Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மூடப்பட்ட 500+ அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்
    மாநிலம்

    மூடப்பட்ட 500+ அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

    adminBy adminJuly 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மூடப்பட்ட 500+ அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: காலிப் பணியிடங்களை நிரப்பி மூடப்பட்ட 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

    இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “மருத்துவர்கள் இல்லாத மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள், பேராசிரியர்கள் இல்லாத பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள், ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகள், பணியாளர்கள் இல்லாத அரசு அலுவலகங்கள் என்ற வரிசையில் ஊழியர்கள் இல்லாத அங்கன்வாடி மையங்கள் தற்போது தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன.

    ஏழை, எளிய குழந்தைகளிடையே ஊட்டச்சத்தினை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், 50,000-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூலம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 50 மாத கால திமுக ஆட்சியில், அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததோடு, 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களுக்கு மூடு விழா நடத்தியுள்ளது திராவிட மாடல் திமுக அரசு. “ஆக்குவது கடினம், அழிப்பது சுலபம்” என்று சொல்வார்கள். இந்த வகையில் அழிக்கும் பணியினை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது.

    இதன் விளைவாக, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்குவதிலும்; சுகாதாரத்தை கற்பிப்பதிலும்; எண்கள், எழுத்துக்கள், வண்ணங்கள் ஆகியவற்றை போதிப்பதிலும்; கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்தை உறுதி செய்வதிலும் மிகப் பெரிய அளவில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் அங்கன்வாடி மையங்களில் முப்பது விழுக்காட்டிற்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்படாததே காரணம். காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி அங்கன்வாடியில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    அங்கன்வாடி மையங்களில் நிலவும் அவல நிலையைச் சுட்டிக்காட்டி நானும் ஏற்கெனவே அறிக்கை விடுத்திருந்தேன். ஆனால், திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. மாறாக, அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையை எப்படி குறைக்கலாம் என்ற சிந்தனையில் திமுக அரசு இருக்கிறது. தற்போது, அங்கன்வாடி மையங்களில் நிலவும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக குழந்தைகளை அனுப்பவே பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையும், காலிப் பணியிடங்களை நிரப்புவதில் பெருத்த காலதாமதத்தினை ஏற்படுத்தும் நடவடிக்கையும் கடும் கண்டனத்திற்குரியது. முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், மூடப்பட்ட 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அதிமுகவுக்கு பாஜக சுமையாக இருக்க கூடாது; நமது இலக்கு 2026 அல்ல, 2029 தேர்தல்: நயினார் நாகேந்திரன் 

    July 7, 2025
    மாநிலம்

    காவல்துறையின் ஈரல் மட்டுமல்ல, இதயமும் கெட்டுவிட்டது: மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேச்சு

    July 6, 2025
    மாநிலம்

    பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு

    July 6, 2025
    மாநிலம்

    கீழடி விவகாரத்தில் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை: சகாயம் விமர்சனம்

    July 6, 2025
    மாநிலம்

    ”ரத்தத்தின் ரத்தமே வா! மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்!” – தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்

    July 6, 2025
    மாநிலம்

    ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் – வீடுதோறும் விண்ணப்பங்கள் வழங்கும் பணி சென்னையில் நாளை தொடக்கம்

    July 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தெலுங்கில் ‘ஜெய ஜெய ஜெயஹே’ ரீமேக்!
    • ‘வார் 2’ படத்தின் தெலுங்கு உரிமை விலை ரூ.90 கோடி?!
    • அதிமுகவுக்கு பாஜக சுமையாக இருக்க கூடாது; நமது இலக்கு 2026 அல்ல, 2029 தேர்தல்: நயினார் நாகேந்திரன் 
    • இங்கிலாந்தை 336 ரன்களில் வீழ்த்தி இந்தியா அபாரம்: ஆகாஷ் தீப் அசத்தல் | ENG vs IND
    • ரன்வீர் சிங் ஜோடியாக சாரா அர்ஜுன்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.