Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»உங்கள் எதிர்காலமும், நிகழ்காலமும் நான்தான்: பாமக தொண்டர்களுக்கு ராமதாஸும் உருக்கமான கடிதம்
    மாநிலம்

    உங்கள் எதிர்காலமும், நிகழ்காலமும் நான்தான்: பாமக தொண்டர்களுக்கு ராமதாஸும் உருக்கமான கடிதம்

    adminBy adminJuly 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உங்கள் எதிர்காலமும், நிகழ்காலமும் நான்தான்: பாமக தொண்டர்களுக்கு ராமதாஸும் உருக்கமான கடிதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அரசி​யல் எதிர்​காலம் குறித்த கேள்​வியோ, சந்​தேகமோ தேவை​யில்​லை. உங்​கள் எதிர்​காலம் நான்​தான். உங்​களின் நிகழ்​கால​மும் நான்​தான். எப்​போதும் போல உங்​களோடு நான் நிற்​கிறேன் என்று தொண்​டர்​களுக்கு பாமக நிறு​வனர் ராம​தாஸ் கடிதம் எழு​தி​யுள்​ளார்.

    இதுதொடர்​பாக நேற்று அவர் எழு​தி​யுள்ள கடிதம்: தமிழகத்​தில் சமூகநீ​தி​யின் அடை​யாள​மாக​வும், அனைத்து தரப்பு மக்​களின் பாது​காவல​னாக​வும் திகழும் பாமக வரும் ஜூலை 16-ம் தேதி 36 ஆண்​டு​களை நிறைவு செய்​து, 37-ம் ஆண்​டில் அடி​யெடுத்து வைக்​கிறது. பாமக​வின் துணை இல்​லாமல், மக்​களுக்​கான எந்த நியாய​மும், மத்​தி​யிலோ, மாநிலத்​திலோ இது​வரை யாராலும் பெற்று தரப்​பட​வில்லை என்ற ஒன்றே போது​மானது.

    மக்​கள் நலன்​சார்ந்து எப்​போதும் யாரை​யும் எதிர்த்து நிற்​கிற கட்​சி​யாக பாமக இருந்து வரு​வதை நினைத்து பெரு​மையடைகிறேன். அரசி​யல்​ரீ​தி​யாக மட்​டுமல்ல, சட்​டரீ​தி​யாக​வும், சமூக வலை​தளங்​கள், ஊடகங்​கள், திரளான மக்​கள் போராட்​டத்​தின் மூல​மாக எனக்கு போராட தெரி​யும். நியா​யம் பெற்​றுத்​தர​வும் முடி​யும். எப்​போதும்​போல துடிதுடிப்​புடன் உங்​கள் ஒவ்​வொரு​வரின் குரல்​களை​யும் நான் உள்​வாங்கி கொண்​டு​தான் இருக்​கிறேன்.

    இது​வரை நாம் கடந்து வந்த 36 ஆண்​டு​களை​விட, இந்த 37-ம் ஆண்டு பல புதிய அனுபவங்​களை கொண்டு வந்து சேர்த்​திருக்​கிறது. இனி நமக்​கெல்​லாம் பொற்​காலம்​தான். உங்​கள் வீடு​கள், அலு​வலக முகப்​பு​களில் பாமக​வின் கொடிகளை ஏற்​றுங்​கள். ஏழை மக்​களுக்கு சட்​டஉத​வி​யும், மருத்​துவ உதவி​யும், கல்வி உதவி​யும் செய்​வ​தில் முதன்​மை​யான நபர்​களாக இருங்​கள். உங்​களின் உற்​சாகக் குரலே என்னை புதுப்​பிக்கிறது. உற்​சாகப்​படுத்​துகிறது.

    எதிரே எத்​தனைபேர் என்று கணக்கு வைத்து கொள்​ளாமல் மோதிப் பார்க்க சொல்​கிறது. எதிர்க்க இளைஞர்​களை மட்​டுமே மனசு எதிர்​பார்க்​கிறது. பாட்​டாளி சொந்​தங்​களின் நெடு​நாள் கனவைநிறைவேற்ற எனக்​குள் புதுரத்​தம் பாய தொடங்கி இருக்​கிறது. அரசி​யல் எதிர்​காலம் குறித்த கேள்​வியோ, சந்​தேகமோ பாட்​டாளி சொந்​தங்​களுக்கு தேவை இல்​லை. உங்​கள் எதிர்​காலம் நான்​தான். உங்​களின் நிகழ்​கால​மும் நான்​தான். எப்​போதும் போல உங்​களோடு நான் நிற்​கிறேன். போர்க்​குண​முள்ள சிங்​கத்​தின் கால்​களும்பழுதுப​டாது, அதன் சீற்​ற​மும் குறை​யாது. மக்​களுக்​காக கொடுக்​கும்​ அதன்​ கர்​ஜனை​யும்​ மாறாது. இவ்​வாறு தெரிவித்​துள்​ளார்​.

    டிஜிபியிடம் புகார்: தனது அதி​காரப்​பூர்வ எக்ஸ் மற்​றும் முகநூல் கணக்​கு​களை அன்​புமணி ஆதர​வாளர்​கள் முடக்கி வைத்​திருப்​ப​தாக டிஜிபி சங்​கர் ஜிவாலிடம் ராம​தாஸ் புகார் மனு அளித்​துள்​ளார். அதில், சமூகவலைதள கணக்​கு​களின் கடவுச்​சொற்​கள் மாற்​றப்​பட்​டுள்​ளன, மேலும் அந்த கடவுச்​சொற்​களை மீட்​டெடுக்க தேவை​யான தகவல்​கள் வேறொரு​வருக்கு வழங்​கப்​பட்​டதாக குறிப்​பிட்​டுள்​ளார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    குறையாத வெயிலின் தாக்கம்: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

    July 13, 2025
    மாநிலம்

    சிறுமுகை அருகே நீரில் மூழ்கத் தொடங்கிய காந்தையாற்று பாலம்!

    July 13, 2025
    மாநிலம்

    ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ : 2-ம் கட்ட சுற்றுப்பயணத்தை அறிவித்தார் இபிஎஸ்

    July 13, 2025
    மாநிலம்

    சென்னை மாநகர பேருந்து, மெட்ரோ ரயில், ஆட்டோவில் பயணிக்க ஒரே பயணச்சீட்டு – விரைவில் செயலி அறிமுகம்

    July 13, 2025
    மாநிலம்

    ‘கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்?’ – ‘ப’ வடிவ இருக்கை குறித்து அன்புமணி கருத்து

    July 13, 2025
    மாநிலம்

    ஓராண்டுக்கு மேலாகியும் பி.எட். பட்டச் சான்றிதழ் வழங்கப்படவில்லை: அரசுக்கு அன்புமணி கண்டனம்

    July 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இங்கிலாந்து விசா கிடைத்ததா? 5 ஐரோப்பிய நாடுகள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் கூடுதல் ஆவணங்கள் இல்லாமல் பார்வையிடலாம்
    • இஸ்ரேல் DROR-1 செயற்கைக்கோளை அறிமுகப்படுத்துகிறது: ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 பவர்ஸ் மிஷன்; டிஜிட்டல் பேலோட் உள்நுழைவு – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘உங்களது அரசமைப்பு பற்று போற்றத்தக்கது’ – நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் வாழ்த்து
    • PSG vs Chelsea: ஃபிபா கிளப் உலகக் கோப்பை ஃபைனலை நேரலையில் எங்கு பார்க்கலாம்?
    • குறையாத வெயிலின் தாக்கம்: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.