Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»‘வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் 17 உரைகள்’ – மோடிக்கு பாஜக பாராட்டு; காங்கிரஸ் விமர்சனம்
    தேசியம்

    ‘வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் 17 உரைகள்’ – மோடிக்கு பாஜக பாராட்டு; காங்கிரஸ் விமர்சனம்

    adminBy adminJuly 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் 17 உரைகள்’ – மோடிக்கு பாஜக பாராட்டு; காங்கிரஸ் விமர்சனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: வெளிநாடுகளின் நாடாளுமன்றங்களில் காங்கிரஸ் பிரதமர்களுக்கு இணையாக பிரதமர் நரேந்திர மோடி 17 உரைகளை ஆற்றியுள்ளார். இதற்காக தனது எக்ஸ் தளத்தில் பாஜக பெருமிதம் தெரிவித்த நிலையில், காங்கிரஸ் இதனைக் கடுமையாக விமர்சித்துள்ளது.

    பிரதமர் மோடி சமீபத்தில் ஐந்து நாடுகளுக்கு விஜயம் செய்து, கானா, டிரினிடாட்&டொபாகோ மற்றும் நமீபியா நாடாளுமன்றங்களில் உரையாற்றினார். கடைசியாக நமீபியா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, அந்நாட்டு எம்பிக்கள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.

    இது, பிரதமர் மோடி வெளிநாட்டு எம்.பிக்கள் இடையே ஆற்றிய 17-வது உரை. இதன் சிறப்பு என்னவெனில், இது அவருக்கு முன் இருந்த அனைத்து காங்கிரஸ் பிரதமர்களின் மொத்த உரைகளுக்கும் சமமானது. இதை தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்ட பாஜக தலைமை, பிரதமர் மோடி மீது பெருமிதம் தெரிவித்தது.

    இது குறித்து பாஜகவின் எக்ஸ் தளத்தில், ‘பிரதமர் மோடி வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் இதுவரை 17 உரைகளை நிகழ்த்தியுள்ளார். இது பல தசாப்தங்களாக காங்கிரஸ் பிரதமர்கள் அனைவரும் ஆற்றிய உரைகளுக்கு சமம். காங்கிரஸ் பிரதமர்கள் பல தலைமுறைகளாக ஆற்றியதை அவர் ஒரே தசாப்தத்தில் சாதித்துள்ளார். இது உலகளவில் மிகவும் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக அவரது நற்பெயரை உறுதிப்படுத்துகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடிக்கு முன்பாக அப்பதவியிலிருந்த காங்கிரஸ் பிரதமர்கள் ஆற்றிய உரைகளின் எண்ணிக்கையும் அப்பதிவில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன்படி, ஜவஹர்லால் நேரு (3), இந்திரா காந்தி (4), ராஜீவ் காந்தி (2), நரசிம்ம ராவ் (1) மற்றும் மன்மோகன் சிங் (7) என இவர்கள் மொத்தம் 17 உரைகளை நிகழ்த்தியுள்ளனர்.

    அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் இரண்டு முறை வெளிநாடுகளின் நாடாளுமன்றங்களில் உரையாற்றினார். ஜனதாவின் பிரதமரான மொரார்ஜி தேசாய் ஒரே ஒரு நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றி இருந்தார். பிரதமர் மோடி 2014-ல் ஆஸ்திரேலியா, பிஜி, பூட்டான் மற்றும் நேபாள நாடாளுமன்றங்களில் உரையாற்றினார். 2015 -ல் மொரீஷியஸ், மங்கோலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இலங்கை நாடாளுமன்றங்களில் உரையாற்றினார். 2016-ல் அவர் அமெரிக்க காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்திலும், 2023 இல் அதே நாட்டிலும் மீண்டும் உரையாற்றினார்.

    உகண்டா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, 2018-ல் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து 2019-ல் மாலத்தீவு, 2024-ல் கயானா, இந்த ஆண்டு, கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் நமீபியா நாடாளுமன்றங்களில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தி உள்ளார்.

    காங்கிரஸ் விமர்சனம்: பாஜகவின் பெருமிதத்தை விமர்சிக்கும் வகையில் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், செய்தி தொடர்புப் பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ், ’இந்தியா தனது சூப்பர் பிரீமியம், அடிக்கடி பறக்கும் பிரதமரை வரவேற்கிறது. அவர் மூன்று வாரங்களுக்கு நாட்டில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், மீண்டும் விமானத்தில் பயணம் செய்வார்.

    இப்போது அவர் இங்கு இருப்பதால், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் அவருக்காகக் காத்திருந்த மணிப்பூரைப் பார்வையிட அவருக்கு நேரம் கிடைக்கும். பஹல்காம் பயங்கரவாதிகள் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படாததற்கான காரணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள். அவரது சொந்த மாநிலத்தில் உள்கட்டமைப்பு சரிவுகளைப் பற்றி சிந்தியுங்கள்; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்திற்கு உதவி வழங்குங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    அகமதாபாத் விமான விபத்து: எரிபொருள் சப்ளை நின்றதே விபத்துக்கு காரணம் – முதல்கட்ட அறிக்கை கூறுவது என்ன?

    July 13, 2025
    தேசியம்

    காங்கிரஸ் அரசுகளைவிட மோடி அரசு கேரளாவுக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது: அமித்ஷா

    July 12, 2025
    தேசியம்

    சத்தீஸ்கரில் ரூ.1.18 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட 23 மாவோயிஸ்டுகள் சரண்

    July 12, 2025
    தேசியம்

    ஐஐஎம் கொல்கத்தா மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: போலீஸார் தீவிர விசாரணை

    July 12, 2025
    தேசியம்

    இளைஞர்கள்தான் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்துக்கான உத்தரவாதம்: பிரதமர் மோடி

    July 12, 2025
    தேசியம்

    முதற்கட்ட அறிக்கையை வைத்து எந்த ஒரு முடிவுக்கும் வர வேண்டாம்: விமான போக்குவரத்து அமைச்சர்

    July 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிகளில் பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்த உத்தரவு
    • அட்லி படத்தில் 4 கதாபாத்திரங்களில் அல்லு அர்ஜுன்!
    • உலக பாரம்பரிய சின்னமானது செஞ்சி கோட்டை: பாரிஸில் நடந்த யுனெஸ்கோ கூட்டத்தில் அறிவிப்பு
    • அகமதாபாத் விமான விபத்து: எரிபொருள் சப்ளை நின்றதே விபத்துக்கு காரணம் – முதல்கட்ட அறிக்கை கூறுவது என்ன?
    • ‘லகான்’ இயக்குநர் இயக்கத்தில் ரிஷப் ஷெட்டி!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.