Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»ஆர்டிஇ திட்டத்தில் கல்விக் கட்டணம் செலுத்த தனியார் பள்ளிகள் நெருக்கடி – பெற்றோர்கள் தவிப்பு
    கல்வி

    ஆர்டிஇ திட்டத்தில் கல்விக் கட்டணம் செலுத்த தனியார் பள்ளிகள் நெருக்கடி – பெற்றோர்கள் தவிப்பு

    adminBy adminJuly 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆர்டிஇ திட்டத்தில் கல்விக் கட்டணம் செலுத்த தனியார் பள்ளிகள் நெருக்கடி – பெற்றோர்கள் தவிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ஆர்டிஇ திட்டத்தில் 2 ஆண்டுகளாக நிதி வழங்கப்படாததால் சேர்க்கை பெற்ற குழந்தைகளின் பெற்றோர்களிடம் கல்விக் கட்டணத்தை செலுத்த தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.

    இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதிலும் உள்ள 8,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் சுமார் 1.10 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். அவர்களுக்கான கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செலுத்தும். அதன்படி தமிழகத்தில் 2013-ல் அமலான இந்த ஆர்டிஇ திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 4 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, தேசியக் கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்க மறுப்பதால் பள்ளிக் கல்வித் திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதுதவிர முந்தைய கல்வி ஆண்டுகளுக்கான நிலுவை என சுமார் ரூ.600 கோடி நிதியானது மத்திய அரசால் வழங்கப்பட வேண்டுமென கூறப்படுகிறது. இதன் காரணமாக நடப்பு கல்வியாண்டில் (2025-26) தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கையை தொடங்குவதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கவில்லை.

    இது தொடர்பான வழக்கில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி மத்திய அரசு குறிப்பிட்ட சதவீத நிதியை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேநேரம் மத்திய அரசு இதுவரை தனது பங்கு நிதியை ஒதுக்கவில்லை. மாநில அரசும் தனியார் பள்ளிகளுக்கு 2 ஆண்டுகளுக்கான நிதியை விடுவிக்காமல் இருந்து வருகிறது. இதனால் தற்போது ஆர்டிஇ திட்டத்தில் படித்து வரும் மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தைச் செலுத்த பல்வேறு தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.

    இது குறித்து சமூக ஆர்வலர் நமச்சிவாயம் கூறும்போது, ”ஆர்டிஇ திட்டத்தில் 2 ஆண்டுகளாக நிதி வழங்கப்படாததால் கட்டணத்தை செலுத்த பள்ளி நிர்வாகங்கள் அழுத்தம் தருகின்றன. பிள்ளைகள் நலன் கருதி வேறு வழியின்றி பெரும்பாலான பெற்றோர்கள் முன்பணமாக குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்திவிட்டனர். அரசிடம் இருந்து பணம் வந்த பிறகு அந்தத் தொகையைத் திருப்பித் தருவதாகக் கூறியுள்ளனர்.

    ஏற்கெனவே, ஆர்டிஇ திட்டத்தில் சேர்க்கை பெற்ற குழந்தைகளிடம் சீருடை, புத்தகம் உட்பட பல்வேறு பெயர்களில் கூடுதல் கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலித்து வருகின்றன. தற்போது கல்விக் கட்டணத்தையும் சேர்த்தே வசூலிக்கத் தொடங்கிவிட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    க்யூட் நுழைவு தேர்வுக்கான முடிவுகள் வெளியானது: 2,679 மாணவர்கள் சாதனை

    July 5, 2025
    கல்வி

    மாதம் ரூ.8,000 உதவித் தொகையுடன் தொல்லியல், கல்வெட்டியல் முதுகலை டிப்ளமா படிப்பு

    July 4, 2025
    கல்வி

    க்யூட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 2,679 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று சாதனை!

    July 4, 2025
    கல்வி

    ஆங்கிலத்தில் வெளியான வழிகாட்டு நெறிமுறைகள் – ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்ன ஆனது?

    July 4, 2025
    கல்வி

    வாசிப்பு இயக்க புத்தகங்களில் மாணவர் படைப்புகள்: விண்ணப்பிக்க ஜூலை 16-ம் தேதி கடைசி நாள்

    July 4, 2025
    கல்வி

    அரசுப் பள்ளிகளில் பணிநிரவல் கலந்தாய்வு: ஆசிரியர்களுக்கு கட்டாய மாறுதல் வழங்க தடை!

    July 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘பாபநாசம்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் ரஜினிகாந்த்: இயக்குநர் ஜீத்து ஜோசப் தகவல்
    • திமுக சேர்மனை வீட்டுக்கு அனுப்பிய திமுக… அந்த இடத்தைப் பிடிக்க ஆயத்தமாகும் அதிமுக! – மாவட்டச் செயலாளர் பதவிக்கும் ஆபத்து?
    • ஹார்வர்ட் நரம்பியல் விஞ்ஞானி: ஹார்வர்ட் நரம்பியல் விஞ்ஞானியின் கூற்றுப்படி, சிறந்த மூளைக்கு 3 பிஸ்ஸேர் ஹேக்குகள்
    • பிஹாரில் காங்கிரஸ் சார்பில் வழங்கப்பட்ட சானிட்டரி நாப்கின் பாக்கெட்டில் ராகுல் படம்
    • பறந்து போ: திரை விமர்சனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.