Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»14 ஆண்​டு​களுக்கு பிறகு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
    ஆன்மீகம்

    14 ஆண்​டு​களுக்கு பிறகு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

    adminBy adminJuly 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    14 ஆண்​டு​களுக்கு பிறகு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: ​முரு​கப் பெரு​மானின் முதல்​படை வீடான சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் இன்று அதி​காலை கும்​பாபிஷேகம் நடை​பெறுகிறது. இதையொட்​டி, 3 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

    முரு​கப் பெரு​மானின் அறு​படை வீடு​களில் முதல் வீடான திருப்​பரங்​குன்​றம் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் 14 ஆண்​டு​களுக்கு பிறகு இன்று கும்​பாபிஷேகம் நடை​பெறுகிறது. இதையொட்​டி, கடந்த சில மாதங்​களாக திருப்​பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. உபய​தா​ரர் மூலம் ரூ.70 லட்​சத்​தில்ராஜகோபுரம் புதுப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. ரூ.2.44 கோடி​யில் ராஜகோபுரத்​தில் 7 தங்க கலசம், அம்​பாள் சந்​நிதி மற்​றும் கணபதி கோயி​லில் தலா ஒரு கலசம் என 9 கலசங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

    திருப்​பணி​கள் நிறைவடைந்​ததை தொடர்ந்​து, கோயி​லின் வள்ளி தேவசேனா மண்​டபத்​தில் யாக​சாலை பூஜைகள் கடந்த 10-ம் தேதி தொடங்​கி, நேற்று முன்​தினம் வரை 5 கால பூஜைகள் நடை​பெற்​றன. இந்​நிலை​யில், நேற்று நடந்த 6, 7-ம் கால யாக​சாலை பூஜை​யில் உயர் நீதி​மன்ற நீதிபதி சுவாமி​நாதன், ஜோதிடர் கே.பி.​வித்​யாதரன் ஆகியோர் கலந்​து​ கொண்​டனர். 80 ஓது​வார்​கள் பன்​னிரு திரு​முறை​கள், திருப்​பு​கழ், கந்​தர் அனுபூதி முற்​றோதல் செய்​தனர்.

    கும்​பாபிஷேக விழா​வில் பங்​கேற்க மதுரை மீனாட்சி அம்​மன் கோயி​லில் இருந்து மீனாட்​சி, சுந்​தரேசுவரர் பரி​வார மூர்த்​தி​களு​டன் நேற்று இரவு 10 மணி அளவில் புறப்​பட்​டனர். திருப்​பரங்​குன்​றம் வந்​தடைந்த அவர்​களுக்கு 16 கால் மண்​டபத்​தில் வரவேற்பு நிகழ்ச்சி நடை​பெற்​றது. இன்று அதி​காலை 3.45 மணிக்கு 8-ம் கால யாக​சாலை பூஜை நடை​பெறும். அதி​காலை 5 மணிக்கு கலசங்​கள் புறப்​பாடும், அதை தொடர்ந்து 5.30 மணிக்கு சுப்​பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுரம், பரி​வார மூர்த்​தி​கள், விமானங்​களுக்கு கும்​பாபிஷேகம் நடை​பெறும். 6 மணிக்கு தேவசேனா உடனுறை சுப்​பிரமணிய சுவாமிக்கு கும்​பாபிஷேகம் நடை​பெறும்.

    10 ட்ரோன்​கள் மூலம் புனித நீரை பக்​தர்​கள் மீது தெளிக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த விழா​வில் 3 லட்​சம் பக்​தர்​கள் பங்​கேற்​பார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. பக்​தர்​கள் சிரமமின்றி கும்​பாபிஷேகத்தை காண, கோயிலை சுற்றி பல்​வேறு இடங்​களில் எல்​இடி திரைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

    கும்பாபிஷேக விழாவை முன்​னிட்​டு, 3 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். முன்​னேற்​பாடு பணி​களை அமைச்​சர் மூர்த்​தி, ஆட்​சி​யர் பிர​வீன்​கு​மார், மாநகர காவல் ஆணை​யர் லோக​நாதன், மாநக​ராட்​சி ஆணை​யர்​ சித்​ரா ஆகியோர்​ நேற்​று பார்​வை​யிட்​டனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடி மாத வழிபாட்டுக்காக சிறப்பு ஏற்பாடுகள் மும்முரம்

    July 16, 2025
    ஆன்மீகம்

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சன சேவை

    July 16, 2025
    ஆன்மீகம்

    மாத வழிபாட்டுக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு

    July 16, 2025
    ஆன்மீகம்

    ‘அரோகரா’ முழக்கம் விண்ணதிர திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

    July 15, 2025
    ஆன்மீகம்

    ஸ்ரீவி., திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் 36 ஆண்டுகளுக்கு பின் விமரிசையாக நடந்த கும்பாபிஷேகம்

    July 14, 2025
    ஆன்மீகம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

    July 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • Anime பெண் அவதார்களை வடிவமைக்கும் பொறியாளர்களுக்கு ரூ.3.7 கோடி ஆண்டு சம்பளம் வழங்கும் எக்ஸ் ஏஐ?
    • இடைத்தரகரின்றி விவசாயிகளுக்கு நேரடியாக நலத் திட்ட உதவிகள்: எடப்பாடி பழனிசாமி உறுதி
    • மரபணுக்கள் மட்டுமல்ல: 101 வயதான மருத்துவர் 7 ஆச்சரியமான ரகசியங்களைப் பகிர்ந்து கொள்கிறார், இது அவருக்கு நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவியது
    • சட்டவிரோத மணல் விற்பனையால் அரசுக்கு ரூ.25,000 கோடி இழப்பு: நடவடிக்கை கோரும் லாரி உரிமையாளர்கள்
    • சோயாபீன்ஸ் சாப்பிடுவது மார்பக புற்றுநோயை ஏற்படுத்த முடியுமா? முன்னணி புற்றுநோயியல் நிபுணர் சில உண்மைகளை கொட்டுகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.