Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»சத்தீஸ்கரில் ரூ.1.18 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட 23 மாவோயிஸ்டுகள் சரண்
    தேசியம்

    சத்தீஸ்கரில் ரூ.1.18 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட 23 மாவோயிஸ்டுகள் சரண்

    adminBy adminJuly 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சத்தீஸ்கரில் ரூ.1.18 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட 23 மாவோயிஸ்டுகள் சரண்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சுக்மா: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 23 மாவோயிஸ்டுகள் காவல்துறையினர் முன்பு சரணடைந்தனர். இவர்களைப் பற்றிய தகவல் தருவோருக்கு மொத்தமாக ரூ.1.18 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையை மத்திய அரசும், மாநில காவல்துறையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பல முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்கள், காமாண்டோக்கள் கடந்த சில மாதங்களில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனையடுத்து பல மாவோயிஸ்டுகள் தற்போது காவல்துறையிடம் சரணடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில், சுக்மாவில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 9 பெண்கள் உட்பட 23 மாவோயிஸ்டுகள் இன்று சரணடைந்தனர். இவர்களில் பலர் உயர் பதவியில் உள்ள மாவோயிஸ்டுகள் ஆவர். இவர்களை பற்றிய தகவல் வழங்குவோருக்கு தனித்தனியாக ரூ1.18 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.

    சுக்மா காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கூட்டு முயற்சியின் காரணமாக இவர்கள் சரணடைந்தனர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகள் சரணடைதல் நிகழ்ச்சி சுக்மா காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான் மற்றும் சிஆர்பிஎஃப் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆனந்த் சிங் முன்னிலையில் நடைபெற்றது.

    நேற்று சுக்மாவுக்கு அருகில் உள்ள நாடான்பூர் மாவட்டத்தில் 22 மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்த நிலையில், இன்று சுக்மாவில் 23 பேர் சரணடைந்துள்ளனர். இன்று சரணடைந்த மாவோயிஸ்டுகளில் ஒருவர் 2012-ம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனனை கடத்தியதில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது இந்த கடத்தல் சம்பவம் தேசிய அளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    திருச்சி உட்பட மேலும் 5 விமான நிலையங்களில் விரைவாக குடியேற்ற ஒப்புதல் வழங்க வசதி: அமித் ஷா தொடங்கி வைத்தார்

    September 12, 2025
    தேசியம்

    நாளை மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி

    September 12, 2025
    தேசியம்

    இந்தியா – மொரீஷியஸ் இடையே 10 ஒப்பந்தம்: பிரதமர்கள் மோடி, நவீன் முன்னிலையில் கையெழுத்து

    September 12, 2025
    தேசியம்

    குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்: நிகழ்ச்சியில் ஜகதீப் தன்கர் பங்கேற்பு

    September 12, 2025
    தேசியம்

    ராஜஸ்தானில் மதமாற்றம்: சென்னையில் பயிற்சி அளித்தது அம்பலம்

    September 12, 2025
    தேசியம்

    கேரளாவில் அமீபா தொற்று: உயிரிழப்பு 6 ஆக உயர்வு

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தயாரிப்பாளர் சங்கம் – ஃபெப்சி பிரச்சினைக்கு சுமுக தீர்வு: வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்
    • சியா, ஆளி, எள் மற்றும் பெருஞ்சீரகம் விதைகளை நீங்கள் எப்போது சாப்பிட வேண்டும்? AIIMS பயிற்சி பெற்ற காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் வெளிப்படுத்துகிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • திருச்சி உட்பட மேலும் 5 விமான நிலையங்களில் விரைவாக குடியேற்ற ஒப்புதல் வழங்க வசதி: அமித் ஷா தொடங்கி வைத்தார்
    • கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
    • வெட்டப்பட்ட பழங்களை பழுப்பு நிறமாக மாற்றுவதைத் தடுப்பது எப்படி: பயனுள்ள உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்களை அறிந்து கொள்ளுங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.