Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஐஐஎம் கொல்கத்தா மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: போலீஸார் தீவிர விசாரணை
    தேசியம்

    ஐஐஎம் கொல்கத்தா மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: போலீஸார் தீவிர விசாரணை

    adminBy adminJuly 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஐஐஎம் கொல்கத்தா மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: போலீஸார் தீவிர விசாரணை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஐஐஎம் (IMM) கல்வி நிறுவன வளாகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆண்டு பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடந்த மாதம் (ஜூன்) தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரி வளாகத்திற்குள் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்நிலையில், அந்தக் கொடூரச் சம்பவம் நடந்தேறிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு, கொல்கத்தாவில் உள்ள ஐஐஎம் (IMM) கல்வி நிறுவன வளாகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது,

    மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் அமைந்துள்ளது ஐஐஎம் கல்வி நிறுவனம். இந்தக் கல்லூரி வளாகத்தில் சக மாணவர் ஒருவரால், 2-ம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து அப்பெண் வெள்ளிக்கிழமை போலீஸில் புகாரளித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், தற்போது அந்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    மாணவி தனது புகாரில் கூறியுள்ளதாவது: கவுன்சிலிங் என்ற பெயரில் ஆண்கள் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பின்னர் குற்றம் சாட்டப்பட்ட மாணவர் கொடுத்த போதைப்பொருள் கலந்த பானத்தை குடித்த பிறகு தான் சுயநினைவை இழந்ததாகவும், சுயநினைவு திரும்பியதும், தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை அறிந்ததாகவும் அம்மாணவி தெரிவித்துள்ளார்.

    இந்தச் சம்பவம் குறித்து வெளியே சொன்னால் கடுமையான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அம்மாணவர் தன்னை மிரட்டியதாக அப்பெண் தெரிவித்துள்ளார். மேலும் இந்தச் சம்பவம் அக்கல்லூரி வளாகத்தில் உள்ள ஆண்கள் விடுதிக்குள் நடந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே, “இந்த சம்பவம் கல்லூரி விடுதிக்குள் நடந்தது. ஐஐஎம் இயக்குநரிடம் அறிக்கை கேட்டுள்ளேன். சட்டம் ஒழுங்கு என்பது மாநிலப் பிரச்சினை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பார்கள்,” என்று மத்திய கல்வித் துறை இணையமைச்சர் சுகந்தா மஜும்தார் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்: துப்பாக்கிச் சண்டையில் 2 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

    September 12, 2025
    தேசியம்

    திருச்சி உட்பட மேலும் 5 விமான நிலையங்களில் விரைவாக குடியேற்ற ஒப்புதல் வழங்க வசதி: அமித் ஷா தொடங்கி வைத்தார்

    September 12, 2025
    தேசியம்

    நாளை மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி

    September 12, 2025
    தேசியம்

    இந்தியா – மொரீஷியஸ் இடையே 10 ஒப்பந்தம்: பிரதமர்கள் மோடி, நவீன் முன்னிலையில் கையெழுத்து

    September 12, 2025
    தேசியம்

    குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்: நிகழ்ச்சியில் ஜகதீப் தன்கர் பங்கேற்பு

    September 12, 2025
    தேசியம்

    ராஜஸ்தானில் மதமாற்றம்: சென்னையில் பயிற்சி அளித்தது அம்பலம்

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஹம்மிங் பறவைகளை ஈர்க்க 6 சிறந்த பூக்கள்: உங்கள் தோட்டத்திற்கு தேன் நிறைந்த தாவரங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்: துப்பாக்கிச் சண்டையில் 2 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை
    • தயாரிப்பாளர் சங்கம் – ஃபெப்சி பிரச்சினைக்கு சுமுக தீர்வு: வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்
    • சியா, ஆளி, எள் மற்றும் பெருஞ்சீரகம் விதைகளை நீங்கள் எப்போது சாப்பிட வேண்டும்? AIIMS பயிற்சி பெற்ற காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் வெளிப்படுத்துகிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • திருச்சி உட்பட மேலும் 5 விமான நிலையங்களில் விரைவாக குடியேற்ற ஒப்புதல் வழங்க வசதி: அமித் ஷா தொடங்கி வைத்தார்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.