வாஷிங்டன்: ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிப்பது தொடர்பாக எழுந்துள்ள அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்காவிடம் ஏற்கெனவே கவலை தெரிவித்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்க அரசு ரஷ்யா மீதான தடை தொடர்பாக புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
குடியரசுக்கு கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் ஆதரவுடன் வெளிவந்துள்ள இந்த மசோதா ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க வழிவகை செய்கிறது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது.
இந்த நிலையில், இந்த புதிய தடை மசோதாவால் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் பெரிதும் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது. எனவே இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது இருதரப்பிலும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.