Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மதுரை மாநகராட்சியில் ‘பதவி’ எதிர்பார்த்து காய் நகர்த்திய கவுன்சிலர்கள் ஏமாற்றம்!
    மாநிலம்

    மதுரை மாநகராட்சியில் ‘பதவி’ எதிர்பார்த்து காய் நகர்த்திய கவுன்சிலர்கள் ஏமாற்றம்!

    adminBy adminJuly 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மதுரை மாநகராட்சியில் ‘பதவி’ எதிர்பார்த்து காய் நகர்த்திய கவுன்சிலர்கள் ஏமாற்றம்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவர்கள் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில், புதியவர்கள் தேர்வு வரும் சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை இருக்காது என தகவல் வெளியாகியுள்ளது. அதனால், பதவிகளை எதிர்பார்த்த கவுன்சிலர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

    மதுரை மாநகராட்சியில் திமுகவைச் சேர்ந்த வாசுகி, சரவண புவனேஷ்வரி, பாண்டிச் செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா ஆகிய 5 பேர் மண்டலத் தலைவர்களாக இருந்தனர். இவர்களில் வாசுகி அமைச்சர் பி.மூர்த்தி ஆதரவாளராகவும், சரவண புவனேஷ்வரி, முகேஷ் சர்மா மாநகர திமுக செயலாளர் கோ.தளபதி ஆதரவாளர்களாகவும், பாண்டிச்செல்வி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆதரவாளராகவும், சுகிதா புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.மணிமாறன் ஆதரவாளராகவும் செயல்பட்டனர்.

    இவர்களிடம் ராஜினாமா கடிதம் பெற்றதால் பதவிகள் காலியாக உள்ளன. மண்டலத் தலைவர்கள் பதவிகளைப் பிடிக்க ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள திமுக கவுன்சிலர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அந்தப் பதவிகளை பிடிக்க தங்கள் ஆதரவு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களை வட்டமிடத் தொடங்கினர்.

    ஆனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை மண்டலத் தலைவர் பதவிகளுக்கு புதியவர்களை நியமிக்கும் யோசனை திமுக தலைமைக்கு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை புதிய மண்டலத்தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு இல்லை’ என்றனர்.

    திமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘புதியவர்களைத் தேர்ந்தெடுத்தால், இப்பதவி கிடைக்காதவர்கள் ஏமாற்றமடைந்து அவர்கள் கட்சிப் பணிகளில் ஈடுபடாமல் சோர்வடைவார்கள். கட்சி மேலிடம் புதியவர்களை நியமிக்க ஆர்வம் காட்டாவிட்டாலும் திடீரென அறிவிப்பு வரவும் வாய்ப்புள்ளது. அப்படி அறிவிப்பு வந்து மண்டலத் தலைவர்களைத் தேர்வு செய்வதாக இருந்தால் மாநகராட்சியைப் பொருத்தவரை மாவட்டச் செயலாளர் பரிந்துரையை மட்டும் நம்பி தேர்வு செய்யாமல், குற்ற பின்னணி, குடும்ப பின்னணி உள்ளிட்ட பல்வேறு தகவல்களை உளவுத்துறை மூலம் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளவே வாய்ப்புள்ளது.

    ஏனெனில் சில பெண் மண்டலத் தலைவர்களின் கணவர்களே தலைவர்களாகச் செயல்பட்டனர். அவர்கள் வரம்பு மீறி நிர்வாகத்தில் தலையிட்டுள்ளனர். அதுவும் இனி முழுமையாகத் தடுக்கும் விதமாகத்தான் நியமனம் இருக்கும்’ என்றனர். இதற்கிடையே ராஜினாமா செய்த மண்டலத் தலைவர்களின் அறைகளுக்கு பூட்டு போடப்பட்டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திரு​மலா பால் நிறு​வன மேலா​ளர் மர்ம மரணம்: காவல் துறை விசாரணை மீது இபிஎஸ் சந்தேகம்

    July 11, 2025
    மாநிலம்

    “வீட்டில் எனது நாற்காலிக்கு அருகே அதிநவீன ஒட்டு கேட்கும் கருவி…” – ராமதாஸ் பகிர்ந்த தகவல்

    July 11, 2025
    மாநிலம்

    மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த விசிக நிர்வாகிகளுக்கு திருமாவளவன் உத்தரவு

    July 11, 2025
    மாநிலம்

    “ஆளுநர் அதிகாரங்களில் முதல்வர் தலையிடக் கூடாது” – மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

    July 11, 2025
    மாநிலம்

    ‘இபிஎஸ் முதல்வரான பிறகு அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி’ – கார்த்தி சிதம்பரம்

    July 11, 2025
    மாநிலம்

    புதுக்கோட்டையின் 6 தொகுதிகளிலும் திமுகவே போட்டியிட வேண்டும் – போர்க்கொடி தூக்கும் தொண்டர்கள்!

    July 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • லார்ட்ஸ் டெஸ்ட்டில் பும்ரா அபாரம்: இங்கிலாந்து 387 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்: ENG vs IND
    • ஜூலை 15 முதல் பழநி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை 31 நாட்களுக்கு நிறுத்தம்
    • திரு​மலா பால் நிறு​வன மேலா​ளர் மர்ம மரணம்: காவல் துறை விசாரணை மீது இபிஎஸ் சந்தேகம்
    • போகிமொன் குரல் நடிகர் ஜேம்ஸ் கார்ட்டர் காட்கார்ட் தொண்டை புற்றுநோயுடன் போருக்குப் பிறகு இறந்துவிடுகிறார்: தொண்டை புற்றுநோய் அறிகுறிகள் மற்றும் முக்கிய தடுப்பு உதவிக்குறிப்புகள் தெரிந்து கொள்ளுங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பூஜா, சவுபின் அசத்தல்… ‘கூலி’ படத்தின் ‘மோனிகா’ பாடல் வீடியோ எப்படி?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.