Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»நீட் மறுதேர்வு நடத்தக் கோரிய மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு 
    கல்வி

    நீட் மறுதேர்வு நடத்தக் கோரிய மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு 

    adminBy adminJuly 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நீட் மறுதேர்வு நடத்தக் கோரிய மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு 
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: நீட் தேர்வின்போது மின் தடையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, மறு தேர்வு நடத்த கோரிய மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த மே 4-ம் தேதி நடத்தப்பட்டது. சென்னையில் அன்றைய தினம் பெய்த கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தங்களால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை என்பதால் மறுதேர்வு நடத்த உத்தரவிடக் கோரி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்கள் உள்ளிட்ட 16 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதால் மறு தேர்வு நடத்த முடியாது என தேசிய தேர்வு முகமை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து, வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நாடு முழுவதும் 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள நிலையில் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் அது பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி வழக்குகளை தள்ளுபடி செய்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து மாணவர்கள் மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த மேல் முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் ஜெ.நிஷா பானு மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வு விசாரித்தது.

    தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “வழக்கு தொடர்ந்த மாணவர்களில் பெரும்பாலானோர் மொத்தம் 180 கேள்விகளுக்கு 100 கேள்விகளுக்கு விடை அளித்துள்ளனர். ஒரு மாணவர் 179 கேள்விகளுக்கு விடையளித்துள்ளார். அதனால், மின்தடையால் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.” என தெரிவித்தார்.

    இதையடுத்து, மறு தேர்வு நடத்தக்கோரிய மேல் முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்த நீதிபதிகள், இன்று தீர்ப்பளித்தனர்.

    நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக நிரூபிக்காத வரை, மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது எனவும், மறு தேர்வு நடத்த உத்தரவிட்டால் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால், வழக்கை ஏற்க முடியாது.” எனக் கூறி, மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    வாசிப்பு இயக்க புத்தகங்களில் மாணவர் படைப்புகள்: விண்ணப்பிக்க ஜூலை 16-ம் தேதி கடைசி நாள்

    July 4, 2025
    கல்வி

    அரசுப் பள்ளிகளில் பணிநிரவல் கலந்தாய்வு: ஆசிரியர்களுக்கு கட்டாய மாறுதல் வழங்க தடை!

    July 3, 2025
    கல்வி

    பள்ளிக்கல்வித் துறையில் அதிகரிக்கும் காலிப் பணியிடங்கள்: பதவி உயர்வு பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தல்

    July 3, 2025
    கல்வி

    ஏஐ, டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட பாடங்களில் பள்ளி மாணவர்களுக்காக 10 ஆன்லைன் படிப்புகள்: சென்னை ஐஐடி அறிமுகம்

    July 3, 2025
    கல்வி

    மத்திய பல்கலை. சேர்க்கைக்கான க்யூட் நுழைவு தேர்வு முடிவு நாளை வெளியீடு

    July 3, 2025
    கல்வி

    ஏப்ரல், ஜூன் மாத ஊதியம் வழங்காததால் 7,360 கவுரவ விரிவுரையாளர்கள் தவிப்பு

    July 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கோவையில் 7-ம் தேதி சுற்றுப்பயணம் தொடங்கும் இபிஎஸ்: பாஜக தலைவர்கள் பங்கேற்க அதிமுக அழைப்பு
    • உடலின் ஆரோக்கியத்தைப் பற்றி எங்கள் நகங்கள் கொடுக்கும் 10 மறைக்கப்பட்ட எச்சரிக்கைகள் – இந்தியாவின் நேரங்கள்
    • அஜித்குமாரை சித்ரவதை செய்ய உத்தரவிட்ட அதிகாரி யார்? – பாஜக, பாமக கேள்வி
    • ரூ.112 கோடியில் நலவாழ்வு மையம், ஆரம்ப சுகாதார நிலையங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
    • செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிய அனுமதி குறித்து ஒரு வாரத்தில் முடிவு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.