சென்னை: ஜூலை 14, 16 தேதிகளில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோடக்கன்கள் வழங்கப்படவுள்ளன.
இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தற்போது ஆனி மாதத்தில் வரும் மங்களகரமான நாட்களான ஜூலை 14 மற்றும் 16-ம் தேதிகளில் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கும்படி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைள் வந்தன.
அதன் அடிப்படையில், இந்தத் தேதிகளில் ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 டோக்கன்களும் 2 சார்பதிவாளர் உள்ள அலுவகங்களுக்கு 200-க்கு பதில் 300 டோக்கன்களும் அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களும் ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.