Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘மைக் முன் பேசினால் மன்னராக நினைத்துக் கொள்கிறார்கள்’ – பொன்முடி வழக்கில் ஐகோர்ட் கருத்து
    மாநிலம்

    ‘மைக் முன் பேசினால் மன்னராக நினைத்துக் கொள்கிறார்கள்’ – பொன்முடி வழக்கில் ஐகோர்ட் கருத்து

    adminBy adminJuly 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘மைக் முன் பேசினால் மன்னராக நினைத்துக் கொள்கிறார்கள்’ – பொன்முடி வழக்கில் ஐகோர்ட் கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ‘மைக் முன் பேசும் ஒவ்வொருவரும் தங்களை நாட்டின் மன்னர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். இதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வானமே தங்கள் எல்லை என்ற எண்ணத்தில் அரசியல்வாதிகளின் பேச்சுக்களை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது’ என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன், “பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் படி, புகார்கள் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி அதில் முகாந்திரம் இல்லை என்று தெரிய வந்தால் புகாரை காவல்துறையினர் முடித்து வைக்கலாம் . இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட புகார்தாரர்கள் உயர் அதிகாரிகளிடம் மேல் முறையீடு செய்யலாம். இந்த வழக்கை பொறுத்தவரை முன்னாள் அமைச்சருக்கு எதிரான நூற்றுக்கும் மேற்பட்ட புகார்களையும் முடித்து வைக்கப்பட்டது.” எனத் தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து புகார்தாரர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த தலைமை வழக்கறிஞர், “புகார்தாரர்களிடம் வாக்குமூலம் பெற்று அதன் அடிப்படையில் புகார்கள் முடித்து வைக்கப்பட்டிருக்கின்றன.” என்று விளக்கம் அளித்தார்.

    அதற்கு நீதிபதி, “புகார்தாரர்கள் உயர் அதிகாரிகளிடம் மேல் முறையீடு செய்யட்டும். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் இருக்கட்டும்.” என்றார்.

    தொடர்ந்து நீதிபதி, “இதுபோல பேசும் நபர்களின் வாயை கட்டுப்படுத்த இந்த நீதிமன்றம் விரும்புகிறது. மனுதாரர் மட்டுமல்ல அனைத்து அரசியல்வாதிகளும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வானமே தங்கள் எல்லை என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள். அவர்களின் இதுபோன்ற பேச்சுக்களை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரசியல்வாதிகளும் அரசியல் சாசனத்தை பின்பற்ற வேண்டும்.

    ஒருவர் பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு நாம் ஜனநாயக நாட்டில் வசிக்கிறோம் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாடு அனைத்து குடிமக்களுக்குமானது. சம்பந்தப்பட்ட நபருக்கு மட்டுமானது அல்ல.

    ஆரம்பகட்ட விசாரணை என்பது புகாரில் குறிப்பிட்ட சம்பவம் நடந்ததா, இல்லையா? என்பது குறித்து விசாரிப்பது தான். அதன்பிறகு வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அந்த வழக்கின் முடிவை நீதிமன்றம் தீர்மானிக்கும்.

    வேண்டாதவர்களுக்கு எதிராக புகார் வந்தால் அதில் முகாந்திரம் உள்ளதாக கூறும் நிலையில், ஆதரவாளர்கள் என்றால் முகாந்திரம் இல்லை என்று கூறுகிறீர்கள். ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் புலன் விசாரணை அதிகாரி தீர்ப்பு எழுத முடியாது.

    மைக் முன் பேசும் ஒவ்வொருவரும் தங்களை நாட்டின் மன்னர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். இதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து நீதிபதி, “பொன்முடிக்கு எதிரான புகார்களை முடித்து வைத்து பிறப்பித்த உத்தரவு குறித்து சம்பந்தப்பட்ட புகார்தாரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது தீவிரமாக கருதப்படும்.” என்றும் குறிப்பிட்டார். இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “அஜித்குமாரை தாக்கிய காவலர்கள் ஒரு சதவீத குற்ற உணர்ச்சி கூட இல்லாதவர்கள்” – வைகோ வேதனை

    July 8, 2025
    மாநிலம்

    கடலூர் ரயில் விபத்துக்கு மாவட்ட நிர்வாகம்தான் காரணமா? – முதல்வர் பதிலளிக்க பாஜக வலியுறுத்தல்

    July 8, 2025
    மாநிலம்

    ராமதாஸ் Vs அன்புமணி: பாமக போட்டிக் கூட்டங்களின் தீர்மானங்கள் என்னென்ன?

    July 8, 2025
    மாநிலம்

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர் நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம்

    July 8, 2025
    மாநிலம்

    காவல் நிலைய மரணங்களை தடுக்க தமிழக காவல் துறையில் சீர்திருத்தம் தேவை: கார்த்தி சிதம்பரம்

    July 8, 2025
    மாநிலம்

    ஆம்பூர் துப்பாக்கி பறிமுதல் விவகாரம்: என்ஐஏ விசாரணைக்கு தமிழக பாஜக வலியுறுத்தல்

    July 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “அஜித்குமாரை தாக்கிய காவலர்கள் ஒரு சதவீத குற்ற உணர்ச்சி கூட இல்லாதவர்கள்” – வைகோ வேதனை
    • கொழுப்பு கல்லீரல் தரம் 1 vs கொழுப்பு கல்லீரல் தரம் 2: வித்தியாசம் என்ன, அவற்றை எவ்வாறு மாற்றுவது
    • விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ ஜூலை 31-ல் ரிலீஸ்
    • கடலூர் ரயில் விபத்துக்கு மாவட்ட நிர்வாகம்தான் காரணமா? – முதல்வர் பதிலளிக்க பாஜக வலியுறுத்தல்
    • தமிழில் அறிமுகம் ஆகிறார் ‘கோர்ட்’ நாயகி!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.