Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»20 ஆண்டுகளுக்கு பிறகு தைலாபுரத்துக்கு வந்துள்ளேன்: வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் நெகிழ்ச்சி
    மாநிலம்

    20 ஆண்டுகளுக்கு பிறகு தைலாபுரத்துக்கு வந்துள்ளேன்: வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் நெகிழ்ச்சி

    adminBy adminJuly 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    20 ஆண்டுகளுக்கு பிறகு தைலாபுரத்துக்கு வந்துள்ளேன்: வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் நெகிழ்ச்சி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    விழுப்புரம்: 20 ஆண்டுகளுக்கு பிறகு தைலாபுரத்துக்கு வந்து பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து பேசியதாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராம சுகந்தன் தெரிவித்தார்.

    தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி. முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், வாஜ்பாய் ஆகியோரது அமைச்சரவையில் இடம்பெற்றார். தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்தார். பாமக நிறுவனர் ராமதாஸுடன் நெருக்கமான நட்பை கொண்டிருந்தாலும், இருவக்கும் இடையே அரசியல் ரீதியாக மனகசப்பு இருந்தது. 2002-ல் வாழப்பாடி ராமமூர்த்தி மறைந்த பிறகு, தைலாபுரத்துக்கு வருவதை அவரது குடும்பம் முற்றிலும் நிறுத்திக் கொண்டது.

    இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோருக்கு இடையே ‘அதிகார யுத்தம்’ நடைபெற்று வருகிறது. நீயா, நானா? என பார்த்துவிடுவோம் என அரசியல் களத்தில் கீரியும், பாம்பும் போல, இருவரும் பயணிக்கின்றனர். இதன் எதிரொலியாக, தனது பழைய நட்பு வட்டாரங்களை தைலாபுரம் இல்லத்துக்கு வரவழைத்து ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்த வரிசையில், வாழப்பாடி ராமமூர்த்தி மகனும், தமிழக காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவருமான ராம சுகந்தன் இடம் பிடித்துள்ளார். தைலாபுரத்துக்கு இன்று (ஜுலை 3-ம் தேதி) வருகை தந்தவர், பாமக நிறுவனர் ராமதாஸுடன் கலந்துரையாடினார்.

    பின்னர் அவர் கூறும்போது, “20 ஆண்டுகளுக்கு பிறகு தைலாபுரத்துக்கு வந்துள்ளேன். பாமக நிறுவனர் மற்றும் மூத்த தலைவர் ராமதாஸை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவரது உடல்நிலை மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து கேட்டறிந்தேன். பழைய நினைவுகளை மனதில் கொண்டு என்னிடம் பேசினார். எனது தந்தையாருக்கும், அவருக்கும் இருந்த நட்பை பற்றி பேசினார்.

    அவரது குடும்பத்தினர் குறித்து கேட்டறிந்தேன். தந்தை மகன் ஒன்றிணைவது குறித்து எதுவும் பேசவில்லை. அவர்களுக்கு அறிவுரை சொல்லும் நிலையில நான் இல்லை. இது சாதாரண சந்திப்புதான். அரசியல் தொடர்பாக பேசவில்லை. தைலாபுரத்துக்கு அடிக்கடி வந்து செல்ல வேண்டும் என ராமதாஸ் அழைப்பு விடுத்தார். அவருக்கு நன்றி” என்றார்.

    முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க, அக்கட்சியில் இருந்து பிரிந்து சென்று தமிழக வாழ்வுரிமை கட்சி தொடங்கிய வேல்முருகனின் அண்ணன் திருமால்வளவன், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை, ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்டோர் தைலாபுரத்துக்கு வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திருவள்ளூரில் கர்ப்பிணி உள்ளிட்ட 3 பெண்களை காவலர் தாக்கிய விவகாரம்: மனித உரிமை ஆணையம் விசாரணை

    July 4, 2025
    மாநிலம்

    கோயில் காவலாளி கொல்லப்பட்ட விவகாரம்: திருப்புவனத்தில் மாவட்ட நீதிபதி 2-வது நாளாக விசாரணை

    July 4, 2025
    மாநிலம்

    ‘அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவார்!’ – அமித் ஷா இப்படிச் சொன்னதன் அர்த்தம் என்ன?

    July 4, 2025
    மாநிலம்

    கோயில் ஊழியர் தனிப்படை காவலர்களால் தாக்கப்படுவதை வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு

    July 4, 2025
    மாநிலம்

    மடப்புரம் அஜித்குமார் மீது குற்றம்சாட்டிய நிகிதா குடும்பத்தினர் மீது உதவி எஸ்.பி.யிடம் புகார்

    July 4, 2025
    மாநிலம்

    தமிழரசி எம்எல்ஏவுடன் திலகபாமா வாக்குவாதம்

    July 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திருவள்ளூரில் கர்ப்பிணி உள்ளிட்ட 3 பெண்களை காவலர் தாக்கிய விவகாரம்: மனித உரிமை ஆணையம் விசாரணை
    • சீன பொறியாளர்கள் திரும்ப பெறப்பட்டதால் பாக்ஸ்கானில் ஐ-போன் உற்பத்தி பாதிப்பு
    • படுக்கையறையில் 5 மறைக்கப்பட்ட ஆபத்துகள் (மற்றும் அவர்களைப் பற்றி என்ன செய்ய வேண்டும்)
    • 500% வரி அச்சுறுத்தல் குறித்து அமெரிக்காவிடம் கவலை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
    • கோயில் காவலாளி கொல்லப்பட்ட விவகாரம்: திருப்புவனத்தில் மாவட்ட நீதிபதி 2-வது நாளாக விசாரணை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.