Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அதிமுக உள்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கெடு – முழு விவரம்
    மாநிலம்

    அதிமுக உள்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கெடு – முழு விவரம்

    adminBy adminJuly 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அதிமுக உள்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கெடு – முழு விவரம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ‘அ​தி​முக உட்​கட்சி விவ​காரம் தொடர்​பான மனுக்​கள் மீது எப்​போது முடி​வு எடுக்​கப்​படும் என கால​வரம்பை குறிப்​பிட்​டு, ஜூலை 21-ம் தேதிக்​குள் எழுத்​துப்​பூர்​வ​மாக விளக்​கம் தரவேண்​டும்’ என தேர்​தல் ஆணை​யத்​துக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

    இதுதொடர்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: அதி​முக உட்​கட்சி விவ​காரம் தொடர்​பாக அளிக்​கப்​பட்ட புகார்​கள் மீதான ஆரம்​பக்​கட்ட விசா​ரணையை நடத்தி முடிக்க தேர்​தல் ஆணை​யத்​துக்கு கால​வரம்பு நிர்​ண​யிக்க வேண்​டும். 2026 சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு தயா​ராக வேண்​டி​யுள்ள சூழலில், கட்சி விரோத நடவடிக்​கை​களில் ஈடு​படு​வோர், இதை தங்​களுக்கு சாதக​மாகப் பயன்​படுத்த வாய்ப்​பு உள்​ளது. இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

    நீதிப​தி​கள் ஆர்​.சுப்பி​ரமணி​யன், கே.சுரேந்​தர் அமர்​வில் இந்த மனு விசா​ரணைக்கு வந்​தது. அப்போது நடந்த வாதம்:

    பழனி​சாமி தரப்​பு: சென்னை உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி தேர்​தல் ஆணை​யம் விசா​ரணை நடத்தி 2 மாதங்​கள் நிறைவடைந்த பின்​னரும், இதுவரை எந்த உத்​தர​வும் பிறப்​பிக்​க​வில்​லை. இது​போன்ற வழக்​கு​களில் 3 மாதங்​களில் முடி​வெடுக்க வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

    தேர்​தல் ஆணை​யம் தரப்​பு: இந்த விவ​காரத்​தில் 6 புகார்​கள் வந்​துள்​ளன. அவற்றை ஒவ்​வொன்​றாக பரிசீலித்து உத்​தர​வு​கள் பிறப்​பிக்​கப்​படும்.

    நீதிப​தி​கள்: அரசி​யல் சாசன அமைப்​பான தேர்​தல் ஆணை​யம் உரிய நேரத்​தில் உத்​தரவு பிறப்​பிக்​கா​விட்​டால் தங்​கள் அரசி​யல் சாசன கடமையை செய்ய தவறுகிறார்​கள் அல்​ல​வா? இதில் தேர்​தல் ஆணை​யம் தயக்​கம் காட்​டு​வது ​போல தெரி​கிறது. குடியரசுத் தலை​வருக்கு உச்ச நீதி​மன்​றம் கால​வரம்பு நிர்​ண​யித்​துள்ள நிலை​யில் தேர்​தல் ஆணை​யம் குடியரசு தலை​வரை​விட உயர்ந்​த​தா?

    தேர்​தல் ஆணை​யம் தரப்பு: அரசி​யல் சாசனத்​தில் உயர்ந்த அதி​காரி, தாழ்ந்த அதி​காரி என்று யாரும் இல்​லை. அனைவரும் சமமானவர்​களே. இந்த விவ​காரத்​தில் எப்​போது முடிவு எடுக்​கப்​படும் என அதி​காரி​களை கேட்டு தெரிவிக்​கிறோம். இவ்வாறு வாதம் நடந்தது. இரு தரப்புவாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், அதி​முக உட்​கட்சி விவ​காரம் தொடர்​பானபுகார்​கள் மீது எப்​போது முடி​வு எடுக்​கப்​படும் என கால​வரம்பை குறிப்​பிட்டுஎழுத்​துப்​பூர்​வ​மான விளக்​கத்தை தேர்தல் ஆணையம் ஜூலை 21-க்​குள் தாக்​கல்செய்ய வேண்​டும்’’ என உத்​தர​விட்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அலுவலக ஊழியர் லஞ்சம் கேட்டதாக அரசு மருத்துவர் புகாரால் பரபரப்பு

    September 15, 2025
    மாநிலம்

    “அரசியலில் சொகுசுக்கு இடமில்லை!” – ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் பேச்சு

    September 15, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: ஈரோடு, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

    September 15, 2025
    மாநிலம்

    “நடிகர் அஜித் வந்தாலும் கூட்டம் வரத்தான் செய்யும்” – விஜய் பிரச்சாரம் குறித்து சீமான் விமர்சனம்

    September 15, 2025
    மாநிலம்

    “விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும்” – கார்த்தி சிதம்பரம் எம்.பி கருத்து

    September 15, 2025
    மாநிலம்

    வக்பு சட்டம் | ஆட்சியர் அதிகாரம் உள்ளிட்ட சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கேரளாவில் அமீபா தொற்றுக்கு இதுவரை 18 பேர் உயிரிழப்பு; பாதிப்பு 67 ஆக அதிகரிப்பு
    • ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அலுவலக ஊழியர் லஞ்சம் கேட்டதாக அரசு மருத்துவர் புகாரால் பரபரப்பு
    • ஒரு நாளைக்கு 3 அல்லது 6 உணவு? எப்படி, எப்போது சாப்பிட வேண்டும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘கெஞ்சியும் கேட்கவில்லை…’ – டெல்லியில் பிஎம்டபுள்யூ விபத்தில் உயிரிழந்த அரசு அதிகாரி மனைவி வாக்குமூலம்
    • “அரசியலில் சொகுசுக்கு இடமில்லை!” – ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் பேச்சு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.