Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மத்திய அரசின் ஒருங்கிணைந்த வக்பு விதிகள் அறிவிப்பு: புதிய இணையத்தில் வக்பு சொத்துகள் பதிவு செய்வது கட்டாயம்
    மாநிலம்

    மத்திய அரசின் ஒருங்கிணைந்த வக்பு விதிகள் அறிவிப்பு: புதிய இணையத்தில் வக்பு சொத்துகள் பதிவு செய்வது கட்டாயம்

    adminBy adminJuly 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மத்திய அரசின் ஒருங்கிணைந்த வக்பு விதிகள் அறிவிப்பு: புதிய இணையத்தில் வக்பு சொத்துகள் பதிவு செய்வது கட்டாயம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: கடந்த நாடாளு​மன்ற கூட்​டத்​தொடரில் வக்பு திருத்த சட்ட மசோதா நிறைவேற்​றப்​பட்​டது. இதை எதிர்த்து பல்​வேறு அரசி​யல் கட்​சிகள் மற்​றும் முஸ்​லிம் அமைப்​பு​கள் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடுத்​திருந்​தன. விசா​ரணை​யின்​போது, புதிய வக்பு சட்​டத்​தில் முஸ்​லிம் அல்​லாதவர்​களை​யும் குழுக்​களில் சேர்ப்​பது உள்​ளிட்ட சில அம்​சங்​கள் மீது நீதிப​தி​கள் கேள்வி எழுப்பினர்.

    இதையடுத்​து, மத்​திய அரசு தாமாகவே முன்​வந்து சர்ச்​சைக்​குரிய அம்​சங்​களை வழக்கு முடி​யும் வரை அமல்​படுத்​த​மாட்​டோம் என உத்​தர​வாதம் அளித்​திருந்​தது. இதனால், சில அம்​சங்​களுக்​கான தடை​யுடன் புதிய வக்பு திருத்த சட்​டம் மீதான மத்​திய அரசின் நடவடிக்​கைகள் தொடர்​கின்​றன.

    இதில், தேசிய அளவி​லான ஒரு இணை​யதளத்தை மத்​திய அரசு உரு​வாக்கி இருந்​தது. இதையடுத்​து, புதிய வக்பு சட்​டத்​துக்​கான ஒருங்​கிணைந்த மேலாண்மை விதி​களை மத்​திய அரசு கடந்த வெள்​ளிக்​கிழமை அறி​வித்​தது. 17 பக்​கங்​களைக் கொண்ட இந்த விதி​முறை​கள், ‘ஒருங்​கிணைந்த வக்பு மேலாண்மை அதி​காரமளித்​தல் திறன் மற்​றும் மேம்​பாட்டு விதி​கள் 2025′ எனும் பெயரில் அரசிதழில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

    இதன்​படி, அனைத்து மாநிலங்​களும் வக்பு சொத்​துகளை தேசிய அளவி​லான இணை​யத்​தில் பதிவு செய்ய வேண்​டும். இந்த வக்பு சொத்​துகளை மத்​திய சிறு​பான்​மை​யினர் நல விவ​கார அமைச்​சகத்​தின் ஒரு இணைச் செய​லா​ளர் கண்​காணிக்க உள்​ளார்.

    சொத்து பதிவுக்கு பிறகு இணை​யம் சார்​பில் வக்பு மற்​றும் அதன் சொத்​துக்​கும் ஒரு தனித்​து​வ​மான எண் வழங்​கப்​படும். இதற்காக, அனைத்து மாநிலங்​களும் இணைச் செய​லா​ளர் நிலை அதி​காரியை நோடல் அதி​காரி​யாக நியமிக்க வேண்​டும் என்றும் அந்த அறி​விப்​பில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

    விதவை மற்​றும் விவாகரத்து பெற்ற பெண்​ணுக்கு ஜீவ​னாம்​சம் மீதான விதி​கள் 1995 சட்​டத்​தின் 108-B பிரி​வின் கீழ் வகுக்கப்பட்டுள்ளன. இந்​தப் பிரிவு வக்பு (திருத்​தம்) சட்​டம் 2025-ன் படி சேர்க்​கப்​பட்​டது. இது ஏப்​ரல் 8, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது.

    இச்​சட்​டப்​படி, விதவை​கள், விவாகரத்து பெற்ற பெண்​கள் மற்​றும் அனாதைகளுக்கு ஜீவ​னாம்​சம் வழங்​கப்​படு​வதை​யும் வக்புக்​கான புதிய இணை​யத்​தில் பதிவு செய்​ய​வும் அறி​வுறுத்​தப்​பட்டு உள்​ளது. வக்பு சொத்​துகளை பாது​காக்க நியமிக்​கப்​பட்​டுள்ள முத்​தவல்​லிகள் தனது கைப்​பேசி எண் மற்​றும் மின்​னஞ்​சல் உள்ளிட்ட விவரங்​களை​ இந்த இணை​யத்​தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார கார் தொழிற்சாலையை முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்

    August 4, 2025
    மாநிலம்

    ஆடிப்பெருக்கையொட்டி சிவகாசியில் 2026 காலண்டர் உற்பத்தி தொடக்கம்: ஆர்டர்கள் அதிகரிப்பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

    August 4, 2025
    மாநிலம்

    4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

    August 4, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் இருந்து நாம் விரட்டப்படும் நிலை உருவாகலாம்: சீமான் கருத்து

    August 3, 2025
    மாநிலம்

    கூட்டணி பற்றி தொலைக்காட்சிகளில் கருத்து தெரிவித்தால்… – நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் எச்சரிக்கை

    August 3, 2025
    மாநிலம்

    ஓசூரில் ‘பாராமுகமான’ பசிப்பிணி போக்கும் அம்மா உணவகங்கள்!

    August 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அண்ணா பல்கலை.யில் பொறியியல் வகுப்புகள்: ஆக. 11-ல் தொடக்கம்
    • தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார கார் தொழிற்சாலையை முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்
    • மும்பை – அகமதாபாத்துக்கு விரைவில் புல்லட் ரயில்: 500 கி.மீ. தூரத்தை 2 மணி நேரத்தில் சென்றடையலாம்
    • டிஎன்பிஎஸ்சி மூலம் 1,850 உதவியாளர் தேர்வுக்கு மின் வாரியம் ஒப்புதல்
    • ஆடிப்பெருக்கையொட்டி சிவகாசியில் 2026 காலண்டர் உற்பத்தி தொடக்கம்: ஆர்டர்கள் அதிகரிப்பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.