Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திமுக ஆட்சியிலும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் தொடர்​கின்​றன: பெ.சண்முகம் விமர்சனம்
    மாநிலம்

    திமுக ஆட்சியிலும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் தொடர்​கின்​றன: பெ.சண்முகம் விமர்சனம்

    adminBy adminJuly 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திமுக ஆட்சியிலும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் தொடர்​கின்​றன: பெ.சண்முகம் விமர்சனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: மடப்​புரத்​தில் போலீ​ஸார் தாக்​கிய​தில் உயி​ரிழந்த கோயில் காவலாளி அஜித்​கு​மார் குடும்பத்​தினரை நேற்று சந்​தித்து ஆறு​தல் கூறிய மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட்மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் காவல் துறை​யினரின் அத்​து​மீறல்​கள் தொடர்​கின்​றன. அதி​முக ஆட்​சி​யில் ஸ்டெர்​லைட் துப்​பாக்​கிச் சூட்​டில் தொடர்​புடைய யாரும் இது​வரை தண்​டிக்​கப்​பட​வில்​லை. திமுக ஆட்​சி​யிலும் காவல் துறை அத்​து​மீறல்​கள், மனித உரிமை மீறல்​கள், காட்​டுமி​ராண்​டித்​தன​மான தாக்​குதல்​கள் தொடர்​கின்​றன. காவல் நிலைய உயி​ரிழப்​பு​கள் தொடர்​பாக தமிழக அரசு விசா​ரித்​து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

    திமுக ஆட்​சி​யில் 24 காவல் நிலைய இறப்​பு​கள் நடந்​துள்​ளன. தலை​மைச் செயல​கத்​திலிருந்து யாரோ ஒரு​வர் கொடுத்த அழுத்​தத்​தில்​தான் அஜித்​கு​மார் கொலைச் சம்​பவம் நடந்​துள்​ளது என்று எல்​லோரும் பேசுகின்​றனர். ஆனால், யார் அந்த ஐஏஎஸ் அதி​காரி என வெளிப்​படை​யாக அறிவிக்​க​வில்​லை, மூடிமறைக்​கப் பார்க்​கி்ன்​றனர். யார் அந்த அதி​காரி என்​பதை வெளிப்​படை​யாக அறிவிக்க வேண்​டும். நிகி​தா​வும், அவரது தாயாரும் யாருடைய காரில் கோயிலுக்கு வந்​தார்​கள் என்ற விவரத்​தை​யும் வெளி​யிட வேண்​டும்.

    சிபிஐ​யிடம் வழக்கை ஒப்​படைத்து விட்​ட​தால், இனி நமக்​குப் பொறுப்​பில்லை என தமிழக முதல்​வர் தட்​டிக்​கழிக்​கக் கூடாது. இனிமேல் இது​போன்ற சம்​பவங்​கள் நிகழாமல் தடுக்க வேண்​டும். தமிழகம் முழு​வதும் தனிப்​படைகள் கலைக்​கப்​படு​வ​தாக டிஜிபி அறி​வித்​துள்​ளார். இதன்மூலம் எஸ்​.பி. டிஎஸ்பி ஆகியோர் தனிப்​படை என்ற ரவுடி கும்​பலை வைத்து செயல்​பட்​டுள்​ளனர் என்​பது வெளிச்​சத்​துக்கு வந்​துள்​ளது. காவல் துறை அதி​காரி​கள் மனித உரிமை​களை மதிப்​ப​தில்​லை. உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு தலை​யிட்ட பின்​பு​தான் இந்த வழக்கு வேகம் எடுத்​துள்​ளது.

    இக்​கொலை​யில் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் யாராக இருந்​தா​லும், குற்​ற​வாளி கூண்​டில் நிறுத்​த வேண்​டும். சிபிஐ விசா​ரணைக்கு தமிழக அரசு முழு​மை​யாக ஒத்​துழைக்க வேண்​டும். சாட்சிகளுக்கு உரிய பாது​காப்பு அளிக்கவேண்​டும். அஜித்​கு​மார் குடும்​பத்​தினருக்கு ரூ.50 லட்​சம் இழப்​பீடு வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்​



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பொன்முடி மீதான வழக்குகளை போலீஸ் விசாரிக்க தயங்கினால் சிபிஐ-க்கு மாற்றப்படும்: ஐகோர்ட் எச்சரிக்கை

    July 4, 2025
    மாநிலம்

    அதிமுக உட்கட்சி விவகாரத்தில் விசாரணை விரைவாக நடத்தப்படும்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்

    July 4, 2025
    மாநிலம்

    நீலகிரி அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் போக்சோவில் கைது

    July 4, 2025
    மாநிலம்

    ஓசூர் அருகே சிறுவனை கடத்திக் கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது

    July 4, 2025
    மாநிலம்

    பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிலைப்பு கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும்: அன்புமணி

    July 4, 2025
    மாநிலம்

    “அன்புமணிக்கு தொண்டனாகவும் செயல்படுவேன்” – பாமக எம்எல்ஏ அருள் திடீர் உருக்கம்

    July 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பொன்முடி மீதான வழக்குகளை போலீஸ் விசாரிக்க தயங்கினால் சிபிஐ-க்கு மாற்றப்படும்: ஐகோர்ட் எச்சரிக்கை
    • நீங்கள் பல் துலக்குகிறீர்கள் என்று நினைக்கிறீர்களா? பல் மருத்துவர்கள் இன்று காலை பழக்கத்தைப் பற்றி எச்சரிக்கின்றன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அதிமுக உட்கட்சி விவகாரத்தில் விசாரணை விரைவாக நடத்தப்படும்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
    • எந்த ஆஸ்திரேலிய விசா உங்களுக்கு சரியானது? 7 பார்வையாளர் மற்றும் விடுமுறை விசா விருப்பங்களுக்கு வழிகாட்டி
    • திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா தொடக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.