Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சங்க கட்டிடத்தை நிர்வகிப்பது யார் என்பதில் தகராறு: விருதுநகரில் அரசு ஊழியர் சங்கத்தினரிடையே மோதல்
    மாநிலம்

    சங்க கட்டிடத்தை நிர்வகிப்பது யார் என்பதில் தகராறு: விருதுநகரில் அரசு ஊழியர் சங்கத்தினரிடையே மோதல்

    adminBy adminJuly 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சங்க கட்டிடத்தை நிர்வகிப்பது யார் என்பதில் தகராறு: விருதுநகரில் அரசு ஊழியர் சங்கத்தினரிடையே மோதல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    விருதுநகர்: ​விருதுநகரில் சங்​கக் கட்​டிடத்தை நிர்​வகிப்​பது யார் என்​பது தொடர்​பாக அரசு ஊழியர் சங்​கத்​தினரிடையே நேற்று மோதல் ஏற்​பட்​டது. இது தொடர்​பாக 44 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். விருதுநகர் முத்​து​ராமலிங்​கம் தெரு​வில் 3,700 சதுர அடியில் கட்​டிய அரசு ஊழியர் சங்​கக் கட்​டிடம் உள்​ளது. கடந்த 2019-ல் தமிழ்​நாடு அரசு ஊழியர் சங்​கத்​தின் மாநிலப் பொதுச் செய​லா​ளர் அன்​பரசனுக்​கும், விருதுநகர் மாவட்ட நிர்​வாகி​களுக்​கும் இடையே கருத்து வேறு​பாடு ஏற்​பட்​ட​தால், மாவட்​டக் குழுவை மாநில குழு கலைத்​தது.

    இதை எதிர்த்து விருதுநகர் மாவட்ட சங்​கம் தொடர்ந்த வழக்​கில், மாவட்ட குழு கலைக்​கப்​பட்​டது செல்​லாது என்று நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​தது. 2019 முதல் விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்​கக் கட்​டிடத்தை மாவட்ட நிர்​வாகி​களே பராமரித்து வந்​தனர். 2023ல் விருதுநகரில் தமிழ்​நாடு அரசு ஊழியர் சங்​கத்​துக்கு மாற்​றாக, ‘தமிழ்​நாடு அரசு ஊழியர்​கள் சங்​கம்’ என்ற புதிய சங்கத்தைமாவட்​டக் குழு நிர்​வாகி​கள் தொடங்​கினர்.

    அதே​நேரம், சங்​கத்​தின் மாநில துணைச் செய​லா​ளர் கண்​ணன் தலை​மை​யில் அரசு ஊழியர் சங்​கக் கட்​டிடம் தொடர்ந்து நிர்வகிக்​கப்​பட்டு வந்​தது. இந்​நிலை​யில், தமிழ்​நாடு அரசு ஊழியர் சங்​கத்​துக்கு மாவட்​டச் செய​லா​ள​ராக கருப்​பையா உள்​ளிட்ட நிர்​வாகி​கள் தேர்வு செய்​யப்​பட்​டனர். இதையடுத்​து, தமிழ்​நாடு அரசு ஊழியர்​கள் சங்​கத்​தின் கட்​டுப்​பாட்​டில் இருந்த கட்​டிடத்​தின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற தமிழ்​நாடு அரசு ஊழியர் சங்​கத்​தினர், நேற்று முன்​தினம் எழுச்சி நாள் கருத்​தரங்​கம் நடத்தினர்.

    இதற்கு எதிர்ப்​புத் தெரி​வித்து அரசு ஊழியர்​கள் சங்​கத்​தினர் போலீ​ஸாரிடம் புகார் தெரி​வித்​தனர்.நேற்று 2-வது நாளாக அக்கட்டிடத்​தில் அரசு ஊழியர் சங்க நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டம் நடத்​தினர். அப்​போது, கட்​டிடத்தை ஏற்​கெனவே நிர்​வகித்து வந்த அரசு ஊழியர்​கள் சங்​கத்​தினர் திரண்டு வந்து கட்​டிடத்​தைக் கைப்​பற்ற முயன்​றனர். அப்போது இரு தரப்​பினரும் ஒரு​வரையொரு​வர் கடுமை​யாக தாக்​கிய​தில் ஊழியர்​கள் பலர் காயமடைந்​தனர்.

    தொடர்ந்​து, போலீ​ஸார் இரு தரப்​பினரை​யும் கட்​டிடத்​திலிருந்து வெளி​யேற்​றினர். அப்​போது, தமிழ்​நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், சங்​கக் கட்​டிடத்​தின் முன் அமர்ந்து தர்​ணா​வில் ஈடு​பட்​டனர். பின்னர் அரசு ஊழியர் சங்​கத்​தினர் 34 பேரை போலீஸார் கைது செய்​தனர். அதே​போல, மற்​றொரு சங்​க​மான தமிழ்​நாடு அரசு ஊழியர்​கள் சங்க நிர்​வாகி​கள் 10 பேரை விருதுநகர் மேற்கு போலீ​ஸார் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக கைது செய்​தனர்.

    கட்டிடத்துக்கு `சீல்’ வைப்பு: இந்த விவகாரம் தொடர்பாக விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடந்தது. வட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் தங்களுக்கு திருப்தி இல்லை என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து பிரச்சினைக்குரிய கட்டிடத்தை வருவாய்த் துறையினர் பூட்டி `சீல்’ வைத்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    புதுச்சேரி தனியார் வங்கியில் தீ விபத்து: பொருட்கள் சேதம்

    September 17, 2025
    மாநிலம்

    டெல்லியில் குடியரசு துணைத் தலைவரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி!

    September 17, 2025
    மாநிலம்

    நேபாளத்தில் இனி அமைதி திரும்பும்: கோவையில் பயிலும் நேபாள மாணவர்கள் நம்பிக்கை

    September 17, 2025
    மாநிலம்

    திமுகவில் ஜனநாயகம் இல்லை: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

    September 17, 2025
    மாநிலம்

    புதுச்சேரியில் தே.ஜ. கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

    September 16, 2025
    மாநிலம்

    வாக்குச் சாவடிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை உறுதிப்படுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு

    September 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • புதுச்சேரி தனியார் வங்கியில் தீ விபத்து: பொருட்கள் சேதம்
    • உங்கள் மூக்கைச் சுற்றி வறண்ட சருமத்தை குணப்படுத்த 5 தோல் மருத்துவர்-அங்கீகரிக்கப்பட்ட வழிகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டெல்லியில் குடியரசு துணைத் தலைவரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி!
    • குளியலறையில் இருந்து துரு மற்றும் வெள்ளை மதிப்பெண்களை எவ்வாறு அகற்றுவது மற்றும் அவற்றின் பிரகாசத்தை மீட்டெடுப்பது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘நன்றி நண்பரே’ – பிறந்தநாள் வாழ்த்து கூறிய ட்ரம்ப்புக்கு பிரதமர் மோடி ரிப்ளை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.