வரும் ஒற்​றுமை​யாக இருந்து தமிழை பாதுகாக்க வேண்டும்: விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வலியுறுத்தல்
    • 5 எச்சரிக்கை அறிகுறிகள் ஒருவரின் வளர்சிதை மாற்ற வயது உயிரியல் வயதை விட பழையது (அதை எவ்வாறு சரிசெய்வது)
    • குடும்பத்துடனான சுபன்ஷு சுக்லாவின் உணர்ச்சிபூர்வமான மறு இணைவு ஆன்லைனில் மில்லியன் கணக்கான இதயங்களை உருக்குகிறது | முதல் படங்களை பாருங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நதிநீர் பங்கீடு குறித்து ஆந்திரா – தெலங்கானா முதல்வர்கள் பேச்சு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.