Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக உறுப்பினர் சேர்க்கைக்காக சென்னையில் வீடுவீடாக மக்களை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்
    மாநிலம்

    ‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக உறுப்பினர் சேர்க்கைக்காக சென்னையில் வீடுவீடாக மக்களை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்

    adminBy adminJuly 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக உறுப்பினர் சேர்க்கைக்காக சென்னையில் வீடுவீடாக மக்களை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ கட்சி உறுப்​பினர் சேர்க்கை முன்​னெடுப்​புக்​காக, சென்​னை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வீடு​வீ​டாகச் சென்று பொது​மக்​களை சந்​தித்​தார். இதே​போல், தமிழகம் முழு​வதும் அமைச்​சர்​கள், நிர்​வாகி​கள் என அனை​வரும் பொது​மக்​களைச் சந்​தித்து அரசின் திட்​டங்​களை விளக்​கியதுடன், உறுப்​பினர் சேர்க்​கை​யிலும் ஈடு​பட்​டனர்.

    தமிழக சட்​டப்​பேர​வைக்கு 2026-ம் ஆண்டு பொதுத்​தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதில் ஆளும் திமுக 7-வது முறை​யாக வெற்றி பெறும் முனைப்​புடன் உள்ளது. இதற்​காக பல்​வேறு அடிப்​படை பணி​களை மேற்​கொண்டு வரு​கிறது. இதன் ஒருபகு​தி​யாக கட்சி உறுப்​பினர்​கள் எண்​ணிக்​கையை அதி​கரிக்​கும் நடவடிக்​கை​யில் திமுக இறங்​கி​யுள்​ளது.

    இதற்​காக ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ என்ற முன்​னெடுப்​பை, ஜூன்மாதம் மதுரை​யில் நடை​பெற்ற பொதுக்​குழு​வில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வித்​தார். அதன்​படி, ஜூலை 1-ம் தேதி ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ செயல்​திட்​டத்தை முதல்​வர் தொடங்கி வைத்​தார். அதன்​பின், 2-ம் தேதி தமிழகத்​தில் திமுக கட்​சிரீ​தி​யாக உள்ள 76 மவட்​டங்​களி​லும் பொதுக்​கூட்​டங்​கள் நடத்​தப்​பட்​டன.

    அதைத்​தொடர்ந்​து, நேற்று வீடு​வீ​டாகச் சென்று ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ திட்​டத்​தில் பொது​மக்​களைச் சந்​திக்​கும் நிகழ்வு தொடங்​கியது. இந்த சந்​திப்​பின் மூலம் வாக்​குச்​சாவடிக்கு 30 சதவீதம் பேரை கட்​சி​யில் சேர்ப்​ப​தற்​கான இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், சென்னை ஆழ்​வார்ப்​பேட்​டை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று காலை வீடு​வீ​டாகச் சென்று பொது​மக்​களைச் சந்​தித்து ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ இயக்​கம் குறித்து எடுத்​துரைத்தார். அப்​போது, 6 கேள்வி​கள் அடங்​கிய படிவத்தை பொது​மக்​களிடம் அளித்​து, அதற்கு பொது​மக்​கள் அளிக்​கும் பதிலை நேரில் கேட்​டறிந்​தார்.

    குறிப்​பாக ‘எந்த நெருக்​கடி​யான சூழலிலும் தமிழகத்​தின் மண், மொழி, மானம் காப்​பாற்​றப்பட வேண்​டும் என்று நினைக்​கிறீர்​களா?’ என பொது​மக்​களிடம் முதல்​வர் கேட்டு அதற்​கான பதிலைப் பெற்​றார். இது​போன்று அடுத்​தடுத்த கேள்வி​களுக்​கும் மக்​களிடம் இருந்து பதிலை பெற்று கள நில​வரத்தை அறிந்து கொண்​டார். இதுகுறித்து முதல்​வர் வெளி​யிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வில், ‘‘தமிழகத்​தின் மண், மொழி, மானம் காக்க, சாதி மதம் அரசி​யல் கடந்து ஓரணி​யில் தமிழகம் வெல்​லட்​டும். இதற்​காக அடுத்த 45 நாட்​கள் திமுக மாவட்​டச் செய​லா​ளர்​கள் சட்​டப்​பேர​வை, நாடாளுமன்ற உறுப்​பினர்​கள், மூத்த முன்​னோடிகள் என அனை​வரும் பரப்​புரை​யில் ஈடு​பட்டு தமிழகத்​தில் உள்ள அனை​வரை​யும் ஒன்​றிணைக்க வேண்​டும்’’ என தெரி​வித்​துள்ளார்.

    பொது​மக்​களை முதல்​வர் சந்​தித்​த​போது, அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், இணை அமைப்பு செய​லா​ளர் அன்​பகம் கலை உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர். இதே​போல், தமிழகம் முழு​வதும் அமைச்​சர்​கள், எம்​.பி.க்​கள்,எம்​எல்​ஏ.க்​கள், மாவட்​டச் செய​லா​ளர்​கள், நிர்​வாகி​கள் தங்​கள் பகு​தி​யில் வாக்​குச்​சாவடிக்கு உட்​பட்ட இடங்​களில் வசிக்​கும் மக்​களிடம் வீடு​வீ​டாகச் சென்று படிவத்தை அளித்து அதில் உள்ள கேள்வி​களுக்கு பதிலைப் பெற்​று, உறுப்​பினர்​ சேர்​க்​கையில்​ ஈடுபட்​டனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 4 மீனவர்கள் ராமேசுவரம் திரும்பினர்

    July 4, 2025
    மாநிலம்

    காவல் துறையினருக்கு சொந்த மாவட்டங்களில் பணி ஒதுக்குவதை எதிர்த்து வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

    July 4, 2025
    மாநிலம்

    பொன்முடி மீதான வழக்குகளை போலீஸ் விசாரிக்க தயங்கினால் சிபிஐ-க்கு மாற்றப்படும்: ஐகோர்ட் எச்சரிக்கை

    July 4, 2025
    மாநிலம்

    அதிமுக உட்கட்சி விவகாரத்தில் விசாரணை விரைவாக நடத்தப்படும்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்

    July 4, 2025
    மாநிலம்

    நீலகிரி அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் போக்சோவில் கைது

    July 4, 2025
    மாநிலம்

    ஓசூர் அருகே சிறுவனை கடத்திக் கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது

    July 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பத்திரப் பதிவுக்கு ஜூலை 7-ல் தேதி கூடுதல் டோக்கன்கள் வழங்கல்!
    • இந்த வைரஸ் ஆப்டிகல் மாயை ஒருவர் திறந்த மனம் கொண்டவரா அல்லது பாதுகாக்கப்பட்டாரா என்பதை வெளிப்படுத்துகிறது-அதை சோதிக்கலாம்! – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • க்யூட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 2,679 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று சாதனை!
    • இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 4 மீனவர்கள் ராமேசுவரம் திரும்பினர்
    • ஒன்று லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றதா என்பதை எவ்வாறு அறிவது: 6 பொதுவான அறிகுறிகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.