Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கொலையான அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் மதுரை அரசு மருத்துவமனையில் திடீர் அனுமதி
    மாநிலம்

    கொலையான அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் மதுரை அரசு மருத்துவமனையில் திடீர் அனுமதி

    adminBy adminJuly 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கொலையான அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் மதுரை அரசு மருத்துவமனையில் திடீர் அனுமதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: தனிப்படை போலீஸார் தாக்கியதில் கொலையான மடப்புரம் பத்திரகாளி கோயில் ஒப்பந்த காவலாளி அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், திடீரென சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோயில் ஒப்பந்த காவலாளி அஜித்குமார் (29) மீது கோயிலுக்கு காரில் வந்த பக்தர் நிகிதா தனது காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகை திருட்டு தொடர்பாக திருப்புவனம் போலீஸில் புகார் அளித்தார். அன்றைய தினம் திருப்புவனம் போலீஸார் சிஎஸ்ஐ பதிவு செய்து அடுத்தநாள் விசாரணைக்கு வருமாறு அஜித்குமாரை அனுப்பிவைத்தனர்.

    இதற்கிடையில், தங்க நகை காணாமல் போனது தொடர்பாக மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை போலீஸார் ஜூன் 28-ம் தேதி அதிகாலையில் மடப்புரம் கிராமத்திற்கு சென்று காவலாளி அஜித்குமார், அவரது சகோதரர் நவீன்குமார், ஆட்டோ ஓட்டுநர் அருண் ஆகியோரிடம் விசாரித்தனர்.

    இதில் அஜித்குமாரையும், நவீன்குமாரையும் போலீஸார் அடித்து தாக்கினர். பின்னர் நவீன்குமாரையும், அருண் என்பவரையும் விட்டுவிட்டு, அஜித்குமாரை மட்டும் வேனில் ஏற்றிச் சென்று திருப்புவனம் புறவழிச்சாலையிலுள்ள வலையனேந்தல் கண்மாய் பகுதியில் வைத்து தாக்கினர். பின்னர் அங்கிருந்து அஜித்குமாரை கோயில் அலுவலகம் பின்புள்ள கோசாலையில் வைத்து பிளாஸ்டிக் பைப்பால் அடித்து தாக்கியதில் உயிரிழந்தார்.

    இந்நிலையில் நேற்று அஜித்குமார் சகோதரர் நவீன்குமார், ஜூன் 28-ல் போலீஸார் தாக்கியதில் உடல், கால்களில் வலி ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் முழு உடற்பரிசோதனைகளும் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    விசாரணையின்போது தாக்கியதில் கடந்த ஜூன் 28-ம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி ஜூலை 2-ம் தேதி முதல் திருப்புவனத்தில் காவல் நிலையம் பக்கத்திலுள்ள நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் விசாரணை செய்தார். ஜூலை 5-ம் தேதிவரை சாட்சிகளிடம் விசாரணை செய்தார். இந்த விசாரணையில் அஜித்குமார் தாயார் மாலதி, அவரது சகோதரர் நவீன்குமார் ஆகியோரும் ஆஜராகினர்.

    இந்நிலையில் இன்று மதியம் அஜித்குமார் சகோதரர் நவீன்குமார், தனிப்படை போலீஸார் ஜூன் 28-ம் தேதி விசாரணையின்போது அடித்து தாக்கியதில் உடலில், காலில் காயங்களுடன் வலி ஏற்பட்டு உடல்நிலை பாதித்தது. இந்நிலையில் இன்று மதியம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் மருத்துவமனையில் நவீன்குமாருக்கு முழு உடல் பரிசோதனை நடைபெற்றது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    4 தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எச்ஐவி, பாலியல் நோய்களுக்கு இலவச சிகிச்சை

    September 12, 2025
    மாநிலம்

    கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொலை: திமுக பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன்

    September 12, 2025
    மாநிலம்

    மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த சுரங்கங்களையும் அமைக்கக் கூடாது – அன்புமணி

    September 12, 2025
    மாநிலம்

    சாதிய படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் உருவாக்க தமிழக அரசுக்கு பிருந்தா காரத் வலியுறுத்தல்

    September 12, 2025
    மாநிலம்

    திமுகதான் ஐசியூ-வில் உள்ளது: உதயநிதிக்கு பழனிசாமி பதிலடி

    September 12, 2025
    மாநிலம்

    ஆசிரியர் ‘டெட்’ தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 4 தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எச்ஐவி, பாலியல் நோய்களுக்கு இலவச சிகிச்சை
    • நேபாள கலவரத்தில் சிக்கித் தவித்த ஆந்திர சுற்றுலா பயணிகள் 144 பேர் தாயகம் திரும்பினர்
    • கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொலை: திமுக பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன்
    • ஆல்பா தலசீமியா என்றால் என்ன? இது எவ்வாறு கண்டறியப்படுகிறது?
    • மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த சுரங்கங்களையும் அமைக்கக் கூடாது – அன்புமணி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.