Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்ததில் 13 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
    தேசியம்

    குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்ததில் 13 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

    adminBy adminJuly 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்ததில் 13 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வடோதரா: குஜராத் மாநிலத்தில் ஆற்றுப் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்தனர்.

    குஜராத் மாநிலம் வடோதரா மாவட் டம் பத்ரா தாலுகாவில் மஹிசாகர் (மஹி) ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கம்பீரா – முஜிப்புர் பகுதிகளை இணைக்கும் பாலம் இருந்தது. வழக்கம்போல நேற்று காலை வாகனங்களில் ஏராளமானோர் பள்ளி, கல்லூரிகளுக்கும், வேலைக்கும் சென்று கொண்டிருந்தனர்.

    திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து ஆற்றில் விழுந்தது. இதனால் பாலத்தில் சென்ற பலர் வாகனங்களுடன் ஆற்றில் விழுந்தனர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஆற்றில் நீந்திச்சென்று பலரை மீட்டனர். தகவலறிந்துவிரைந்துவந்த போலீஸார், தீயணைப்புப் படையினர், மாநில மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

    இந்த பாலம் ஆனந்த் மாவட்டத்தையும், வடோதரா மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. பாலம் இடிந்து விழுந்தது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட்டது.

    முதல்கட்ட விசாரணையில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த 2 டிரக்குகள், எஸ்யுவி கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றில் விழுந்தது தெரியவந்துள்ளது. பாலம் இடிந்து விழுந்ததை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறும்போது, ‘‘பாலத்தில் விரிசல் விடும் சப்தம் பயங்கரமாக கேட்டது. சில விநாடிகளில் பாலத்தின் ஒரு பகுதி அப்படியே இடிந்து விழுந்தது’’ என்றனர்.

    பத்ரா எம்எல்ஏ சைதன்யாசின் ஜலா உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு நடத்தினார். இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறும்போது, ‘‘மத்திய குஜராத்தையும், சவுராஷ்டிரா பகுதியையும் இணைக்கும் முக்கிய பாலமாக இது இருந்தது. இந்த பாலத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இதை பராமரிக்காமல் அலட்சியமாக விட்டுவிட்டனர். இங்கு போக்குவரத்து நெரிசல் மட்டுமன்றி, அடிக்கடி தற்கொலை செய்து கொள்வதற்கான இடமாகவும் இருந்தது. பலமுறை இது தொடர்பாக அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும், எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்றனர்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் அமத் சைதா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘ஆனந்த் – வடோதரா மாவட்டங் களை இணைக்கும் முக்கிய பாலமாக இது இருந்தது. தற்போது பாலம் இடிந்துவிட்டதால், உடனடியாக மாற்று வழிக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.

    குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தோருக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உட்பட பலர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    பிரதமர் மோடி இரங்கல்: பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “குஜராத் பாலம் இடிந்து 13 பேர் இறந்ததற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், குஜராத் மாநில அரசு சார்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், முழு மருத்துவ சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்கும் என்றும் முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    கர்​நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு ரூ.4.5 கோடியில் தங்க, வைர ஆபரணங்கள் வழங்கிய இளையராஜா

    September 12, 2025
    தேசியம்

    பாக். கும்பல் அறிவுறுத்தலின்படி தீவிரவாத தாக்குதலுக்கு சதி செய்த 5 பேரை கைது செய்தது டெல்லி போலீஸ்

    September 12, 2025
    தேசியம்

    சமூக மாற்றத்துக்கு வாழ்க்கையை அர்ப்பணித்தவர் மோகன் பாகவத்: 75-வது பிறந்த நாளில் பிரதமர் புகழாரம்

    September 12, 2025
    தேசியம்

    சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் என்கவுன்ட்டர்: 10 நக்சலைட்கள் சுட்டுக் கொலை

    September 12, 2025
    தேசியம்

    நேபாள கலவரத்தில் சிக்கித் தவித்த ஆந்திர சுற்றுலா பயணிகள் 144 பேர் தாயகம் திரும்பினர்

    September 12, 2025
    தேசியம்

    பாஜகவுக்கு வாக்களிப்பது கேரள கலாச்சாரத்தை அழித்துவிடும்: பினராயி விஜயன்

    September 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 130 க்கும் மேற்பட்ட கடைகளில் விற்கப்பட்ட பிரபலமான குக்கீகளை யு.எஸ். எஃப்.டி.ஏ நினைவு கூர்ந்தது, ‘உயிருக்கு ஆபத்தான’ எச்சரிக்கை சிக்கல்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 8 ஆயுதங்களைப் பயன்படுத்துவது எப்படி? ஆக்டோபஸ்கள் அவற்றின் முன் கால்களால் ஆராய முனைகின்றன – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பைஜு பட் சந்திக்கவும்: இந்திய-அமெரிக்க குடியேறியவர் இப்போது இளைய அமெரிக்க பில்லியனர்களிடையே நிகர மதிப்புள்ள… | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கர்​நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு ரூ.4.5 கோடியில் தங்க, வைர ஆபரணங்கள் வழங்கிய இளையராஜா
    • சென்னை மாவட்ட பி-டிவிஷன் வாலிபால் போட்டி தொடக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.