Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டின் உயரிய விருது!
    உலகம்

    பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டின் உயரிய விருது!

    adminBy adminJuly 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டின் உயரிய விருது!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பிரேசில் நாட்டின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் நாடுகளில் பயணத்தை முடித்துள்ள பிரதமர் மோடி தற்போது நமீபியாவுக்கு சென்றுள்ளார்.

    முன்னதாக, பிரேசிலில் நடைபெற்ற 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கடந்த 6, 7-ம் தேதிகளில் உலக தலைவர்களுடன் கலந்துகொண்டு மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து நேற்று நமீபியாவுக்கு அவர் வந்துள்ளார். நமீபியா நாட்டின் விண்ட்ஹோக் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடியை அந்நாட்டின் அதிபர் நெட்டம்போ நந்தி எண்டைட்வா நேரில் வந்து வரவேற்று மகிழ்ந்தார்.

    விமான நிலையத்தில் பாரம்பரிய முறைப்படி கலைஞர்கள் வரவேற்பு அளித்த நிலையில், அவர்கள் வைத்திருந்த டிரம்ஸை வாசித்து பிரதமர் மோடி மகிழ்ந்தார். நமீபியா அதிபருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தும் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.

    முன்னதாக, பிரேசிலில் பிரதமர் மோடிக்கு அந்த நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. பிரேசிலில் பிரதமர் மோடிக்கு 114 குதிரைகளுடன் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரேசில் அதிபர் லூலா டி சில்வா அரண்மனை வாசலில் வந்து நின்று பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு வர்த்தகம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

    அப்போது, பிரதமர் மோடிக்கு பிரேசிலின் உயரிய விருதான ‘தி கிராண்ட் காலர் ஆப் தி நேஷன் ஆர்டர் ஆல் தி சதர்ன் கிராஸ்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

    நமீபியா நாட்டின் விருது: பிரதமர் மோடிக்கு நமீபியா நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆப் தி மோஸ்ட் ஏன்சியன்ட் வெல்விட்ஸ்சியா மிராபிலிஸ்’ என்ற விருதும் வழங்கப்பட்டது. தலைநகர் விண்ட்ஹோக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் அதிபர் நெடும்போ நந்தி-தைத்வா இந்த விருதை வழங்கினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    டெக்சாஸ் பெருவெள்ளம்: இதுவரை 120 பேர் உயிரிழப்பு; 170 பேர் மாயம்

    July 10, 2025
    உலகம்

    பிரேசிலுக்கு 50% வரி; 7 நாடுகளுக்கு 30% வரை வரி – ட்ரம்ப் புதிய முடிவு – எதிர்வினை என்ன?

    July 10, 2025
    உலகம்

    ‘தீங்கு விளைவிக்கும் வழிமுறை’: சீன உதவித்தொகை திட்டத்திற்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு குடியரசுக் கட்சியினர் கடுமையான எச்சரிக்கையை வெளியிடுகிறார்கள்; இதை பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று அழைக்கவும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    July 10, 2025
    உலகம்

    நமீபியா கலைஞர்களுடன் இசைக்கருவியை வாசித்து மகிழ்ந்த பிரதமர் நரேந்திர மோடி

    July 10, 2025
    உலகம்

    பார்பி டால் உண்மையானது: டைப் 1 நீரிழிவு நோயுடன் மேட்டல் புதிய சேகரிப்பைத் தொடங்குகிறார்; ஒரு குளுக்கோஸ் மானிட்டர் மற்றும் ஒரு இன்சுலின் பம்ப் | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    July 9, 2025
    உலகம்

    பார்பி ரியல்: மேட்டல் டைப் 1 நீரிழிவு நோயுடன் புதிய பொம்மையைத் தொடங்குகிறார்; ஒரு குளுக்கோஸ் மானிட்டர் மற்றும் ஒரு இன்சுலின் பம்ப் | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    July 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உள்ளடக்க உருவாக்கியவர் தனது சோபா அட்டையுடன் வைரஸ் ஆடையை வடிவமைக்கிறார் மற்றும் இணையத்தை உடைக்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாதகவின் ஆடு – மாடுகளின் மாநாடு: மதுரையில் சீமான் பேசியது என்ன?
    • 10 ஆண் குழந்தை பெயர்கள் வலிமையைக் குறிக்கின்றன
    • பயிர்க் கடனுக்கான ‘சிபில்’ முறைக்கு எதிராக சென்னையில் விவசாயிகள் உண்ணாவிரதம்
    • இரத்த புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள் நீங்கள் கவனிக்க வேண்டும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.