Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேகத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கவில்லை: அதிமுக குற்றச்சாட்டு
    மாநிலம்

    திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேகத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கவில்லை: அதிமுக குற்றச்சாட்டு

    adminBy adminJuly 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேகத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கவில்லை: அதிமுக குற்றச்சாட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்தும் நிதி ஒதுக்கப்படவில்லை என்று அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

    அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக உள்ள திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் ஆலயத்தில் வரும் 14-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. கடைசியாக அதிமுக ஆட்சியில் கடந்த 2011-ஆம் ஆண்டு திருப்பரங்குன்றத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து, 14 ஆண்டகளுக்கு பிறகு தற்போதுதான் கும்பாபிஷேகம் நடக்கிறது.

    இது குறித்து திருப்பரங்குன்றம் எம்எல்ஏ-வும், அதிமுக அமைப்பு செயலாளருமான விவி.ராஜன் செல்லப்பா கூறியது: “சட்டமன்றத்தில் கும்பாபிஷேகத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என நான் கூறினேன். அதற்கு, முதல்வர் அனுமதி பெற்று வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். இதுவரை அவர் கூறியபடி நிதி ஒதுக்கப்படவில்லை. கும்பாபிஷேகத்துக்கு தனியார் பங்களிப்புதான் அதிகமாக உள்ளது. கும்பாபிஷேக பணிகள் குறித்து அமைச்சர்களுடைய ஆய்வுக்கு பிறகு, என்ன நடக்கிறது என்பது வெளிப்படையாக தெரியவில்லை.

    தமிழகம் முழுவதும் இருந்து திருப்பரங்குன்றம் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு மக்கள் வருவார்கள். அவர்கள் தரிசிக்கக் கூடிய வகையில், உரிய வழிகாட்டு நெறிமுறைகளை நிர்வாகம் செய்ய வேண்டும். திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறுவதற்கு என்ன ஏற்பாடுகள் செய்தார்களோ, அதேபோன்று உரிய பாதுகாப்பையும் மக்களுக்கு அளிக்க வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவரும், உள்ளூர் அமைச்சர்களும் உடனடியாக கலந்து ஆலோசித்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

    23 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ரோப் கார் வசதி அமைய வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில், அந்த நிலை என்னவென்று தற்போது வரை தெரியவில்லை. அதேபோல மல்டி கார் பார்க்கிங் அமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம், அதுவும் நிறைவேற்றப்படவில்லை. திருப்பரங்குன்றம் பகுதியை பொறுத்தவரை தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.

    தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள் என்பதால் அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். அதேபோல வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் முறைப்படுத்த வேண்டும்,’’ என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பாதுகாப்பு துறை ஓய்வூதியர்களுக்காக 12 மாவட்டங்களில் நேரடி குறைதீர் மையங்கள்

    July 13, 2025
    மாநிலம்

    லெவல் கிராசிங்கில் கேட் கீப்பர்கள் மிக கவனமாக பணியாற்ற வேண்டும்: ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தல்

    July 13, 2025
    மாநிலம்

    கூட்டணிக்கு அதிமுக வந்தால் ‘முதல்வர் வேட்பாளர்’ நிபந்தனையை தளர்த்திக் கொள்வாரா விஜய்? – சி.டி.ஆர். நிர்மல்குமார் நேர்காணல்

    July 13, 2025
    மாநிலம்

    ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை 77 லட்சத்தை தாண்டியதாக முதல்வர் ஸ்டாலின் தகவல்

    July 13, 2025
    மாநிலம்

    திருமலா பால் நிறுவன மேலாளர் மரண வழக்கில் அரசியல் பின்புலம் இல்லை: காவல் ஆணையர் அருண் விளக்கம்

    July 13, 2025
    மாநிலம்

    “அதிமுக குடும்ப கட்சி இல்லை… மக்களின் கட்சி!” – எடப்பாடி பழனிசாமி பேச்சு

    July 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 2 வெள்ளி பதக்கம் வென்றார் ஜோதி!
    • ‘பீனிக்ஸ்’ சூர்யா சேதுபதிக்காக எழுதியது இல்லை: அனல் அரசு
    • பாதுகாப்பு துறை ஓய்வூதியர்களுக்காக 12 மாவட்டங்களில் நேரடி குறைதீர் மையங்கள்
    • வாட்ச்: என்.ஆர்.ஐ.க்கள் ‘கங்கா ஆர்த்தி’ கனடிய ரிவர் பேங்க்; தீப்பொறிகள் கலப்பு பதில் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஏமனில் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.8.60 கோடி குருதிப் பணம் தர செவிலியர் நிமிஷா பிரியா குடும்பத்தார் முயற்சி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.