Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»திடீர் மரணங்களுக்கு கரோனா தடுப்பூசி காரணம் அல்ல: ஐசிஎம்ஆர், என்சிடிசி ஆய்வில் தகவல்
    தேசியம்

    திடீர் மரணங்களுக்கு கரோனா தடுப்பூசி காரணம் அல்ல: ஐசிஎம்ஆர், என்சிடிசி ஆய்வில் தகவல்

    adminBy adminJuly 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திடீர் மரணங்களுக்கு கரோனா தடுப்பூசி காரணம் அல்ல: ஐசிஎம்ஆர், என்சிடிசி ஆய்வில் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: திடீர் மரணங்களுக்கு கரோனா தடுப்பூசியுடன் நேரடி தொடர்பு உள்ளதற்கான எந்த ஆதாரமும் இல்லை என மருத்துவ ஆராய்ச்சி இந்திய கவுன்சில் (ஐசிஎம்ஆர்), நோய் கட்டுப்பாட்டு தேசிய மையம் (என்சிடிசி) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்து.

    கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2023-ம் ஆண்டு மார்ச் வரை நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட நபர்களில் சிலர் திடீர் மரணங்களை சந்தித்தனர். இதற்கு இவர்கள் செலுத்திக்கொண்ட கரோனா தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என வதந்தி பரவியது.

    இதையடுத்து ஐசிஎம்ஆர் தொற்று நோயியல் மையம் மற்றும் என்சிடிசி ஆகியவை நாடு முழுவதும் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 47 மருத்துவமனைகளில் கடந்த 2023-ம் ஆண்டு மே மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு ஆய்வுகளை நடத்தியது. இதில் கரோனா தடுப்பூசி, திடீர் மரணங்களை அதிகரிக்கவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.

    இளைஞர்கள் இடையே விவரிக்கமுடியாத திடீர் மரணங்களுக்கான ஆய்வில் புது டெல்லி எய்ம்ஸ் மருத்துமனையும் இறங்கியது. இதில் இளைஞர்களின் திடீர் மரணத்துக்கு மாரடைப்பு காரணமாக இருந்தது தெரியவந்தது. பலரது மரணங்களுக்கு மரபியல் மாற்றம் காரணமாக இருக்கலாம் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற மரணங்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் கண்டறியப்படவில்லை என முதல்கட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. ஆய்வு முடிந்த பின்பே இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.

    இந்த இரண்டு ஆய்வுகளும் இளைஞர்களிடையே ஏற்பட்ட திடீர் மரணங்களுக்கான தெளிவான புரிதலை வழங்கியுள்ளது. மேலும், கரோனா தடுப்பூசி உயிரிழப்பை அதிகரிக்கவில்லை என்பது உறுதி செய்துள்ளது. ஆரோக்கிய பிரச்சினைகள், மரபியல் நோய்கள் மற்றும் அபாயகரமான வாழ்க்கையை முறையை தேர்வு செய்தது திடீர் மரணங்களுக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மரணங்களுடன் கரோனா ஊசியை தொடர்பு படுத்துவது, ஆதாரம் இன்றி மக்களை தவறாக வழிநடத்துவதற்கு எதிராக அறிவியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தவறான தகவல்களை தெரிவிப்பது, மக்கள் தடுப்பூசி போட தயங்குவதற்கு வழிவகுக்கும் எனவும், பொது சுகாதார முயற்சிகளுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதை யடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    இந்த விவகாரம் தொடர்பாக பல தேசிய முகமைகள் விசாரணையில் ஈடுபட்டன. இறுதியில் நாட்டில் பயன்படுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பக்க விளைவுகள் மிகவும் அரிதானவை. திடீர் மாரடைப்பு மரணங்கள் மரபியல், வாழ்கைமுறை, ஏற்கெனவே இருந்த உடல்நல பாதிப்புகள் மற்றும் கரோனா பாதிப்புக்கு பிந்தைய சிக்கல்கள் ஆகியவை காரணமாக இருக்கலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    “மகாராஷ்டிராவில் மராத்தி தான் பேச வேண்டும், இல்லையெனில்…” – மாநில அமைச்சர் எச்சரிக்கை

    July 3, 2025
    தேசியம்

    இமாச்சலப் பிரதேசத்தில் கனமழைக்கு இதுவரை 63 பேர் உயிரிழப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்

    July 3, 2025
    தேசியம்

    விவசாயிகள் கடனில் மூழ்குகிறார்கள்; அரசு அலட்சியமாக இருக்கிறது: ராகுல் காந்தி

    July 3, 2025
    தேசியம்

    தலாய் லாமா தவிர வேறு யாரும் அடுத்த புத்த மதத் தலைவரை தீர்மானிக்க முடியாது: சீனாவுக்கு இந்தியா பதிலடி

    July 3, 2025
    தேசியம்

    பிஹார் மாநிலத்தில் இளைஞர்களுக்கு உதவித் தொகையுடன் தொழிற்பயிற்சி

    July 3, 2025
    தேசியம்

    இந்தியா – அமெரிக்கா இடையே கையெழுத்தாகிறது 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம்

    July 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சென்னையில் வீடு வீடாகச் சென்று முதல்வர் ஸ்டாலின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரம்
    • இஸ்ரோவின் சம்வாட் திட்ட தொடர்பு: சுபன்ஷு சுக்லா மாணவர்களுடன் பேசுகிறார்; விண்வெளியில் வாழ்க்கை பற்றி பேசுகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு
    • சிறந்த செரிமானம், சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் அதிக ஆற்றலுக்காக 3 உணவுகளை சத்குரு பரிந்துரைக்கிறார்
    • இங்கிலாந்துக்கு எதிராக இரட்டை சதம் விளாசி ஷுப்மன் கில் சாதனை!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.