Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தனியார் மயமாக்கல், தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்ப பெற கோரி ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    மாநிலம்

    தனியார் மயமாக்கல், தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்ப பெற கோரி ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    adminBy adminJuly 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தனியார் மயமாக்கல், தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்ப பெற கோரி ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: மத்​திய தொழிற்​சங்​கங்​களின் நாடு தழு​விய பொது வேலை நிறுத்​தத்​தின் ஒரு பகு​தி​யாக, பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, சென்​னை​யில் எழும்​பூர், சென்ட்​ரல், பெரம்​பூர் உள்​ளிட்ட பல்​வேறு இடங்​களில் எஸ்​ஆர்​எம்​யு, டிஆர்​இ​யு, எஸ்​ஆர்​இஎஸ் உள்​ளிட்ட ரயில்வே தொழிற்​சங்​கத்​தினர் நேற்று கண்டன ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

    தனி​யார்​மய​மாக்​கல், பெரு (கார்ப்​பரேட்) நிறு​வனங்​களுக்கு ஆதர​வான மத்​திய அரசின் கொள்​கைகளை கண்​டித்​து, மத்​திய தொழிற்​சங்​கங்​கள் சார்​பில், நாடு தழு​விய வேலை நிறுத்​தம் நேற்று நடை​பெற்​றது. இதன் ஒரு பகு​தி​யாக, தெற்கு ரயில்வே மஸ்​தூர் யூனியன் (எஸ்​.ஆர்​.எம்​.​யு.) சார்​பில், தெற்கு ரயில்​வே​யில் கிளை​கள் வாரி​யாக கண்டன ஆர்ப்​பாட்​டம் நேற்று நடை​பெற்​றது.

    தொழிலா​ளர் விரோத, 4 சட்ட தொகுப்​பு​களை திரும்​பப் பெறு​வது, ரயில்​வேயை தனி​யார்​மய​மாக்​கு​வதை கைவிடு​வது உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, சென்னை ரயில்வே கோட்​டத்​தில் எழும்​பூர், சென்ட்​ரல் உட்பட பல்​வேறு இடங்​களில் கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. எழும்​பூரில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் எஸ்​ஆர்​எம்யு துணை பொதுச்​செய​லா​ள​ரும், சென்னை கோட்ட தலை​வரு​மான பால் மேக்​ஸ்​வெல் தலைமை வகித்​துப் பேசி​னார்.

    புதிய பென்​ஷன் திட்​டத்தை நீக்​கி​விட்​டு, பழைய பென்​ஷன் திட்​டத்தை அமல்​படுத்​து​வது உட்பட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, தட்​ஷிண ரயில்வே தொழிலா​ளர்​கள் சங்​கம் (டிஆர்​இ​யு) சார்​பில், தெற்கு ரயில்​வே​யின் பல்​வேறு கிளை​களில் கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. சென்னை சென்ட்​ரலில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் டிஆர்​இயு பொதுச்​செய​லா​ளர் ஹரிலால் கலந்​து​கொண்டு பேசி​னார்.

    எல்ஐசி மண்டல அலுவலக வாயிலில் வங்கி மற்றும்

    காப்பீட்டு ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    படம்: ம.பிரபு

    ரயில்வே பணி​யாளர் தேர்வு வாரி​யம் மூல​மாக, ரயில்வே காலி பணி​யிடங்​களை நிரப்​புவது, 8-வது ஊதி​யக் குழு​வுக்​கான விதி​முறை​களை உறு​தி​செய்​வது உட்பட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, தென்னக ரயில்வே ஊழியர்​கள் சங்​கம் (எஸ்​ஆர்​இஎஸ்) சார்​பில், சென்​னை​யில் பல்​வேறு இடங்​களில் கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

    பெரம்​பூர் லோகோ ஒர்க்ஸ் பணிமனை​யில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் அச்​சங்​கத்​தின் செயல் தலை​வர் சூர்​யபிர​காஷ், நிர்வாக பொதுச்​செய​லா​ளர் சந்​திரசேகர் ஆகியோர் பங்​கேற்​றுப் பேசினர்.

    இதற்​கிடை​யில், கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, ஹிந்த் மஸ்​தூர் சபா சார்​பில், அண்​ணா​சாலை தபால் நிலை​யம் முன்பு நடை​பெற்ற மறியல் போராட்​டத்​தில் எஸ்​ஆர்​எம்யு தலை​வரும், ஹிந்த் மஸ்​தூர் சபா தலை​வரு​மான ராஜா தர் கலந்து கொண்​டார். இதில் 13 தொழிற்​சங்​கங்​களை சேர்ந்த தலை​வர்​கள், தொண்​டர்​கள் என 1,000 பேர்​ கைது செய்​யப்​பட்​டனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “அதிமுக ஆட்சி நீடித்திருந்தால் இந்தி பேசும் நிலை உருவாகி இருக்கும்!” – உதயநிதி ஸ்டாலின்

    July 11, 2025
    மாநிலம்

    அறநிலையத் துறையிடம் இருந்து கோயில்களை காப்பாற்ற வேண்டும்: ஹெச்.ராஜா

    July 11, 2025
    மாநிலம்

    பழநி கோயில் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்களா? – நிர்வாகம் மறுப்பு

    July 11, 2025
    மாநிலம்

    மதுரை மாநகராட்சியில் ‘பதவி’ எதிர்பார்த்து காய் நகர்த்திய கவுன்சிலர்கள் ஏமாற்றம்!

    July 10, 2025
    மாநிலம்

    “சிறுபான்மை மக்களுக்கு திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை”- விழுப்புரத்தில் பழனிசாமி பேச்சு

    July 10, 2025
    மாநிலம்

    நாதகவின் ஆடு – மாடுகளின் மாநாடு: மதுரையில் சீமான் பேசியது என்ன?

    July 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இடைநிலை ஆசிரியர்கள் 2,342 பேர் பணி நியமனம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
    • சர்வதேச திரைப்பட விழாக்களில் வரவேற்பு பெறும் ‘மரியா’
    • “அதிமுக ஆட்சி நீடித்திருந்தால் இந்தி பேசும் நிலை உருவாகி இருக்கும்!” – உதயநிதி ஸ்டாலின்
    • ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனை: நீங்கள் முதலில் பார்க்கும் விலங்கு உங்கள் உண்மையான தன்மையை வெளிப்படுத்துகிறது – இந்தியாவின் நேரங்கள்
    • அறநிலையத் துறையிடம் இருந்து கோயில்களை காப்பாற்ற வேண்டும்: ஹெச்.ராஜா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.