Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»‘உங்களது அரசமைப்பு பற்று போற்றத்தக்கது’ – நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் வாழ்த்து
    தேசியம்

    ‘உங்களது அரசமைப்பு பற்று போற்றத்தக்கது’ – நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் வாழ்த்து

    adminBy adminJuly 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘உங்களது அரசமைப்பு பற்று போற்றத்தக்கது’ – நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் வாழ்த்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: அரசு தரப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாமை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்துள்ளார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. இந்நிலையில், சட்டத்துறை மற்றும் அரசமைப்பு சார்ந்து உஜ்வால் நிகாமின் பணி பாராட்டத்தக்கது என சொல்லி அவரை வாழ்த்தி உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

    மாநிலங்களவையில் நேரடியாக 12 உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நேரடியாக நியமிக்கலாம். அப்படி நியமிக்கப்பட்ட நான்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்த நிலையில் புதிதாக நான்கு பேரை உறுப்பினர்களாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தற்போது நியமித்துள்ளார்.

    கலை, அறிவியல், சட்டம், விளையாட்டு, இலக்கியம், சமூக சேவையில் சிறந்து விளங்குபவர்களை அடையாளம் கண்டு குடியரசுத் தலைவர் நேரடியாக அவர்களை மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிப்பார். அந்த வகையில் இப்போது சட்டத்துறையில் சிறப்பான செயல்பாட்டை வழங்கிய உஜ்வால் நிகாமை நியமன மாநிலங்களவை உறுப்பினராக நியமித்துள்ளார். இந்நிலையில், அவருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

    “சட்டத்துறை மற்றும் அரசமைப்பு மீதான உஜ்வால் நிகாமின் அர்ப்பணிப்பும், பற்றும் போற்றத்தக்கது. அவர் வழக்கறிஞராக மட்டுமல்லாமல் முக்கிய வழக்குகளில் நீதி கிடைப்பதில் பிரதான பங்காற்றியுள்ளார். வழக்கறிஞராக அரசியலமைப்பை வலுப்படுத்தும் வகையிலும், மக்கள் கண்ணியத்துடன் நடத்தப்படுவதை உறுதி செய்யவும் பாடுபட்டுள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவர் அவரை நியமித்து இருப்பது மகிழ்ச்சி தருகிறது. அவரது நாடாளுமன்ற இன்னிங்ஸிற்கு எனது வாழ்த்துகள்” என எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

    யார் இந்த உஜ்வால் நிகாம்? – மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றியவர் உஜ்வால் நிகாம். 1993-ல் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கிலும் உஜ்வால் நிகாம் ஆஜராகியுள்ளார். இப்படி பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த குற்ற வழக்குகளில் அவர் பணியாற்றி உள்ளார். கடந்த 2024 மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு 4.29 லட்சம் வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

    அவருடன் முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, கேரளாவை சேர்ந்த கல்வியாளர் சதானந்தன் மாஸ்டர், வரலாற்று ஆய்வாளர் மீனாட்சி ஜெயின் ஆகியோரை மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.

    இளையராஜா, சுதா மூர்த்தி, விஜயேந்திர பிரசாத், பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, சத்னம் சிங் சாந்து, குலாம் அலி காட்டனா ஆகியோரை ஏற்கனவே குடியரசுத் தலைவர் மாநிலங்களவை உறுப்பினர்களாக நேரடியாக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    முன்னாள் வெளியுறவு செயலர் உட்பட மாநிலங்களவைக்கு 4 எம்.பி.க்களை நியமித்தார் குடியரசு தலைவர்

    July 14, 2025
    தேசியம்

    டெல்லியில் நடைபாதையில் உறங்கிய ஐவர் மீது பாய்ந்த சொகுசு கார்: நள்ளிரவில் பயங்கர சம்பவம்

    July 13, 2025
    தேசியம்

    பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: வெளிநாட்டினர் அதிகம் கண்டறியப்பட்டதாக தேர்தல் ஆணையம் தகவல்

    July 13, 2025
    தேசியம்

    ஏமனில் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.8.60 கோடி குருதிப் பணம் தர செவிலியர் நிமிஷா பிரியா குடும்பத்தார் முயற்சி

    July 13, 2025
    தேசியம்

    நாய் கடித்ததால் ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு 20 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற 95 வயது மூதாட்டி

    July 13, 2025
    தேசியம்

    இந்தியாவில் சமத்துவமின்மை வேகமாக குறைகிறது: பிரதமர் மோடி பெருமிதம்

    July 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திருவள்ளூரில் சரக்கு ரயில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு!
    • திருவள்ளூர் சரக்கு ரயில் தீ விபத்து குறித்து உயர்நிலை விசாரணை: இபிஎஸ் வலியுறுத்தல்
    • திருவள்ளூர் சரக்கு ரயில் விபத்து: பெட்ரோல், டீசல் நிரப்பிய 18 டேங்கர்கள் தீக்கிரை – நடந்தது என்ன?
    • இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் 7 பேர் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
    • “சட்டம் ஒழுங்கை சரிசெய்யாவிட்டால் போராட்டம்” – தவெக ஆர்ப்பாட்டத்தில் விஜய் எச்சரிக்கை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.