Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»“மகாராஷ்டிராவில் மராத்தி தான் பேச வேண்டும், இல்லையெனில்…” – மாநில அமைச்சர் எச்சரிக்கை
    தேசியம்

    “மகாராஷ்டிராவில் மராத்தி தான் பேச வேண்டும், இல்லையெனில்…” – மாநில அமைச்சர் எச்சரிக்கை

    adminBy adminJuly 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “மகாராஷ்டிராவில் மராத்தி தான் பேச வேண்டும், இல்லையெனில்…” – மாநில அமைச்சர் எச்சரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மும்பை: “மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தி பேசுவது கட்டாயம். மராத்தி மொழியை அவமதித்தால் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அம்மாநில அமைச்சர் யோகேஷ் கதம் எச்சரித்துள்ளார்.

    தானேவின் பயந்தர் பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் இந்தியில் பேச மறுத்து வாக்குவாதம் செய்ததால், அவரை சிலர் தாக்கிய வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் சலசலப்பை உருவாக்கியது. மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவை சேர்ந்த நபர்கள், அவரை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நவ நிர்மான் சேனா கட்சியினர் சமீபத்தில் மகாராஷ்டிராவில் மராத்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பல வகைகளில் முன்னெடுப்புகளை நடத்தி வருகின்றனர்.

    இந்த சர்ச்சை குறித்து பேசிய மகாராஷ்டிர அமைச்சர் யோகேஷ் கதம், “மகாராஷ்டிராவில் உள்ளவர்கள் மராத்தி பேச வேண்டும். உங்களுக்கு மராத்தி தெரியாவிட்டால், என்னால் மராத்தி பேச முடியாது என்ற வகையில் உங்கள் அணுகுமுறை இருக்கக் கூடாது. மகாராஷ்டிராவில் யாராவது மராத்தியை அவமதித்தால், அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும், அந்த கடைக்காரரை அடித்தவர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்திருக்கக் கூடாது. அவர்கள் போலீஸில் புகார் அளித்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்” என்று அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழக்கும் தனிநபரின் குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

    July 4, 2025
    தேசியம்

    காவடி யாத்திரை கடைகள் சர்ச்சை: ‘கோபால்’ பெயரில் வேலை செய்ததாக பணியாளர் தஜும்முல் ஒப்புதல்

    July 4, 2025
    தேசியம்

    இமாச்சலில் கனமழை: உயிரிழப்பு 13 ஆக உயர்வு

    July 4, 2025
    தேசியம்

    நிலச்சரிவால் கேதார்நாத் யாத்திரை நிறுத்தம்

    July 4, 2025
    தேசியம்

    ஜார்க்கண்டில் ரூ.2 லட்சம் கோடி நெடுஞ்சாலை திட்டங்கள்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி

    July 4, 2025
    தேசியம்

    அமர்நாத் யாத்திரை தொடக்கம்

    July 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கோயில் காவலாளி கொல்லப்பட்ட விவகாரம்: திருப்புவனத்தில் மாவட்ட நீதிபதி 2-வது நாளாக விசாரணை
    • ஜூன் மாதத்தில் சிறப்பாக வளர்ச்சி கண்ட சேவைகள் துறை
    • வைட்டமின் டி அளவை உடனடியாக அதிகரிக்க இது மிகவும் பயனுள்ள வழியாகும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழக்கும் தனிநபரின் குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
    • இந்திய அணி 587 ரன் குவித்து அசத்தல்: 3 விக்கெட்களை இழந்து இங்கிலாந்து தடுமாற்றம் – ENG vs IND 2வது டெஸ்ட்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.