Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஒப்புதல் மனை பிரிவுகளின் பொது ஒதுக்கீட்டு இடங்களின் பயன்பாட்டை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
    மாநிலம்

    ஒப்புதல் மனை பிரிவுகளின் பொது ஒதுக்கீட்டு இடங்களின் பயன்பாட்டை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

    adminBy adminJuly 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஒப்புதல் மனை பிரிவுகளின் பொது ஒதுக்கீட்டு இடங்களின் பயன்பாட்டை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள மனைப்பிரிவுகளில், பொது ஒதுக்கீடு இடங்கள் அதன் உபயோகங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்ய, நகர ஊரமைப்பு இயக்குநர் பா.கணேசன் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: விரிவான மனை அபிவிருத்தி திட்டங்கள் தயாரிக்கப்படும்போது, ஒப்புதல் அளிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் உள்ள பொது ஒதுக்கீடு இடங்கள், விரிவான அபிவிருத்தி திட்டங்களின் பொது ஒதுக்கீடாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பொது ஒதுக்கீடு இடங்கள், நகர ஊரமைப்பு சட்டத்தின்கீழ் கையகப்படுத்தப்படவில்லை என்று நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாவட்டநகர ஊரமைப்பு அலுவலகம் மூலம் அந்த இடங்கள் விடுவிக்கப்படுவது தெரியவருகிறது.

    நீதிமன்ற உத்தரவு: இத்தகைய மனைப்பிரிவு பொது ஒதுக்கீடுகளுக்கு, தமிழ்நாடு நகர ஊரமைப்பு சட்டத்தின்கீழ் விடுவிப்பது பொருந்தாது. உச்சநீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றவழக்குகளில், ஒப்புதல் அளிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் பொது உபயோக ஒதுக்கீடுகளாக உத்தேசிக்கப்பட்டுள்ள இடங்களை அதன் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    எனவே உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற வழக்குகள், நகராட்சி நிர்வாக இயக்குநர் சுற்றறிக்கை மற்றும் நகர ஊரமைப்பு இயக்குநர் சுற்றறிக்கை ஆகியவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள மனைப்பிரிவுகளில் பொது ஒதுக்கீடுகளாக உத்தேசிக்கப்பட்டுள்ள திருமண மண்டபம், சமுதாய நலக்கூடம், சிறுவர் பள்ளி போன்ற இடங்களை வேறு எவ்வித உபயோகத்துக்கும் மாற்ற அம்மனைப்பிரிவில் உள்ள பூங்கா, திறந்த இடம், சிறுவர் விளையாடுமிடம் போன்ற பொது ஒதுக்கீட்டு இடங்கள் 10 சதவீதம் நிலை நிறுத்தப்பட்டுள்ளதை, அசல் மனைப்பிரிவு வரைபடம், அசல் செயல்முறை ஆணை மற்றும் அசல் மனைப்பிரிவு நிபந்தனைகள் போன்ற உண்மையான உத்தரவுகளை கொண்டு உறுதி செய்ய வேண்டும்.

    அதன்பின், இதர விற்பனைக்குரிய பொது ஒதுக்கீடுகளை வேறு உபயோகங்களுக்கு மாற்றம் செய்ய கோரும் விண்ணப்பங்களின் மீது ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மகனுக்குப் பதில் மகளுக்கு மகுடம்! – மருத்துவர் அய்யா போடும் மனக் கணக்கு

    July 12, 2025
    மாநிலம்

    மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்களால் மண்டையடி!- கூண்டோடு ராஜினாமா வைத்தியம் கொடுத்த திமுக தலைமை

    July 12, 2025
    மாநிலம்

    ‘திருமலா பால்’ மேலாளர் மர்ம மரண விவகாரம்: மாதவரம் காவல் ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

    July 12, 2025
    மாநிலம்

    பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடாவிட்டால் நாதக விரைவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும்: சீமான்

    July 12, 2025
    மாநிலம்

    3 முக்கிய தீவிரவாதிகள் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் கைது: மாறுவேடத்தில் இருந்தபோது பிடிபட்டதாக டிஜிபி விளக்கம்

    July 12, 2025
    மாநிலம்

    கலப்பட உரம், போலி விதையை தடுக்க கடும் சட்டங்கள்: மத்திய ஜவுளி, வேளாண் துறை அமைச்சர்கள் உறுதி

    July 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இமாச்சலில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 9 பேர் உடல்கள் 150 கி.மீ. தூரத்தில் மீட்பு
    • ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’, ‘அவதார்’ போல… – கனவுப் படம் ‘வேள்பாரி’ குறித்து ஷங்கர் பேசியது என்ன?
    • மகனுக்குப் பதில் மகளுக்கு மகுடம்! – மருத்துவர் அய்யா போடும் மனக் கணக்கு
    • அத்தை மகனை திருமணம் செய்ததால் ஒடிசாவில் காதல் ஜோடிக்கு நூதன தண்டனை
    • T20 WC 2026: முதல் முறையாக தகுதி பெற்றது இத்தாலி!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.