Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம் – மத்திய அரசு விளக்கம்
    தேசியம்

    ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம் – மத்திய அரசு விளக்கம்

    adminBy adminJuly 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம் – மத்திய அரசு விளக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் தள கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. அரசின் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த பக்கத்தில் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறியுள்ளதாவது: “ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கை இந்தியாவில் முடக்குமாறு அரசு தரப்பில் இப்போது எந்தவித கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை. இந்த சிக்கலுக்கு தீர்வு காண எக்ஸ் தளத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்” என அவர் கூறியுள்ளார்.

    கடந்த மே மாதம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் போது சில எக்ஸ் தள கணக்குகளை முடக்குமாறு அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு சட்ட ரீதியாக கோரி உள்ளது. அதன்படி அப்போது சில எக்ஸ் தள கணக்குகள் முடக்கப்பட்டு இருக்கலாம். அதில் ராய்ட்டர்ஸ் நிறுவனமும் ஒன்றாக இருந்திருக்கலாம் என தெரிகிறது. இந்நிலையில், தற்போது அந்த கோரிக்கைக்கு எக்ஸ் தளம் நடவடிக்கை எடுத்தது இதற்கு காரணமாக இருக்கலாம் என தகவல்.

    தற்போது இந்தியாவில் ராணுவ நடவடிக்கை சார்ந்த சூழல் இல்லை. இந்நிலையில், ராய்ட்டர்ஸ் நிறுவன எக்ஸ் தள கணக்கு முடக்கத்தை நீக்குமாறும், அதற்கான விளக்கத்தையும் மத்திய அரசு, எக்ஸ் நிறுவனத்திடம் கோரியுள்ளதாக தகவல்.

    அதே நேரத்தில் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் மற்ற பிரிவுகளின் எக்ஸ் தள கணக்குகள் இந்தியாவில் தடையின்றி பயனர்களால் அக்சஸ் செய்ய முடிவது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கெனவே பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அரசியல் தலைவர்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் பிரபலங்களின் எக்ஸ் தள கணக்குகள், யூடியூப் சேனல்கள் இந்தியாவில் அரசின் கோரிக்கையை ஏற்று முடக்கப்பட்டுள்ளன. அண்மையில் அந்த தடை தொடர்வதாக அரசு தரப்பு தெரிவித்திருந்தது. இதற்கு இடைப்பட்ட நேரத்தில் சில மணி நேரம் அந்த கணக்குகளை இந்திய பயனர்கள் அக்சஸ் செய்ய முடிந்தது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பாஜகவுக்கு வாக்களிப்பது கேரள கலாச்சாரத்தை அழித்துவிடும்: பினராயி விஜயன்

    September 11, 2025
    தேசியம்

    சீன எல்லை வழியாக கடந்த 2 ஆண்டுகளில் ரூ.800 கோடி மதிப்புள்ள தங்கம் இந்தியாவுக்கு கடத்தல்

    September 11, 2025
    தேசியம்

    ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவின் ரத யாத்திரையை தொடங்கி வைத்த கர்நாடக உள்துறை அமைச்சர்: காங்கிரஸில் சர்ச்சை

    September 11, 2025
    தேசியம்

    புலியைப் பிடிக்காததால் கிராம மக்கள் ஆத்திரம்: கர்நாடகாவில் 7 வனத் துறையினர் கூண்டில் அடைப்பு

    September 11, 2025
    தேசியம்

    இண்டியா கூட்டணி எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நன்றி

    September 11, 2025
    தேசியம்

    ‘குடியரசு துணைத் தலைவர் தேர்தலிலும் வாக்கு திருட்டு’ – பாஜக மீது காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு

    September 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இமானுவேல் சேகரன் மணிமண்டபம் இன்னும் 2 மாதங்களில் திறக்கப்படும்: உதயநிதி ஸ்டாலின்
    • எந்த 10 உருப்படிகள் நீங்கள் தினமும் தொடும் மிக மோசமானவை என்று நீங்கள் நம்ப மாட்டீர்கள்; கை கழுவுதல் என்பது உங்கள் சிறந்த பாதுகாப்பு | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பழனிசாமியிடம் முறையீடு: திமுக ஆட்சி மீது திண்டுக்கல் வர்த்தகர்கள் அதிருப்தி ஏன்?
    • எலோன் மஸ்க் Vs லாரி எலிசன்: உலகின் பணக்காரர் யார்? முதல் 5 பில்லியனர்கள் தரவரிசைப்படுத்தப்பட்டனர்
    • நானோ வாழை AI வைரஸ் போக்கு: ஜெமினியின் புதிய AI அம்சம் என்ன 3D புள்ளிவிவரங்களை உருவாக்குகிறது | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.