Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»மைசூரு மருத்துவமனைகளில் இதயப் பரிசோதனைக்காக குவியும் மக்கள் – பின்னணி என்ன?
    தேசியம்

    மைசூரு மருத்துவமனைகளில் இதயப் பரிசோதனைக்காக குவியும் மக்கள் – பின்னணி என்ன?

    adminBy adminJuly 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மைசூரு மருத்துவமனைகளில் இதயப் பரிசோதனைக்காக குவியும் மக்கள் – பின்னணி என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மைசூரு: கர்​நாடக மாநிலத்​தில் உள்ள ஹாச‌ன் மாவட்​டத்​தில் கடந்த 40 நாட்​களில் 45 வயதுக்​குட்​பட்ட‌ 23 பேர் மாரடைப்பு காரணமாக திடீரென உயி​ரிழந்​தனர். இதனால் பீதியடைந்த மக்கள் மைசூருவில் உள்ள பிரபல ஜெயதேவா மருத்துவமனையில் இதயப் பரிசோதனை செய்துகொள்வதற்காக குவிகின்றனர். அதிகாலை தொடங்கி இரவு வரை காத்திருந்து இதய செயல்பாடு குறித்த பரிசோதனைகளை செய்து கொண்டு செல்கின்றனர். மருத்துவமனையில் மக்கள் கூட்டம் நிரம்பிவழியும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மருத்துவமனை தரப்பும், ஹாசன் மாவட்டத்தில் 45 வயதுக்​குட்​பட்ட‌ 23 பேர் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்​த செய்திகள் பரவிய பின்னரே இந்த அளவுக்குக் கூட்டம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

    மருத்துவ கண்காணிப்பாளரின் அறிவுரை: இது குறித்து மைசூரு ஜெயதேவா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்ட கேஎஸ் சதானந்த் கூறுகையில், “ஊடக செய்திகளைப் பார்த்துவிட்டு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஜெயதேவா மருத்துவமனையில் இதயப் பரிசோதனை செய்து கொள்வது மட்டுமே பிரச்சினையைத் தீர்த்துவிடாது. மேலும், மக்கள் இந்த மருத்துவமனையை மட்டுமே நாடுவதை விடுத்து, அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கும் செல்லலாம்.

    இதயப் பரிசோதனை செய்து கொள்வது மட்டும் எதிர்காலத்தில் இதய நோய் ஏற்படுவதைத் தடுத்துவிடாது. மக்கள் தங்களின் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை அவசியம். அதைவிடுத்து அனைவரும் இங்கே குவிந்தால், ஏற்கெனவே உள்நோயாளிகளாக இருக்கும் இதயக் கோளாறு உள்ளவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்க இயலாமல் போய்விடும். வதந்திகளை நம்ப வேண்டாம்.” என்றார்.

    பின்னணி என்ன? கர்நாடக மாநிலத்​தில் உள்ள ஹாச‌ன் மாவட்​டத்​தில் கடந்த 40 நாட்​களில் 45 வயதுக்​குட்​பட்ட‌ 23 பேர் மாரடைப்பு காரணமாக திடீரென உயி​ரிழந்​தனர். இவர்களில் 6 பேர் 19 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். இதே​போல கதக் மாவட்​டத்​தி​லும் 20-க்​கும் மேற்​பட்​டோர் திடீர் மாரடைப்​பால் உயி​ரிழந்​தனர். இந்நிலையில், மைசூரு ஜெயதேவா மருத்துவமனையிலும், அதன் பெங்களூரு கிளையிலும் இதயப் பரிசோதனைக்காக வருவோரின் எண்ணிக்கை சமீப நாட்களில் 8% அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் ஹாசன் மற்றும் சுற்றுவட்டார மாவட்டஙக்ளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

    ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பு: இதற்கிடையில் திடீர் மரணங்கள் குறித்து ஆய்வு செய்​வதற்​காக கர்​நாடக அரசு 10 மருத்​து​வர்​கள் அடங்​கிய நிபுணர் குழுவை அமைத்​தது. மருத்​து​வ நிபுணர் குழு சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் தினேஷ் குண்​டு​ரா​விடம் ஆய்​வறிக்​கையை சமர்ப்​பித்​தது.

    அதனை பெற்​றுக்​கொண்ட பின்​னர்​,​ தினேஷ் குண்டு ராவ் கூறிய​தாவது: கரோனா தொற்று பரவலுக்கு பிறகு மாரடைப்​பு​கள் சற்று உயர்ந்​துள்​ளதை அறிக்கை உறுதி செய்​துள்​ளது. அதேவேளை​யில் கரோனா தடுப்​பூசி​யால் இந்த பாதிப்பு ஏற்​பட​வில்லை என்று குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. கரோனா தொற்​றுக்கு ஆளான நபர்​களுக்கு நீரிழி​வு, ரத்த அழுத்த நோய் தாக்​கம் அதி​கரித்​துள்​ளது. திடீர் மாரடைப்​புக்கு இது​வும் ஒரு காரணம் என்று அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது

    இளம்​வயது மாரடைப்பு மரணங்​களை தடுக்க மருத்​து​வ​மனை தவிர பிற இடங்​களில் மாரடைப்பு காரண​மாக உயி​ரிழந்​தால் கட்​டா​யம் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்​டும். அப்​போது தான் உயி​ரிழப்​புக்கு சரி​யான காரணம் என்ன என்​பது தெரிய​வரும். இவ்​வாறு தினேஷ் குண்​டு​ராவ்​ தெரிவித்​தார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    1,500 பெண்களை மதம் மாற்றிய ஜுங்கூர் பாபா: தர்கா முன்பு மோதிரங்கள் விற்றவர்

    July 11, 2025
    தேசியம்

    ஏமனில் கேரள செவிலியரை காப்பாற்ற மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மனு: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

    July 11, 2025
    தேசியம்

    மாணவிகளின் ஆடைகளை களைந்து சோதனை: பள்ளி முதல்வர், ஊழியர் கைது

    July 11, 2025
    தேசியம்

    ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா மீண்டும் எழுச்சி பெறுகிறது: முதல்வர் ஒமர் அப்துல்லா மகிழ்ச்சி

    July 11, 2025
    தேசியம்

    இந்​திரா காந்தி அமல்​படுத்திய அவசர நிலை – ஒரு கருப்பு அத்தியாயம்: சசி தரூர் விமர்சனம்

    July 11, 2025
    தேசியம்

    அது என்ன ‘SIR’? – பிஹார் வாக்காளர் பட்டியலில் ‘சிறப்புத் தீவிர திருத்தம்’ சலசலப்பும் பின்னணியும்!

    July 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சச்சின் டெண்டுல்கரின் உருவப்படம் எம்சிசி அருங்காட்சியகத்தில் திறப்பு!
    • ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை 50 லட்சத்தை தாண்டியதாக ஸ்டாலின் பெருமிதம் 
    • லாப்ரடோர் Vs கோல்டன் ரெட்ரீவர்: முதல் முறையாக உரிமையாளர்களுக்கு எந்த நாய் இனம் சிறந்தது?
    • 1,500 பெண்களை மதம் மாற்றிய ஜுங்கூர் பாபா: தர்கா முன்பு மோதிரங்கள் விற்றவர்
    • இங்கிலாந்துக்கு எதிராக முதன்முறையாக டி20 தொடரை வென்றது இந்திய மகளிரணி!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.