Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மீண்டும் முதல்வர் கனவு… நேரடியாக களத்துக்கு வரும் நாராயணசாமி!
    மாநிலம்

    மீண்டும் முதல்வர் கனவு… நேரடியாக களத்துக்கு வரும் நாராயணசாமி!

    adminBy adminJuly 7, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மீண்டும் முதல்வர் கனவு… நேரடியாக களத்துக்கு வரும் நாராயணசாமி!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்த ரங்கசாமி, 2001 மற்றும் 2006 தேர்தல்களில் புதுச்சேரி மாநில முதல்வராக தேர்வுசெய்யப்பட்டார். ஆனால், இரண்டாவது முறையாக அவர் முதல்வராக வந்ததை ஜீரணிக்க முடியாத அவரது உட்கட்சி ‘நண்பர்கள்’ செய்த உள்ளடிகளால் 2008-ல் முதல்வர் பதவியை இழந்தார். அதைத் தொடர்ந்து வைத்தியலிங்கத்தை இடைக்கால முதல்வராக்கியது காங்கிரஸ்.

    இதையடுத்து, 2011-ல் காங்கிரஸை விட்டு வெளியேறிய ரங்கசாமி, ‘புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து’ என்ற கோஷத்தை முன் வைத்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். 2011 தேர்தலில் அவரது கட்சி அமோக வெற்றிபெற்று மீண்டும் முதல்வரானார் ரங்கசாமி. அந்த சமயத்தில், ரங்கசாமியின் மருமகன் உறவுமுறை கொண்ட நமச்சிவாயத்தை மாநில தலைவராக்கியது காங்கிரஸ்.

    ​மாநிலத்​தில் காங்​கிரஸை மீண்​டும் தூக்கி நிறுத்​திய நமச்​சி​வா​யம், 2016-ல் முதல்​வர் வேட்​பாள​ராக முன்​னிறுத்​தப்பட்​டார். ஆனால் மீண்​டும் அரசி​யல் சூது விளை​யாடிய​தால், தேர்​தலில் போட்​டியே போடாத முன்​னாள் மத்​திய அமைச்​சர் நாராயண​சாமி புதுச்​சேரி முதல்​வ​ரா​னார். இதனால் தனது முதல்​வர் கனவு கலைந்து போய் கட்சி தலைமை மீது கடும் அதிருப்​தி​யில் இருந்​தார் நமச்​சி​வா​யம்.

    ஆனால், மத்​தி​யில் பாஜக ஆட்சி இருந்​த​தால் நாராயண​சாமியை நிம்​ம​தி​யாய் முதல்​வர் நாற்​காலி​யில் உட்​கார விட​வில்​லை. மாநில ஆளுந​ராக கிரண்​பேடியை அனுப்பி வைத்து அவரை சூப்​பர் முதலமைச்​ச​ராக செயல்பட வைத்​தது மத்​திய பாஜக அரசு. இதனால், அந்த ஐந்து ஆண்​டு​களும் கிரண்​பேடி​யுடன் கம்பு சுற்​று​வதற்கே நாராயண​சாமிக்கு கால நேரம் போதாமல் போனது.

    இதையடுத்​து, காங்​கிரஸ் முக்​கிய நிர்​வாகி​கள் பலரும் ஆட்​சி​யின் இறங்கு முகத்​தில் பாஜக, என்​.ஆர்​.​காங்​கிரஸ் என பாது​காப்​பான இடங்​களில் தஞ்​சம் புகுந்​தார்​கள். தேர்​தல் முடிவு​கள் இப்​படித்​தான் இருக்​கும் என தெரிந்​த​தாலோ என்​னவோ 2021 சட்​டமன்ற தேர்​தலில் நாராயண​சாமி போட்​டி​யிட​வில்​லை. முதலமைச்​சரே போட்​டி​யி​டா​மல் ஒதுங்​கியது காங்​கிரஸுக்கு பெரும் பின்​னடை​வாகப் பார்க்​கப்​பட்​டது. அது​போலவே அந்​தத் தேர்​தலில் ஆளும் கட்​சி​யான காங்​கிரஸ் 2 தொகு​தி​களில் மட்​டுமே வென்​றது. அதேசம​யம், என்​.ஆர்​.​காங்​கிரஸ் – பாஜக கூட்​டணி பெரு​வாரி​யான இடங்​களை வென்று ஆட்​சி​யைப் பிடித்​தது. ரங்​க​சாமி மூன்​றாவது முறை​யாக முதல்​வ​ரா​னார்.

    மீண்​டும் வரலாறு திரும்​பியது. 2024 மக்​கள​வைத் தேர்​தலில் ஆளும் கட்சி கூட்​ட​ணி​யில் போட்​டி​யிட்ட பாஜக வேட்​பாளர் தோற்று காங்​கிரஸ் வெற்​றி​பெற்​றது. இதனால் இண்​டியா கூட்​டணி மீண்​டும் சுறுசுறுப்​பானது. மாநிலத்​தின் தேவை​களுக்​காக டெல்லி சென்று பிரதமரை சந்​திக்​காதது, மாநில அந்​தஸ்து பெற போதிய நடவடிக்கை எடுக்​காதது, நிதி கமிஷனில் சேர்க்​காதது என முதல்​வர் ரங்​க​சாமிக்கு எதி​ராக பல பிரச்​சினை​கள் இப்​போது வரிசைகட்டி நிற்​கின்​றன. இதை தங்​களுக்கு சாதக​மாக்​கிக் கொள்ள இண்​டியா கூட்​ட​ணிக் கட்​சிகள் அரசி​யல் வியூ​கங்​களை வகுக்​கத் தொடங்கி உள்​ளன.

    முக்​கிய​மாக காங்​கிரஸ் கட்​சி​யின் முக்​கிய தலை​வர்​கள் அடுத்​தது நமது ஆட்​சி​தான் என்​கிற தெம்​பில் தங்​களது தொகு​தி​களுக்​குள் வலம்​வரத் தொடங்கி இருக்​கி​றார்​கள். இதில் முக்​கிய​மாக, கடந்த இரண்டு பொதுத் தேர்​தல்​களில் போட்​டிக்கே வராத முன்​னாள் முதல்​வர் நாராயண​சாமி இம்​முறை தேர்​தல் களத்​துக்கு வர தயா​ராகி​விட்​ட​தாக காங்​கிரஸ் தரப்​பில் சொல்​கி​றார்​கள். அதற்​கேற்​பவே, அறிக்​கை​கள் விடு​வது, அரசுக்கு எதி​ரான போராட்​டங்​களை அறி​விப்​பது என அவரது அரசி​யல் நடவடிக்​கை​களும் வேகமெடுத்​துள்​ளன.

    ஆனால் புதுச்​சேரி காங்​கிரஸ் புள்​ளி​களோ, “முதல்​வ​ராக இருந்த நாராயண​சாமி கடந்​த​முறை தேர்​தலில் நிற்​க​வில்​லை. காங்​கிரஸ் கட்​சி​யின் மேலிட தலை​வர்​களும் போதிய முக்​கி​யத்​து​வம் தந்து அவரைச் சந்​திக்​க​வில்​லை. கட்​சி​யிலும் அவருக்கு எவ்​வித​மான முக்​கிய பொறுப்​பை​யும் வழங்​க​வில்​லை. உள்​ளூர் நிர்​வாகி​களில் சிலரும் நாராயண​சாமிக்கு எதி​ரான மனநிலை​யிலேயே இன்​ன​மும் இருக்​கி​றார்​கள். இதெல்​லாம் தெரிந்​திருந்​தா​லும் மீண்​டும் முதலமைச்​சர் நாற்​காலியைப் பிடிப்​ப​தில் தீவிர​மாக இருக்​கி​றார் நாராயண​சாமி. ஆனால், அவரது விருப்​பத்தை தலைமை நிறை​வேற்​றுமா என்று தான் தெரிய​வில்​லை” என்​கின்​ற​னர்

    இந்​தத் தேர்​தலில் நீங்​கள் போட்​டி​யிடு​வீர்​களா என நாராயண​சாமி​யிடம் கேட்​டதற்​கு, “என் மேல் என்ன அக்​கறை உங்​களுக்​கு… தேர்​தலில் நிற்​கிறேன் – நிற்​கலை; அது என்​னுடைய தனிப்​பட்ட விருப்​பம்” என்​றார். நீங்​கள் நெல்​லித்​தோப்​பு, ராஜ்பவன் அல்​லது தொகு​தி​யில் போட்​டி​யிடப் போவ​தாகச் சொல்​கி​றார்​களே என்று கேட்​டதற்​கு, “புதுச்​சேரி​யில் உள்ள 30 தொகு​தி​களில் எங்கு வேண்​டு​மா​னாலும் நிற்​பேன்.

    உங்​களில் யார் என்ன சொல்​வார்​கள் எனப் பார்க்​கிறேன்” என்​றார். அப்​படி​யா​னால் தேர்​தலில் நிற்க தயா​ராகி​விட்​டீர்​களா எனக் கேட்​டதற்​கு, “கட்சி தலைமை உத்​தர​விட்​டால் நிற்​பேன்; இல்​லா​விட்​டால் நிற்​க​மாட்​டேன். தலைமை எடுக்​கும் முடிவுக்கு கட்​டுப்​படு​வேன்” என்​றார். உங்​களின் விருப்​பத்தை மேலிடத்​தில் சொல்​லி​யாச்சா எனக் கேட்​டதற்​கு, “காங்​கிரஸில் விருப்​பத்தை வேறு கேட்​பார்​களா?” என்று சொல்​லி​விட்டு பலமாகச் சிரித்​தார் நா​ராயண​சாமி. காங்​கிரஸ் தலைமை கேட்​பது இருக்​கட்​டும்​… நான் தேர்​தலில் நிற்​கலா​மா வேண்​டா​மா என புதுச்​சேரி மாநில காங்​கிரஸ்​ காரர்​களிடம்​ ஒரு​முறை நா​ராயண​சாமி கேட்​டுக்​கொள்​வது நல்​லது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘சமூக நீதி விடுதி’ எனப் பெயர் வைத்தால் மட்டும் போதுமா? – ஸ்டாலினை சாடும் எல்.முருகன்

    July 7, 2025
    மாநிலம்

    சென்னையில் ஆக.5-ல் உண்ணாவிரதப் போராட்டம்: டாஸ்மாக் ஊழியர்கள் சம்மேளனம் அறிவிப்பு

    July 7, 2025
    மாநிலம்

    மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    July 7, 2025
    மாநிலம்

    இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை அரசு என்றும் பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்

    July 7, 2025
    மாநிலம்

    போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனுக்கள் மீது நாளை ஐகோர்ட் உத்தரவு

    July 7, 2025
    மாநிலம்

    வத்திராயிருப்பு நல்லதங்காள் கோயிலை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்: பின்னணி என்ன?

    July 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வெள்ளை கோட் உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன (அது ஏன் ஆபத்தானது) | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அமெரிக்காவின் டெக்சாஸ் பெருவெள்ளம்: உயிரிழப்பு 82 ஆக அதிகரிப்பு; 41 பேர் மாயம்
    • வைட்டமின் டி: பல் மருத்துவர் சந்திப்பைப் பற்றி மறந்துவிடுங்கள்: இந்த வைட்டமின் பல் சிதைவதை 50% தடுக்க முடியும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குழந்தைகளை பெற்றெடுக்க பள்ளி மாணவிகளை ஊக்குவிக்கும் ரஷ்யா – பகீர் பின்னணி
    • 85 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி – அரிச்சந்திரன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.