Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»மேற்கு வங்கம், கேரளா, தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: அமித் ஷா நம்பிக்கை
    தேசியம்

    மேற்கு வங்கம், கேரளா, தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: அமித் ஷா நம்பிக்கை

    adminBy adminJuly 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மேற்கு வங்கம், கேரளா, தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: அமித் ஷா நம்பிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருவனந்தபுரம்: பாஜக மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, அபிமானம் அதிகரித்து வருகிறது. அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல்களிலும் பாஜக மாபெரும் வெற்றி பெறும்.மேற்கு வங்கம், கேரளா, தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பாஜகவின் புதிய தலைமை அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று திறந்து வைத்தார். பின்னர், பாஜக நிர்வாகிகள், வார்டு தலைவர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியினரால் பாஜக தொண்டர்கள் கொல்லப்படுகின்றனர். நாம் நூற்றுக்கணக்கான தியாகிகளை இழந்துவிட்டோம். நமது கட்சியை ஆட்சியில் அமர்த்துவதுதான் நமது நோக்கம். வரும் உள்ளாட்சி தேர்தலில் பாஜக 21,000 வார்டுகளில் போட்டியிடும். 25 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று, பெரும்பாலான வார்டுகளில் பாஜக வெற்றி பெறும்.

    பாஜகவை வடநாட்டு கட்சி என காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். திரிபுராவில் கம்யூனிஸ்ட் ஆட்சியை அகற்றி நாம் ஆட்சி அமைத்துள்ளோம். மக்களவை தேர்தலில் தெலங்கானாவில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளோம். அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல்களிலும் நாம் மாபெரும் வெற்றியை பெறுவோம். அந்த வகையில், மேற்கு வங்கம், கேரளா, தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும். கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு கேரள மக்கள் 11 சதவீத ஓட்டுகளை வழங்கினர். 2019-ம் ஆண்டில் 16 சதவீத ஓட்டுகளையும், 2024-ம் ஆண்டில் 20 சதவீத ஓட்டுகளையும் வழங்கியுள்ளனர். பாஜக மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, அபிமானம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது பாஜக ஆட்சி அமைக்கும் தருணம் வந்துவிட்டது. பிரதமர் மோடி தலைமையின் கீழ் நாம் ஆட்சி அமைக்கப்போகிறோம்.

    தீவிரவாதம் எந்த வகையில் இருந்தாலும் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. 2026 மார்ச் மாதத்துக்குள், நக்சல் அச்சுறுத்தலில் இருந்து நாடு விடுபடும். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பிரதமர் பதிலடி கொடுத்தார். சமீபத்தில் கேரளாவில் விழிஞ்சம் துறைமுகத்தை தொடங்கி வைத்தோம். வளர்ச்சியடைந்த இந்தியாவை பிரதமர் மோடி உருவாக்குவார். கேரளாவில் இடது ஜனநாயகமுன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய இரண்டும் ஊழலில் ஈடுபட்டுள்ளன. கேரள முதல்வர் பினராயி விஜயன் தற்போது வெளிநாடு சென்றுள்ளார். கடந்த 2020-ல் நடந்த தங்க கடத்தல் ஊழல் கேரளாவில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல். ஐக்கிய ஜனநாயக ஆட்சியில் தான் மதுபான விடுதி ஊழல், சோலார் பேனல் ஊழல் வழக்குகள் எல்லாம் வெளியே வந்தன.

    ஆனால், கடந்த 11 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் மோடி அரசு மீது எதிர்க்கட்சிகளால் ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூட சுமத்த முடியவில்லை. இடது ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய இரண்டும் கேரளாவை வன்முறை, ஊழலின் மையமாக மாற்றிவிட்டன. இவ்வாறு அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஏமனில் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.8.60 கோடி குருதிப் பணம் தர செவிலியர் நிமிஷா பிரியா குடும்பத்தார் முயற்சி

    July 13, 2025
    தேசியம்

    நாய் கடித்ததால் ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு 20 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற 95 வயது மூதாட்டி

    July 13, 2025
    தேசியம்

    இந்தியாவில் சமத்துவமின்மை வேகமாக குறைகிறது: பிரதமர் மோடி பெருமிதம்

    July 13, 2025
    தேசியம்

    590 வேத பண்டிதர்களுக்கு மாதம் ரூ.3,000 ஊக்கத்தொகை: ஆந்திர அறநிலையத் துறை அமைச்சர் அறிவிப்பு

    July 13, 2025
    தேசியம்

    சித்தராமையா, டி.கே.சிவகுமார் மீது ராகுல் அதிருப்தி: சந்திக்க மறுத்ததால் கர்நாடக அரசியலில் சர்ச்சை

    July 13, 2025
    தேசியம்

    நீதித்துறையில் குறைகளை களைவது அவசியம்: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தல்

    July 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘சிக்ஸர் மன்னன்’ ரிஷப் பந்த் – தோனி சாதனை சமன்!
    • தமிழ் சினிமாவின் தாரக மந்திரம் நாகேஷ்: கஸ்தூரி ராஜா புகழாரம்
    • ‘சாரி மா மாடல் சர்க்கார்’ – அஜித்குமாருக்கு நீதி கேட்கும் போராட்டத்தில் திமுக மீது விஜய் விமர்சனம்
    • இது மார்பு வலி என்று நினைக்கிறீர்களா? மாரடைப்பு மற்றும் இருதயக் கைதுக்கான பொதுவான எச்சரிக்கை அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள், எப்போது உதவியை நாட வேண்டும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பாண்டிச்சேரி பிரிமியர் லீக்: காரைக்கால் நைட்ஸ் வெற்றி!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.