Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு திருப்புவனத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்
    மாநிலம்

    அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு திருப்புவனத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்

    adminBy adminJuly 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு திருப்புவனத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு திருப்புவனம் சந்தைபேட்டை அருகே அதிமுக சார்பில் இன்று (ஜூலை 2) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த விவகாரத்தில், “யார் தனிப்படை விசாரணைக்கு உத்தரவிட்டது?” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார்.

    அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் எம்எல்ஏ தலைமை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், காவலாளி அஜித்குமாரின் மரணத்துக்கு நீதி கேட்டு, தமிழக அரசு காவல் துறையைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியது: “திமுக பிரமுகர் காரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை ஏற்றிச் செல்ல யார் அதிகாரம் கொடுத்தது?

    இதை கண்டித்து அன்றைய தினம் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அஜித்குமாரின் தாய் நீதி கேட்கிறார். நீதி கேட்பது தேசக் குற்றமா? மாவட்டக் கண்காணிப்பாளர் ஏன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்? உண்மை நிலவரம் முதல்வருக்கு தெரிந்துவிட்டது. அதனால் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். தனிப்படைக்கு யார் உத்தரவிட்டது? யார் அழுத்தம் கொடுத்தது? காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், அதுகுறித்து விசாரணை அதிகாரி விசாரிக்க வேண்டும்.

    இதேபோல் காவல் நிலையங்களுக்கு வரும் அனைத்து புகார்களையும், ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறையின் தனிப்படை, சிறப்பு படை விசாரிக்குமா? சாத்தான்குளம் சம்பவம் நடந்தபோது, அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். முதல்வர்தான் பொறுப்பு என்று சொன்னது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின். அவர் கூறியபடியே இச்சம்பவத்துக்கும் முதல்வர் பொறுப்பேற்க வேண்டும். அதைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    இந்த விவகாரத்தில் தொடர்ந்து நீதி கேட்டு அறவழி போராட்டத்தையும், சட்டப் போராட்டத்தையும் அதிமுக நடத்தும். விளம்பரம் தேடுவது அதிமுகவின் வேலையில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தேவையான உதவிகளை அதிமுக செய்யும்,” என்று அவர் கூறினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன்செல்லப்பா எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் உமாதேவன், குணசேகரன், நாகராஜன், பாஜக மாவட்டத் தலைவர் பாண்டித்துரை, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘அஜித்குமார் கொலை வழக்கில் தமிழக அரசு நடவடிக்கை சரியில்லை’ – ஜான்பாண்டியன்

    July 3, 2025
    மாநிலம்

    மணல் கடத்தலை படம் பிடிக்கச் சென்ற செய்தியாளர் மீது தாக்குதல்: தமிழக பாஜக கண்டனம்

    July 3, 2025
    மாநிலம்

    பாமகவிலிருந்து எம்எல்ஏ அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை: ராமதாஸ் உறுதி

    July 3, 2025
    மாநிலம்

    அஜித்குமாரை சித்ரவதை செய்ய ஆணையிட்ட காவல்துறை உயர் அதிகாரி யார்? – அன்புமணி கேள்வி

    July 3, 2025
    மாநிலம்

    ‘ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு’ – அஜித்குமார் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்த நபர் டிஜிபிக்கு கோரிக்கை

    July 3, 2025
    மாநிலம்

    டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீர் சென்றடைய நடவடிக்கை தேவை: இபிஎஸ்

    July 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘மார்கோ 2’ உருவாகும்: தயாரிப்பு நிறுவனம் உறுதி
    • ‘அஜித்குமார் கொலை வழக்கில் தமிழக அரசு நடவடிக்கை சரியில்லை’ – ஜான்பாண்டியன்
    • வாழ்நாளில் ஒரு முறை பூக்கும் 10 அரிய பூக்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தலாய் லாமா தவிர வேறு யாரும் அடுத்த புத்த மதத் தலைவரை தீர்மானிக்க முடியாது: சீனாவுக்கு இந்தியா பதிலடி
    • ஜெய்ஸ்வால், கருண் நாயர் எல்.பி. அவுட் கொடுத்திருந்தால் மேட்சே வேறாகியிருக்கும்: கிறிஸ் வோக்ஸ் ஆதங்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.