Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஆபரேஷன் சிந்தூரில் பெற்ற படிப்பினைகள் என்னென்ன? – ராணுவ துணை தலைமை தளபதி விவரிப்பு
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூரில் பெற்ற படிப்பினைகள் என்னென்ன? – ராணுவ துணை தலைமை தளபதி விவரிப்பு

    adminBy adminJuly 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆபரேஷன் சிந்தூரில் பெற்ற படிப்பினைகள் என்னென்ன? – ராணுவ துணை தலைமை தளபதி விவரிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூரின்போது ஒரு எல்லையில் பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 எதிரிகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று ராணுவத் துணைத் தலைமை தளபதி ராகுல் ஆர். சிங் தெரிவித்துள்ளார்.

    இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI ) ஏற்பாடு செய்த புதுயுக ராணுவ தொழில்நுட்பங்கள் நிகழ்ச்சியில் உரையாற்றிய ராகுல் ஆர் சிங், “இந்தியா ஒரு எல்லையில் (பாகிஸ்தான் எல்லை) இரண்டு எதிரிகளை (பாகிஸ்தான், சீனா) கொண்டுள்ளது. உண்மையில் மூன்று எதிரிகள் (பாகிஸ்தான், சீனா, துருக்கி). போரில் பாகிஸ்தான் முன்னணியில் இருந்தது. சாத்தியமான அனைத்து உதவிகளையும் சீனா வழங்கியது.

    பாகிஸ்தான் கடற்படையில் 81% சீன வன்பொருட்களே(ஹார்டுவேர்) உள்ளன. முழு ராணுவ நடவடிக்கையின்போது வான் பாதுகாப்பு எவ்வாறு செயல்பட்டது என்பது முக்கியமானது. இந்த முறை, நமது நாட்டில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் முழுமையாகக் கவனிக்கப்படவில்லை. அடுத்த முறை, அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நமக்கு வலுவான வான் பாதுகாப்பு அமைப்பு மிகவும் அவசியம்.

    பாகிஸ்தானுக்கு அதிக ஆதரவை வழங்குவதில் துருக்கி முக்கியப் பங்கு வகித்தது. அவர்கள் பைரக்தார் உள்ளிட்ட ஏராளமான ட்ரோன்களை பாகிஸ்தானுக்கு வழங்கினர். இந்தியா – பாகிஸ்தான் இடையே ராணுவ அளவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, நமது முக்கியமான நகர்வுகள் குறித்த உடனடி தகவல்களை சீனா மூலம் பாகிஸ்தான் பெற்றது.

    பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் உள்கட்டமைப்புகள் மீது இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல் பாராட்டுக்குரியவை. இலக்குகள், தொழில்நுட்பம், மனித நுண்ணறிவு ஆகியவற்றின் மிகச் சிறந்த ஒருங்கிணைப்பு அது. மொத்தம் 21 இலக்குகள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில் 9 இலக்குகள் மீது மட்டும் தாக்குதல் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. முடிவு எடுக்கப்பட்ட சில மணி நேரங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. அதாவது, குறைந்த கால அவகாசத்தில் இலக்குகள் குறிவைக்கப்பட்டன.

    ராணுவம் தனது இலக்கை எய்தும்போது, அது தனது தாக்குதலை நிறுத்த முயற்சிக்க வேண்டும். ஏனெனில், போரை தொடங்குவது எளிது, அதை நிறுத்துவது மிகவும் கடினம். எனவே, சரியான நேரத்தில் போரை நிறுத்துவதற்கும் திட்டமிட்டு நடத்தப்பட்ட மிகவும் திறமையான தாக்குதல் இது என்று நான் கூறுவேன்” என தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    “போர் போன்ற இயற்கைப் பேரிடர் இது..!” – இமாச்சல் முதல்வர் ஆதங்கத்துடன் விவரிப்பு

    July 4, 2025
    தேசியம்

    குகி ஆயுத குழுக்கள் உடனான அமைதி ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவர மணிப்பூர் அமைப்புகள் கோரிக்கை

    July 4, 2025
    தேசியம்

    தலாய் லாமா விவகாரம்: சீனாவுக்கு எதிர்வினையாற்ற கிரண் ரிஜிஜு மறுப்பு

    July 4, 2025
    தேசியம்

    முஸ்லிம்களை மராத்தி பேசவைக்க ராஜ் தாக்கரேவுக்கு துணிவு இருக்கிறதா? – நிதேஷ் ரானே

    July 4, 2025
    தேசியம்

    தன்னாட்சியை பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ சிறந்த எடுத்துக்காட்டு: அமித் ஷா

    July 4, 2025
    தேசியம்

    கடலில் கலக்கும் 2,000 டிஎம்சி நீரில் 200 டிஎம்சி கோதாவரி நீர் மக்களின் நலனுக்கு பயன்படுத்தப்படும்: சந்திரபாபு நாயுடு உறுதி

    July 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கே.எம்.காதர் மொகிதீனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது: தமிழக அரசு அறிவிப்பு
    • உங்கள் வயதில் பாதி பார்க்க விரும்புகிறீர்களா? ஸ்வேதா திவாரியின் 10 சிறந்த தோற்றத்தை நீங்கள் உள்ளடக்கியுள்ளீர்கள்
    • இங்கிலாந்து அணி 407 ரன்களுக்கு ஆல் அவுட்: சிராஜ், ஆகாஷ் அபாரம் | ENG vs IND 2-வது டெஸ்ட்
    • திருச்செந்தூர் கும்பாபிஷேகத்தில் அன்னதானம் வழங்க கட்டுப்பாடுகளா? – இந்து முன்னணி காட்டம்
    • ஒரு நடைக்கு செல்ல சிறந்த நேரம் எப்போது? காலையில் அல்லது மாலை நடைப்பயணத்தின் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.