Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»14 நாடுகளுக்கு கூடுதல் வரி; இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு: ட்ரம்ப் தகவல்
    உலகம்

    14 நாடுகளுக்கு கூடுதல் வரி; இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு: ட்ரம்ப் தகவல்

    adminBy adminJuly 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    14 நாடுகளுக்கு கூடுதல் வரி; இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு: ட்ரம்ப் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வாஷிங்டன்: ஜப்பான், தென் கொரியா உட்பட 14 நாடுகளுக்கு கூடுதல் இறக்குமதி வரி விகிதத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது. அதேநேரத்தில், இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு நெருக்கமாக உள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

    உலகின் பல நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரிகளை விதிப்பதாகக் கூறி வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பதிலுக்கு அந்த நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிக்கும் என அறிவித்தார். 30%, 40% என கூடுதல் வரி விகிதத்தை அவர் அறிவித்ததை அடுத்து பல நாடுகள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தன.

    இதனால், அடிப்படை கூடுதல் வரி விகிதமாக 10%-ஐ அறிவித்த டொனால்ட் ட்ரம்ப், 90 நாட்களில் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார். பல நாடுகள் அமெரிக்காவுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், பிரிட்டன் மற்றும் வியட்நாம் ஆகிய இரு நாடுகளுடன் மட்டுமே ஒப்பந்தம் இறுதியானது.

    90 நாட்கள் காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், ஒப்பந்தம் நிறைவேறாத 14 நாடுகளுக்கான கூடுதல் வரி விகிதம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பதற்கான ஆவணத்தில் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

    அதன்படி, லாவோஸ், மியான்மர் ஆகிய நாடுகளுக்கு 40% கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளுக்கு 36%மும், வங்கதேசம், செர்பியாவுக்கு 35%மும், இந்தோனேசியா, தென் ஆப்ரிக்கா, போஸ்னியா & ஹெர்ஜெகோவினா ஆகிய நாடுகளுக்கு 30%மும் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. மலேசியா, துனிஷியா, ஜப்பான், தென் கொரியா, கஜகஸ்தான் ஆகிய நாடுகளுக்கு 25% கூடுதல் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பேச்சுவார்த்தைக்கான காலக்கெடு ஜூலை 9-ல் இருந்து ஆகஸ்ட் 1-க்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இந்த பட்டியல் வெளியான நிலையில் இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த டொனால்ட் ட்ரம்ப், “ஆகஸ்ட் 1-ம் தேதிதான் புதிய வரி விதிப்புக்கான காலக்கெடு. ஆனால், அது 100% உறுதியானது அல்ல. தற்போது பட்டியலில் வெளியாகி உள்ள நாடுகளுக்கான இறக்குமதி வரி விகிதம் இறுதியானதுதான் என்றாலும், அது 100% இறுதியானது அல்ல. அந்த நாடுகள் புதிய திட்டங்களுடன் எங்களை அணுகினால், அந்த திட்டம் எங்களுக்கு விருப்பமானதாக இருந்தால் நாங்கள் அதை ஏற்போம். நாங்கள் கூடுதல் வரி விகிதத்தை அறிவித்திருப்பதால், எங்களுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையில் நாடுகள் ஈடுபடுமானால் எங்கள் வரி விகிதம் இன்னும் அதிகரிக்கப்படும்.

    நாங்கள் பிரிட்டனுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டோம். சீனாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டோம். இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிலையை நெருங்கிவிட்டோம். மற்ற நாடுகளுடன் நாங்கள் ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. எனவே, நாங்கள் அவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    அதிபர் சர்தாரியின் பதவியை பறித்துவிட்டு பாகிஸ்தானில் ராணுவ ஆட்சிக்கு அடித்தளமா?

    July 8, 2025
    உலகம்

    அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் தகுதியானவர்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

    July 8, 2025
    உலகம்

    உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்புவோம்: டொனால்ட் ட்ரம்ப்

    July 8, 2025
    உலகம்

    ‘இது ஒரு ஜூலா’: கோதிக் ஸ்விங்காக இந்திய ஸ்விங்கை தவறாக பெயரிடுவதற்கு கலைஞர் பின்னடைவை எதிர்கொள்கிறார்; நெட்டிசன்கள் அதன் கலாச்சார சூழலை விளக்குகின்றன – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    July 8, 2025
    உலகம்

    அமெரிக்கா கட்சி: எலோன் மஸ்க் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஆண்ட்ரூ யாங்குடன் இணைகிறார்; கட்சியின் வெற்றிக்கான சாலை வரைபடத்தைப் பற்றி விவாதிக்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    July 8, 2025
    உலகம்

    ‘நான் மிகவும் மகிழ்ச்சியற்றவன்’: கனடா பெரியது என்று இந்திய வம்சாவளி மனிதன் கூறுகிறார், ஆனால் அவர் திரும்பி வர விரும்புகிறார், ஏனெனில் … – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    July 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர் நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம்
    • பாரத் பந்த் ஜூலை 9: 10 முக்கிய பயணங்கள்; என்ன திறந்திருக்கும், எது இல்லை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘கர்நாடகாவின் தர்மஸ்தலா கோயிலில் நடந்த 10+ பாலியல் கொலைகள்’ – முன்னாள் ஊழியர் பகீர் தகவல்
    • 2026-ல் ‘ராட்சசன் 2’ – விஷ்ணு விஷால் தகவல்
    • காவல் நிலைய மரணங்களை தடுக்க தமிழக காவல் துறையில் சீர்திருத்தம் தேவை: கார்த்தி சிதம்பரம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.