Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பெண் வழக்கறிஞர் புகாரில் பழநி முருகன் கோயில் காவலாளி கைது  – நடந்தது என்ன?
    மாநிலம்

    பெண் வழக்கறிஞர் புகாரில் பழநி முருகன் கோயில் காவலாளி கைது  – நடந்தது என்ன?

    adminBy adminJuly 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பெண் வழக்கறிஞர் புகாரில் பழநி முருகன் கோயில் காவலாளி கைது  – நடந்தது என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பழநி: பழநி முருகன் கோயிலுக்கு வந்த பெண் வழக்கறிஞர் கொடுத்த புகாரின் பேரில் கோயில் காவலாளி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவலாளிகள், வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில், தனியார் நிறுவனம் மூலம் பழநி ஆண்டவர் பூங்கா ரோடு பகுதியைச் சேர்ந்த மதுரை வீரன் (27) என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு மலைக்கோயிலில் மின் இழுவை ரயிலில் (வின்ச்) டிக்கெட் வழங்கும் பணியில் இருந்துள்ளார். அப்போது, அவருக்கும், பழநி கணபதி நகரை சேர்ந்த வழக்கறிஞர் பிரேமலதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    பின்னர், அடிவாரம் வந்த பிரேமலதா, தன்னை அவதூறாகப் பேசி, தாக்கியதாக காவலாளி மதுரை வீரன் உட்பட 5 பேர் மீது போலீஸில் புகார் செய்தார். இதனடிப்படையில் மதுரை வீரனை அடிவாரம் போலீஸார் இன்று விசாரணைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து, தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, காவலாளி தரப்பில் வழக்கறிஞர் பிரேமலதா மீது புகார் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஒருதலைபட்சமாக செயல்பட்டு காவலாளி மதுரை வீரனை மட்டும் கைது செய்ததைக் கண்டித்து, பழநி மலைக்கோயிலில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட காவலாளிகள், அடிவாரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, வழக்கறிஞர் பிரேமலதாவுக்கு ஆதரவாக காவலாளி மதுரை வீரன் உள்ளிட்டோரை கைது செய்யக் கோரி, பழநி நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதித்தது.

    இதையடுத்து, காவலாளி மதுரை வீரனை போலீஸார் கைது செய்தனர். அவரை போலீஸார் அழைத்து செல்ல முயன்றபோது, போலீஸாரை தடுத்து நிறுத்தி, காவலாளிகள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், மீண்டும் காவலாளியை போலீஸார், காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    தகவலறிந்து வந்த பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி ஆகியோர் அடிவாரம் காவல் நிலையத்தில் துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன், ஆய்வாளர் மணிமாறன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். காவலாளிகள் போராட்டத்தால் ரோப் கார், வின்ச் ரயில் நிலையம், பேட்டரி கார் சேவை பாதிக்கப்பட்டு, பக்தர்கள் சிரமப்பட்டனர்.

    இதற்கிடையில், காவலாளிக்கும், பெண் வழக்கறிஞருக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பாக பக்தர் ஒருவர் எடுத்த வீடியோ, சமூக வளைதலங்களில் பரவி வருகிறது. அதில் காவலாளி எந்த தவறும் செய்யவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    நீலகிரி: ஒரே வீட்டு எண்ணில் 79 வாக்காளர்கள் இருப்பதாக புகார்

    September 16, 2025
    மாநிலம்

    மாநில செயலாளர் எனும் மாபெரும் பொறுப்பு: வாழ்த்திய தலைவர்களுக்கு மு.வீரபாண்டியன் நன்றி

    September 16, 2025
    மாநிலம்

    16-வது நிதிக் குழுவின் கீழ் சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்: அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தல்

    September 16, 2025
    மாநிலம்

    ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் எவை? – பட்டியல் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்

    September 16, 2025
    மாநிலம்

    நன்கொடை தராததால் நற்பெயரைக் கெடுத்தாரா? – மதிமுக மாவட்டச் செயலாளர் – காங்கிரஸ் எம்எல்ஏ மல்லுக்கட்டு!

    September 16, 2025
    மாநிலம்

    ஈரோடு, சேலம், வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

    September 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தயாரிப்பாளர் சங்கம் – பெப்சி இணைந்து பணியாற்ற முடிவு
    • நீலகிரி: ஒரே வீட்டு எண்ணில் 79 வாக்காளர்கள் இருப்பதாக புகார்
    • ஜெய்டன் டேனியல்ஸ் காயம் புதுப்பிப்பு: தளபதிகளின் கியூபி முழங்கால் சுளுக்கு கண்டறியப்பட்டது; மீட்பு எவ்வளவு நேரம் எடுக்கும்? – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாசா எச்சரிக்கை! பெரிய சிறுகோள் 2025 FA22, குதுப் மினரை விட உயரமான, பூமியைக் கடந்த 24,000 மைல் வேகத்தில் பறக்க; நாம் கவலைப்பட வேண்டுமா | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மாநில செயலாளர் எனும் மாபெரும் பொறுப்பு: வாழ்த்திய தலைவர்களுக்கு மு.வீரபாண்டியன் நன்றி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.