Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் 11 லட்சம் பேர் பங்கேற்பு: வினாத்தாள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து
    மாநிலம்

    டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் 11 லட்சம் பேர் பங்கேற்பு: வினாத்தாள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து

    adminBy adminJuly 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் 11 லட்சம் பேர் பங்கேற்பு: வினாத்தாள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகம் முழு​வதும் நடை​பெற்ற டிஎன்​பிஎஸ்சி குரூப்-4 தேர்​வில் 11.48 லட்​சம் பேர் பங்​கேற்​றனர். வினாத்​தாள் கடின​மாக இருந்​த​தாக தேர்​வர்​கள் தெரி​வித்​தனர். தேர்வு முடிவு​கள் 3 மாதங்​களில் வெளி​யிடப்​படும் என்று டிஎன்​பிஎஸ்சி தலை​வர் எஸ்​.கே.பிர​பாகர் தெரி​வித்​துள்​ளார்.

    தமிழக அரசின் பல்​வேறு துறை​களில் உள்ள காலி பணி​யிடங்​கள் தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (டிஎன்​பிஎஸ்​சி) நடத்​தும் போட்​டித் தேர்​வு​கள் மூலம் நிரப்​பப்​படு​கின்​றன. அதன்​படி, கிராம நிர்​வாக அலு​வலர், வனக் காப்​பாளர் உட்பட பல்​வேறு பதவி​களில் காலி​யாக உள்ள 3,935 பணி​யிடங்​களை நிரப்​புவதற்​கான குரூப்-4 தேர்வு மாநிலம் முழு​வதும் 3,034 மையங்​களில் நேற்று நடை​பெற்​றது.

    தேர்வு எழுத மொத்​தம் 13.90 லட்​சம் பேர் பதிவு செய்​திருந்​தனர். அதில் 11.48 லட்​சம் (82.61%) பேர் மட்​டுமே தேர்வு எழு​தினர். 2.42 லட்​சம் பேர் தேர்வு எழுத வரவில்​லை. சென்னை எழும்​பூர் அரசு மகளிர் மேல்​நிலைப் பள்​ளி​யில் அமைந்​துள்ள தேர்வு மையத்தை டிஎன்​பிஎஸ்சி தலை​வர் எஸ்​.கே.பிர​பாகர் ஆய்வு செய்​தார். பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: குரூப்-4 தேர்வு முடிவு​கள் அடுத்த 3 மாதங்​களில் வெளி​யிடப்​படும். இந்த ஆண்டு மொத்​தம் 7 தேர்​வு​கள் அறிவிக்​கப்​பட்​டு, அதில் 5 நடை​பெற்​றுள்​ளன. குரூப்​-2, 2ஏ தேர்​வுக்​கான அறி​விப்பு விரை​வில் வெளி​யிடப்​படும்.

    மதுரை​யில் வினாத்​தாள் வெளி​யான​தாக வந்த தகவல் தவறானது. அனைத்து வினாத்​தாள், விடைத்​தாள்​களும் காவல் துறை​யின் பாது​காப்​பு, கேமரா கண்​காணிப்​புடன் தேர்வு மையங்​களுக்கு கொண்டு செல்​லப்​பட்​டன. டிஎன்​பிஎஸ்சி தேர்​வு​களில் சர்ச்​சைக்​குரிய கேள்வி​கள் கேட்​கப்​படு​வது இல்​லை. அரசி​யல் சார்ந்த சர்ச்​சைக்​குரிய கேள்வி​களை கேட்​கக்​கூ​டாது என வினாத்​தாள் தயாரிக்​கும் அதி​காரி​களுக்கு அறி​வுறுத்தி உள்​ளோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

    தேர்வை முடித்து வெளியே வந்​தவர்​கள், வினாத்​தாள் கடின​மாக இருந்​தாக தெரி​வித்​தனர். இதுகுறித்து அவர்​கள் கூறிய​தாவது: கணிதம் தவிர்த்​து, பொது அறி​வு, தமிழ் போன்ற பகு​தி​கள் கடின​மாக இருந்​தன. வழக்​க​மாக எளி​தாக இருக்​கும் தமிழ் பகு​தி​யில் இந்த முறை 60 முதல் 70 சதவீத வினாக்​கள் பாடப் புத்​தகங்​களுக்கு வெளியே இருந்து கேட்​கப்​பட்​டன. பெரும்​பாலும் இலக்​கணம் சார்ந்த கேள்வி​களாக, சற்று விரி​வான​தாக கேட்​கப்​பட்​ட​தால், படித்து விடை எழுத அதிகநேரம் தேவைப்​பட்​டது. அதே​நேரம், பொது ஆங்​கிலத்​தில் வினாத்​தாள் எளி​தாக இருக்​கிறது. இந்த பாரபட்​சத்தை தவிர்க்க வேண்​டும்’’ என்​றனர்.

    குரூப்-4 தேர்​வில் நேர்காணல் கிடை​யாது. எனவே, எழுத்து தேர்​வில் வெற்றி பெற்​றாலே அரசுப் பணி கிடைப்​பது உறு​தி. தற்​போது 3,935 ஆக அறிவிக்கப்​பட்​டுள்ள காலி பணி​யிடங்​கள் எண்​ணிக்கை மேலும் அதி​கரிக்​கப்பட வாய்ப்​பு உள்​ள​தாக துறை அதிகாரிகள்​ தெரிவித்​தனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திருவள்ளூர் சரக்கு ரயில் விபத்து: எரிந்து நாசமான பெட்ரோல், டீசல் மதிப்பு முதல் ரயில் சேவை பாதிப்பு வரை

    July 13, 2025
    மாநிலம்

    50 மீனவர்கள், 232 மீன்பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை: ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

    July 13, 2025
    மாநிலம்

    தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

    July 13, 2025
    மாநிலம்

    கோயில் சொத்துகளுக்கான நிதி ஆதாரம் என்ன? – வெள்ளை அறிக்கை கோரும் தமிழக பாஜக

    July 13, 2025
    மாநிலம்

    விபத்துகளால் ரத்தாகும் சென்னை ரயில்கள்: சேலம் – விருத்தாசலம் வழித்தடத்தை பயன்படுத்த வலுக்கும் கோரிக்கை

    July 13, 2025
    மாநிலம்

    ஆந்திரா, தெலங்கானாவில் கனமழை: தவளேஸ்வரம் அணை திறப்பால் ஏனாமில் புகுந்த வெள்ளம்

    July 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திருவள்ளூர் சரக்கு ரயில் விபத்து: எரிந்து நாசமான பெட்ரோல், டீசல் மதிப்பு முதல் ரயில் சேவை பாதிப்பு வரை
    • 15 கிராம் புரதம் என்ன: உங்கள் அன்றாட இலக்குகளை பூர்த்தி செய்ய அதிக புரத உணவுகள் மற்றும் சேவை அளவுகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 50 மீனவர்கள், 232 மீன்பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை: ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
    • இந்திய காடுகளில் கண்டுபிடிக்க 8 அரிய பறவைகள்
    • தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.