Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘திருமலா பால்’ மேலாளர் மர்ம மரண விவகாரம்: மாதவரம் காவல் ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
    மாநிலம்

    ‘திருமலா பால்’ மேலாளர் மர்ம மரண விவகாரம்: மாதவரம் காவல் ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

    adminBy adminJuly 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘திருமலா பால்’ மேலாளர் மர்ம மரண விவகாரம்: மாதவரம் காவல் ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ​திரு​மலா பால் நிறுவன மேலா​ளர் மர்ம மரணம் விவ​காரத்​தில் மாதவரம் குற்​றப்​பிரிவு காவல் ஆய்​வாளர் காத்திருப்போர் பட்​டியலுக்கு மாற்​றப்​பட்​டுள்​ளார். மேலும், கொளத்​தூர் துணை ஆணை​யர் அன்​றாட பணி​களை மேற்​கொள்ள தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. ஆந்​திர மாநிலம், கிருஷ்ணா மாவட்​டம் வையூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் நவீன் பொலினேனி (37).

    திரு​மண​மாகி குடும்​பத்​துடன் சென்னை புழல் அடுத்த பிரிட்​டானியா நகர், முதல் தெரு​வில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் வசித்து வந்​தார். இவர் சென்னை மாதவரம் காவல் நிலைய எல்​லைக்கு உட்​பட்ட பொன்​னி​யம்​மன்​மேட்​டில் உள்ள திரு​மலா பால் நிறு​வனத்​தில் கடந்த மூன்​றரை ஆண்​டு​களாக கரு​வூல மேலா​ள​ராக பணி​யாற்றி வந்​தார்.

    இந்​நிலை​யில், அண்​மை​யில் திரு​மலா பால் நிறு​வனம் அவர்​களது நிறுவன வரவு- செலவு கணக்​கு​களை சரி​பார்த்து தணிக்கை செய்​துள்​ளது. அப்​போது, ரூ.40 கோடி முறை​கேடு நடந்​திருப்​பது தெரிய​வந்​தது. நவீன் அந்த பணத்தை கையாடல் செய்​த​தாக​வும், அந்த பணத்தை அவரது குடும்​பத்​தினர் மற்​றும் நண்​பரின் வங்கி கணக்​குக்கு மாற்றி மோசடி​யில் ஈடு​பட்​ட​தாக​வும் குற்​றம் ​சாட்டப்​பட்​டது.

    இதுதொடர்​பாக அந்​நிறு​வனம் சார்​பில் கடந்த மாதம் 25-ம் தேதி கொளத்​தூர் காவல் மாவட்ட துணை ஆணை​யர் பாண்​டிய​ராஜனிடம் புகார் தெரிவிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, போலீ​ஸார் நவீனை நேரில் வரும்​படி கூறி போனில் அழைத்து விசாரித்ததாகவும், அப்​போது, ‘பணத்தை திருப்பி கொடுத்து விடு​கிறேன். என் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டாம்’ என போலீஸாரிடம் நவீன் கேட்​டுக் கொண்​ட​தாக​வும் கூறப்​படு​கிறது. இதுத​விர மேலும் சிலர் நெருக்​கடி கொடுத்​த​தாக​வும் தெரி​கிறது.

    இந்​நிலை​யில், கடந்த புதன்​கிழமை இரவு அவர் வீட்​டருகே உள்ள குடிசை​யில் தூக்​கில் தொங்​கிய நிலை​யில் நவீன் சடலமாக கிடந்​தார். தகவல் அறிந்து வந்த புழல் போலீ​ஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்​காக ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். போலீஸ் விசா​ரணைக்கு பயந்து நவீன் தற்​கொலை செய்து கொண்​டாரா அல்​லது யாரேனும் அவரை கொலை செய்து தூக்​கில் தொங்க விட்​டனரா என்ற கோணத்​தில் போலீ​ஸார் விசா​ரணையை தொடங்​கினர்.

    விசா​ரணை தொடங்​க​வில்லை: இதற்​கிடை​யில், ‘நவீன் மீது கொளத்​தூர் துணை ஆணை​யர் பாண்​டிய​ராஜனிடம் நிறு​வனம் அளித்த புகா​ரானது விசா​ரணைக்​காக புழல் உதவி ஆணை​யருக்கு அனுப்​பப்​பட்​டு, அவர் மூல​மாக மாதவரம் காவல் நிலைய குற்​றப்​பிரிவு ஆய்​வாளர் விஜய​பாஸ்​கருக்கு அனுப்​பப்​பட்​டிருந்​தது. இதில் விசா​ரணை தொடங்​கப்​பட​வில்​லை. அவரை காவல் நிலை​யம் அழைத்து விசா​ரிக்​க​வும் இல்​லை. மேலும், கடைசி​யாக நவீன் அவரது சகோ​தரி, அவர் பணி செய்த பால் நிறு​வனத்​துக்​கும் மின்​னஞ்​சல் அனுப்பி இருந்​தார். அதில், காவல்​துறையை பற்றி எது​வும் குற்​றம்​சாட்​ட​வில்​லை’ என காவல் ஆணை​யர் தரப்​பில் விளக்​கம் அளிக்​கப்​பட்​டது.

    காவல் இணை ஆணையர்… இந்​நிலை​யில், நவீன் மரணம் தொடர்​பாக சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணை​யர் திஷா மித்​தல் விசா​ரணையை தொடங்கி உள்​ளார். முதல்​கட்​ட​மாக மாதவரம் குற்​றப்​பிரிவு காவல் ஆய்​வாளர் விஜய​பாஸ்​கர் காத்​திருப்​போர் பட்​டியலுக்கு மாற்​றப்​பட்​டுள்​ளார். அதே​போல் கொளத்​தூர் துணை ஆணை​யர் பாண்​டிய​ராஜனை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​துக்கு வரவழைத்து போலீஸ் அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர்.

    மேலும், விசா​ரணை முடி​யும்​வரை அவருக்​கான துணை ஆணை​யர் பணி​கள் எதை​யும் கவனிக்க கூடாது என தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. தின​மும் அவர் காவல் ஆணையர் அலுவலகம் வர வேண்​டும் எனவும் உத்​தரவிடப்​பட்​டுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள் அமைக்க தமிழக அரசு அறிவுறுத்தல்

    July 12, 2025
    மாநிலம்

    ‘செஞ்சிக் கோட்டையில் சுற்றுலா மேம்பாட்டுக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துக’ – அன்புமணி கோரிக்கை

    July 12, 2025
    மாநிலம்

    ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்டதா? – விசாரணை கோரும் கே.பாலு

    July 12, 2025
    மாநிலம்

    அரசமைப்பு சட்டப் பிரிவு 370 மீதான விமர்சனம்: ஆளுநர் ரவிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

    July 12, 2025
    மாநிலம்

    திருவக்கரை வக்கரகாளியம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி நள்ளிரவில் தரிசனம்!

    July 12, 2025
    மாநிலம்

    ‘திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்டதாகவே தெரிகிறது’ – சென்னை காவல் ஆணையர்

    July 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள் அமைக்க தமிழக அரசு அறிவுறுத்தல்
    • உங்கள் சிறந்த பதிப்பாக மாறுவதற்கான நடைமுறை படிகள்
    • ஐஐஎம் கொல்கத்தா மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: போலீஸார் தீவிர விசாரணை
    • ‘செஞ்சிக் கோட்டையில் சுற்றுலா மேம்பாட்டுக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துக’ – அன்புமணி கோரிக்கை
    • எக்ஸ்எஃப்ஜி ‘ஸ்ட்ராடஸ்’ கோவிட் -19 மாறுபாடு வேகமாக பரவுகிறது: மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்ற ஒரு தனித்துவமான அறிகுறி – இந்தியாவின் டைம்ஸ்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.