Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“அஜித்குமாரை தாக்கிய காவலர்கள் ஒரு சதவீத குற்ற உணர்ச்சி கூட இல்லாதவர்கள்” – வைகோ வேதனை
    மாநிலம்

    “அஜித்குமாரை தாக்கிய காவலர்கள் ஒரு சதவீத குற்ற உணர்ச்சி கூட இல்லாதவர்கள்” – வைகோ வேதனை

    adminBy adminJuly 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “அஜித்குமாரை தாக்கிய காவலர்கள் ஒரு சதவீத குற்ற உணர்ச்சி கூட இல்லாதவர்கள்” – வைகோ வேதனை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருப்புவனம்: “மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை அடித்தே கொலை செய்த தனிப்படை போலீஸார் ஒரு சதவீத குற்ற உணர்ச்சிகூட இன்றி சட்டத்தை மீறி மிருகத்தனமாக செயல்பட்டுள்ளனர்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி வேதனை தெரிவித்தார்.

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி, தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட அஜித்குமார் குடும்பத்தினரை சந்தித்து ரூ.1 லட்சம் நிதி உதவி அளித்து ஆறுதல் கூறினார். அப்போது பூமிநாதன் எம்எல்ஏ உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் வைகோ கூறியது: “மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாருக்கு நடக்கக் கூடாத கொடிய சம்பவம் நடந்துள்ளது. காரில் வந்த பெண்மணி காவலாளி மீது நகையைக் காணவில்லை எனப் புகார் அளித்த பின்பு அஜித்குமாரை போலீஸார் சித்திரவதை செய்து உயிர் போகும் வகையில் மிருகங்களாக மாறி அடித்தே கொன்றுள்ளனர்.

    சாத்தான்குளத்தில் தந்தையையும், மகனையும் கொன்றதுபோல அஜித்குமாரையும் கொன்றுள்ளனர். இதில் தமிழக முதல்வர் துரித நடவடிக்கை எடுத்து மக்களுக்கு நம்பிக்கை வரும் என்ற வகையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். புகார் அளித்த பெண்மணி பற்றியும் பல புகார்கள் வருகின்றன. பேராசிரியருக்கு அர்த்தம் தெரியாத அப்பெண்மணி அளித்த புகாரின்படி போலீஸார் விசாரித்திருக்கலாம்.

    ஆனால், சட்டத்தை மீறி மனிதாபிமானமற்ற முறையில் மிருகத்தனமாக தாக்கி ஒரு இளைஞரின் உயிரை பறித்த காவலர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். அவர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனையை நீதிமன்றம் வழங்கும் என்று நம்புகிறேன். இதுபோன்று இனிமேல் நடக்கக் கூடாது. காவல்நிலைய சித்திரவதை மரணங்கள் தமிழகத்தில் மட்டும் அல்ல. பல மாநிலங்களிலும் தொடர்ந்து நடக்கிறது. இது அடியோடு நிறுத்தப்பட வேண்டும்.

    காவலர்கள் தடி கொண்டு தாக்கவோ, வயிற்றில் ஏறி மிதிக்கவோ சட்டம் அனுமதி தரவில்லை. சட்டத்தை மீறிய காவலர்கள் மனிதாபிமானமற்றவர்கள், ஒரு சதவீத குற்ற உணர்ச்சி கூட இல்லாதவர்கள். அதிமுக ஆட்சியில் நடந்த சாத்தான்குளம் தந்தை, மகன் கொலையில் அப்போதைய முதல்வர் பழனிசாமி போராட்டத்துக்கு பிறகுதான் நடவடிக்கை எடுத்தார். இத்தகைய சம்பவம் யார் ஆட்சியில் நடந்தாலும் கண்டிக்கத்தக்கது” என்று அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சென்னையில் 5-வது நாளாக தொடரும் தூய்மை பணியாளர்களின் போராட்டம்: வீட்டு வாடகை கூட தரமுடியவில்லை என வேதனை

    September 13, 2025
    மாநிலம்

    தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்க ரூ.150 கோடி ஒதுக்கீடு: டெண்டர் கோரியது மாநகராட்சி

    September 13, 2025
    மாநிலம்

    மாநிலங்களுக்கு முழு நிதி சுயாட்சி தேவை: காமன்வெல்த் மாநாட்டில் பேரவை தலைவர் அப்பாவு வலியுறுத்தல்

    September 13, 2025
    மாநிலம்

    “பெரியார், காமராஜர் பற்றி விஜய்க்கு 10 நிமிடம் பேசத் தெரியுமா?” – சீமான்

    September 13, 2025
    மாநிலம்

    திருச்சி வந்தடைந்த விஜய்: தொண்டர்கள் குவிந்ததால் பிரச்சார இடத்தை அடைவதில் தாமதம்

    September 13, 2025
    மாநிலம்

    சீ​தா​ராம் யெச்​சூரி​யின் முதலா​மாண்டு நினைவு தினம்: மார்க்​சிஸ்ட் கட்​சி​யினர் உடல் தானம் 

    September 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கண்ணங்குடி அரசு பள்ளியை சிறப்பாக மாற்றிய தலைமை ஆசிரியருக்கு குவியும் விருதுகள்!
    • 50% வரி விதிப்பு இந்தியாவுடனான உறவில் விரிசலை ஏற்படுத்துகிறது: டொனால்டு ட்ரம்ப்
    • சென்னையில் 5-வது நாளாக தொடரும் தூய்மை பணியாளர்களின் போராட்டம்: வீட்டு வாடகை கூட தரமுடியவில்லை என வேதனை
    • பார்க்க சிறுசி… விலையோ பெருசு… கிலோ ரூ.200 ஆக உயர்ந்த சீரக சம்பா அரிசி விலை!
    • எப்போதும் வலியுறுத்தப்பட்டதா? உயர் கார்டிசோல் அமைதியாக மூளை செல்களை ‘கொன்றுவிடுகிறது’, மேலும் நினைவகத்தை கூட பாதிக்கக்கூடும் என்று ஆராய்ச்சி கூறுகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.