Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»புதிதாக பணியில் சேருவோருக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை: பிஎப் மண்டல ஆணையர் தகவல்
    மாநிலம்

    புதிதாக பணியில் சேருவோருக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை: பிஎப் மண்டல ஆணையர் தகவல்

    adminBy adminJuly 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    புதிதாக பணியில் சேருவோருக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை: பிஎப் மண்டல ஆணையர் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: புதிதாக பணிக்கு சேருவோருக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் தேபி பிரசாத் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கியது. இதனால் ரூ.3 கோடியே 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இத்திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.99.45 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

    வரும் ஆக. 1 முதல் 2027-ம் ஆண்டு ஜூலை 31 வரை உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளுக்கு இத்திட்டம் பொருந்தும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (பிஎப்) பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில், முதல்முறையாக பணியில் இணைந்து வைப்பு நிதிக்கு பதிவு செய்யப்படும் ஊழியர்களுக்கு ரூ.15,000 வரை ஊக்கத்தொகை இரு தவணைகளாக வழங்கப்படும்.

    இத்தொகை, நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். தொழில் நிறுவனங்களுக்கும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 2 ஆண்டுகளுக்கு மாதத்துக்கு ரூ.3,000 வரை வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திருவள்ளூர் சரக்கு ரயில் விபத்து: பெட்ரோல், டீசல் நிரப்பிய 18 டேங்கர்கள் தீக்கிரை – நடந்தது என்ன?

    July 14, 2025
    மாநிலம்

    இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் 7 பேர் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

    July 14, 2025
    மாநிலம்

    “சட்டம் ஒழுங்கை சரிசெய்யாவிட்டால் போராட்டம்” – தவெக ஆர்ப்பாட்டத்தில் விஜய் எச்சரிக்கை

    July 14, 2025
    மாநிலம்

    புதிய போக்குவரத்து திட்டங்களுக்கு அனுமதி பெற முதல்வர் தலைமையில் விரைவில் போக்குவரத்து ஆணைய கூட்டம்

    July 14, 2025
    மாநிலம்

    சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 16, 17-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

    July 14, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் விரைவில் மின்சார ஆட்டோ, டாக்ஸி வாகனங்களுக்கு 500 இடங்களில் பேட்டரி மாற்று, ‘சார்ஜிங்’ மையங்கள்

    July 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திருவள்ளூர் சரக்கு ரயில் விபத்து: பெட்ரோல், டீசல் நிரப்பிய 18 டேங்கர்கள் தீக்கிரை – நடந்தது என்ன?
    • இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் 7 பேர் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
    • “சட்டம் ஒழுங்கை சரிசெய்யாவிட்டால் போராட்டம்” – தவெக ஆர்ப்பாட்டத்தில் விஜய் எச்சரிக்கை
    • சவால்: ஒரு உண்மையான விலங்கு காதலன் மட்டுமே அறையில் பூனைகளின் சரியான எண்ணிக்கையை 15 வினாடிகளில் சரியாகக் கண்டுபிடிக்க முடியும் – இந்தியாவின் நேரங்கள்
    • புதிய போக்குவரத்து திட்டங்களுக்கு அனுமதி பெற முதல்வர் தலைமையில் விரைவில் போக்குவரத்து ஆணைய கூட்டம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.