ருத்ரபிரயாக்: கனமழை காரணமாக உத்தராகண்ட் மாநிலத்தில் சோன்பிரயாக் அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால், கேதார்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் சோன்பிரயாக் அருகேயுள்ள முங்காட்டியா என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேதார்நாத் யாத்திரையை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
கவுரிகுந்த் பகுதியிலிருந்து திரும்பிய சில பக்தர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கினர். அவர்களை மாநில பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பாக மீட்டு சோன்பிரயாக் அழைத்து வந்தனர்.