கும்பகோணம் / விழுப்புரம்: பாமக-வன்னியர் சங்க தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: ஐந்து வயது குழந்தைபோல நான் உள்ளதாக ஒருவர் (அன்புமணி) கூறினார். அந்தக் குழந்தைதான் 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரை தலைவராக்கியது. தந்தை சொல்மிக்கமந்திரம் இல்லை.
எனவே, என் பேச்சை கேட்கவில்லை என்பதால், அவர் எனது பெயரை பயன்படுத்தக் கூடாது. எனது இனிஷியலை வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.
ராமதாஸ் வீட்டில் அன்புமணி: பாமக நிறுவனர் ராமதாஸ் கும்பகோணத்துக்கு சென்றுள்ள நிலையில், தைலாபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அன்புமணி சென்றார்.
ராமதாஸின் முன்னாள் உதவியாளர் நடராஜனின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக திண்டிவனம் சென்ற அன்புமணி, நேற்று இரவு தைலாபுரம் ராமதாஸ் வீட்டுக்குச் சென்று, தாயார் சரஸ்வதியை சந்தித்து, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.